திருப்பதி ஏழுமலையான் திருக்கல்யாண வைபவத்தை கண் குளிர பார்க்க வேண்டுமா? காலை 10 மணிக்கு ரெடியாகுங்க!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானின் கல்யாண உற்சவம் டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று வெளியிடுகிறது. இந்த டிக்கெட்டின் விலை ரூ 1000. ஒரு டிக்கெட்டில் இருவர் கலந்து கொள்ளலாம்.
சுவாமி திருக்கல்யாண வைபவம் நடக்கும். இதில் தம்பதியாக கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். அடுத்த ஆண்டு 2025, ஜனவரி மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட் முன்பதிவு கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. பிற தரிசன டிக்கெட்டுகளும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகளை பெற அக்டோபர் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபர் 21 ஆம் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யலாம்.

இவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்களின் பெயர்கள் நேற்று ஆன்லைனில் வெளியிடப்பட்டது. அவர்கள் 23 ஆம் தேதி பகல் 12 மணிக்குள் பணம் செலுத்தினால் போதும். அவர்களுக்கான ஆர்ஜித சேவை உறுதியாகும். அது போல் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகளும் வெளியாகிறது.
அது போல் மெய் நிகர் சேவை டிக்கெட்டுகள் 22 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் ஆன்லைனில் வெளியாகிறது. அங்கப்பிரதட்சிண டோக்கன்கள் வரும் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். அது போல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் ஆன்லைன் ஒதுக்கீடு 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும். அது போல் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், தீராத நோய் கொண்டவர்கள் ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைனில் அதே நாளில் மாலை 3 மணிக்கு வெளியாகும்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக ஏழுமலையானை தரிசிக்க ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும். அது போல் தரிசன டிக்கெட் புக் செய்வதற்களுக்கான அறைகள் ஒதுக்கீடு மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். செல்போனில் TTD எனும் செயலி மூலமும் புக் செய்யலாம்.












Click it and Unblock the Notifications