தேனும், தினை மாவும் ரெடியா? நாளை சஷ்டி விரதம் 5ம் நாள்! வேண்டுதலை தரும் கந்தசஷ்டியின் "வேல்" விசேஷம்
சென்னை: கந்தசஷ்டி விரதத்தின் 5வது நாளான நாளைய தினம், முருகனை எப்படி வணங்க வேண்டும் தெரியுமா? 5ம் நாள் விரதத்தின் விசேஷ சிறப்புகள் என்னென்ன? இந்த பூஜையை செய்வதன் மூலம் என்னென்ன பலன்களை பெற முடியும்? சுருக்கமாக பார்க்கலாம்.
கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் குளிர்ந்த தண்ணீரில் தினமும் 2 நேரம் குளித்து, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூ வைத்து, தீபம் ஏற்றி, கற்பூரம் காட்ட வேண்டும். சஷ்டியில் 7 நாட்களும் அருகிலுள்ள முருகப்பெருமான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தை கேட்பதும் அவசியம்.

உபவாசம்: 7 நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள், சூரசம்ஹாரம் அன்று மட்டும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இரவு தரையில் கம்பளம் விரித்து தான் தூங்க வேண்டும். சஷ்டி விரதம் இருப்பவர்கள் தினமும் கந்தசஷ்டி கவசம் படிக்கலாம் அல்லது ஓம் சரவண பவ மந்திரத்தையும், முருகா என்ற திருநாமத்தையும் நாள்தோறும் உச்சரித்தபடியே இருக்க வேண்டும். ஆனால், சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் எக்காரணம் கொண்டும் அசைவ உணவு சாப்பிடக்கூடாது... யாரையும் திட்டவோ, கோபமாக பேசவோ கூடாது.
அந்தவகையில், கந்தசஷ்டி விரதத்தின் 4வது நாள் இன்று நவம்பர் 5ம் தேதி போற்றப்பட்டு வருகிறது. இன்றைய நாளில் ஷட்கோண தீபம் ஏற்றி வழிபடுபவர்கள் தீபங்களை ஏற்றி வழிபட்டு வருகின்றனர்..
தீப வழிபாடு: விரதத்தில் ஈடுபடுவோர், ஷட்கோண கோலத்தின் மத்தியில் "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தை எழுதி, அதைச்சுற்றிலும் உள்ள 6 நட்சத்திரங்களில் "சரவண பவ" என்று எழுதி, முதல் நாளில் "ச" என்ற எழுத்தின் மீதும், 2வது நாளில் "ர" என்ற எழுத்தின் மீதும் தீபம் ஏற்றிய நிலையில், நேற்று 3வது நாளில் "வ" என்ற எழுத்தையும், இன்று 4வது நாளில் சரவணபவ எழுத்துக்களில் "ண" என்ற எழுத்தின் மீது தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறார்கள்.
இந்த கந்த சஷ்டி விழாவின் 5ம் நாள் நாளை 6ம்தேதி வருகிறது.. சூரபத்மனை வதம் செய்வதற்காக முருகப் பெருமான், அன்னை பராசக்தியிடம் இருந்து சக்தியை பெறுவதே இந்த 5ம் நாளின் சிறப்பாகும்.
வாழைப்பழம்: நாளை 5வது நாளில், ஷட்கோண கோலத்தில் "ப" என்ற எழுத்தில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்... நாளையும் காலை, மாலை இரு வேளையும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். என்னென்ன பழங்கள் கிடைக்கிறதோ அவைகளை நைவேத்தியமாக வைத்து வழிபடலாம்.. பழங்களே வாங்க முடியாமல் போனாலும், 2 வாழைப் பழங்களை வைத்து வழிபடலாம்.
நாளை வேலுக்குரிய தினம்.. எனவே, வேல் வழிபாடு செய்வது அவசியம்.. பூஜையின்போது, வேல் இருந்தால், தண்ணீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தத்தில் அபிஷேகம் செய்யலாம்.. அல்லது முருகனின் படத்தில் இருக்கும் வேலுக்கு சந்தனம், குங்குமம் வைக்கலாம். வேல் விருத்தம் படிக்கலாம்.
வழிபாடுகள்: தேன், திணை மாவு, பழங்கள் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.. பிறகு முருகன் கோவிலுக்கு கொண்டு சென்று பிரசாதமாக வழங்கலாம். இந்த வேல் வழிபாடு செய்யும்போது, பகைமையை வெல்ல முடியும்.. உங்களுக்கான தடைகளையும் உடைதெறிய முடியும்.. இந்த நாளில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் வழிபட்டுவிட்டு, மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் தானத்தை செய்து விட வேண்டும் என்கிறார்கள்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications