கனவில் வரும் வானவில்... யோகமா? சோகமா?.. முழு நிலவு கனவு வருதா பலனை செக் பண்ணுங்க!
சென்னை: கனவில் வானவில் வந்தால் நம்முடைய மனம் மகிழ்ச்சியாக இருக்கும் காரணம் அது தரப்போகும் நல்ல பலன்கள்தான். முழு நிலவு சிலருக்கு கனவில் வரும். நீல வானமும் மேகக்கூட்டங்களும் கூட கனவில் வரும். இப்படி கனவில் வரும் சம்பவங்களினால் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
நம்முடைய ஆசைதான் கனவாக வெளிப்படும் என்று சொல்வார்கள். ஆழ்மனதில் உள்ள எண்ணங்களே கனவுகளாக வெளிப்படும் என்று அறிவியலாளர்கள் கூறுவார்கள். ஆனால் நாம் காணும் கனவுகளுக்கான அர்த்தங்கள் கனவு சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆற்றுநீர், கடல் அலை போன்றவற்றை நீங்கள் கைகளால் பிடிப்பது போல கனவு வந்தால் உங்களுக்கு செல்வம் சேர போகிறது என்று அர்த்தம். குளத்தில் அதிகமான தண்ணீர் இருப்பது போல கனவு வந்தால், பெரிய இடத்தில் இருந்து ஆதரவு கிடைக்கும் என்று அர்த்தம். வறண்ட குளத்தை கனவில் கண்டால், புதிது புதிதாக செலவுகள் ஏற்படும் என்று அர்த்தம்.
கலங்கல் இல்லாத சுத்தமான நீர் ஊற்றைக் கனவில் கண்டால், வாழ்க்கையில் எவ்வித துன்பமும் ஏற்படாது. கலங்கிய சுத்தமற்ற நீர் ஊற்றை கனவில் கண்டால் கஷ்டங்கள் ஏற்படும் என்று குறிக்கும். கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதுபோல கனவு வந்தால், மனதில் நினைத்த செயல்கள் நினைத்தபடியே முடியும் என்று அர்த்தம்.

தண்ணீரில் தத்தளிப்பது போல கனவு வந்தால், புதிதாக உருவான நட்பால் கஷ்டங்கள் ஏற்படும் என்று அர்த்தம். தண்ணீரில் மூழ்குவது போல கனவு வந்தால், உங்களின் குழந்தைகளால் சந்தோஷம் ஏற்பட போகிறது என்று அர்த்தம். மரங்களுக்கும், செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சுவது போல கனவு கண்டால் உங்களுக்கு நன்மைகள் செய்ய பல பேர் வருவார்கள் என்று அர்த்தம்.
நிலவை கனவில் கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும் என்று அர்த்தம். நிலவை மேக கூட்டம் மூடுவது போல கனவு கண்டால் புதிய பிரச்சனைகள் வரப்போவதை உணர்த்துகிறது. வானில் நிலவு பிரகாசமாக இருப்பது போல கனவு கண்டால் செய்யும் தொழிலில் லாபம் அதிகம் உண்டாகும் என்று அர்த்தம். நீல நிற வானம் கனவில் வந்தால் நல்ல பலன்கள் ஏற்படும் என்று அர்த்தம். செக்கச் சிவந்த வானத்தை கனவில் கண்டால் நல்லதல்ல.

மேகக்கூட்டம் கனவில் வந்தால் நீங்கள் சோதனையான காலகட்டத்தில் உள்ளீர்கள் என்று அர்த்தம். வானவில் கனவில் வந்தால் வாழ்க்கையில் நல்ல பலன்கள் ஏற்படும் என்று அர்த்தம். வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும் என்று அர்த்தம்.
இடியுடன் மழை பெய்வதைப் போல கனவு கண்டால், சொந்தங்கள் விரோதிகள் ஆவார்கள்.
நட்சத்திரங்கள் வானில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடம் நோக்கி இடம்பெயர்ந்து செல்வது போல கனவு கண்டால் ஏதோ பிரச்சனைகள் வரப்போவதை உணர்த்துகிறது. நட்சத்திர கூட்டத்தை கனவில் கண்டால் பதவி உயர்வு உண்டாகும் என்று அர்த்தம். வானில் நட்சத்திரத்தை கனவில் கண்டால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று அர்த்தம். நல்ல கனவுகள் கண்டால் கண் விழித்து எழுந்து விடுவது நல்லது. அதே நேரத்தில் தீய பலன்களை தரக்கூடிய கனவை கண்டால் கண்களை திறந்து இறைவனை வணங்கி விட்டு மீண்டும் உறங்கி விடுவது நல்லது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications