Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்கள் வீட்டில் கெட்ட சக்திகள் நடமாட்டமா? செய்வினை இருப்பதை கண்டறிய ஒரு லெமன் போதுமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: செய்வினை வைத்துவிட்டார்கள் என்பதை வீட்டிலேயே கண்டுபிடிக்கலாம். அது போல் அந்த செய்வினையிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

செய்வினை, பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்டவை பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. இவற்றின் மூலம் துஷ்ட சக்திகளை பிறர் மீது ஏவிவிட்டு அதனால் குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு தொல்லைகள் கொடுப்பதுதான் இந்த தவறான நடைமுறை.

black magic


இதில் சிலருக்கு நம்பிக்கை இருக்கும், சிலருக்கு இருக்காது! இவை எல்லாம் எதிரிகளை குறுக்கு வழியில் தோல்வியடையச் செய்ய நினைப்பதாகும்.

அந்த வகையில் செய்வினைகளால் நமக்கு துன்பங்கள் ஏற்படுகிறதா என்பதை வீட்டிலேயே கண்டுபிடித்துவிடலாம். ஒரு வேளை செய்வினை செய்திருப்பது உறுதி என்றால் அதை எளிய பூஜைகள் மூலம் அவற்றிலிருந்து விடபடலாம்.

செய்வினை பாதிப்பு இருந்தால் செய்யும் தொழில், வியாபாரம் ஆகியவற்றில் காரணமே இல்லாமல் திடீர் சரிவு ஏற்படும். உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்படும். வீட்டில் ஏதாவது ஒரு மருத்துவச் செலவு வந்துக் கொண்டே இருக்கும். மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வீட்டில் பெரியவர்கள் நோய் வாய்ப்படுவர்.

அது போல் வீட்டில் வைத்திருக்கும் செடிகள் கருகிவிடும். விளக்கு அவ்வப்போது அணையும். வீட்டில் ஒரு பய உணர்வு இருக்கும். நாய் வைத்திருந்தால் எப்போதும் குரைத்துக் கொண்டே இருக்கும். பறவைகள் இறக்கும். மீன்களும் உயிரிழப்புக்குள்ளாகும்.

இப்படியெல்லாம் ஏற்பட்டால் நீங்கள் செய்வினை பாதிப்பால் அவதியடைந்துள்ளீர்கள் என அர்த்தம். இதற்கு என்ன செய்யலாம் என்றால், ஒரு மண் பானையில் துளசி இலைகளை போட்டு வையுங்கள். உங்கள் வீட்டில் தீய சக்திகள் இருந்தால் உடனடியாக அந்த இலை வாடிவிடும்.

ஒரு வேளை இலைகள் வாடவில்லை என்றால் உங்கள் வீட்டில் தீயசக்தி ஏதும் இல்லை என்று அர்த்தம். ஒரு எலுமிச்சை மாலையை உங்கள் கைகளால் கோர்த்து வீட்டருகே இருக்கும் காளி கோயிலில் சாத்தி விட்டு அதிலிருந்து ஒரு எலுமிச்சையை வாங்கி வந்து வீட்டில் எங்காவது வைங்கள். சில நாட்கள் கழித்து பார்க்கும் போது அந்த பழம் அழுகி இருந்தால் உங்கள் வீட்டில் தீயசக்தி இருக்கிறது என அர்த்தம்.

ஒரு வேளை பழம் காய்ந்திருந்தால் வீட்டில் தீயசக்தி இல்லை என்று அர்த்தம். உங்களுக்கு செய்வினை செய்திருப்பதிலிருந்து விலக எலுமிச்சை பழத்தை எடுத்து உங்களின் குலதெய்வத்தை நினைத்து உங்கள் தலையை சுற்றி பின்புறமாக வீசிவிட வேண்டும். பிறகு குளத்தில் நீராடுங்கள்.

தேய்பிறை செவ்வாய்க்கிழமையில் பகல் 12 மணி முதல் 1.30 மணிக்குள் காளி தேவியை நினைத்து பூஜை செய்யலாம். செய்வினையை நீக்கும் பரிகாரங்களை செய்யும் போது சம்பந்தப்பட்டவரை தவிர வேறு யாரும் இருத்தல் கூடாது. அதிலும் குழந்தைகள், கன்னி பெண்கள், இருக்கவே கூடாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+