மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் எப்போது? விழாக் கோலத்தில் கோயில் நகரம்!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் எப்போது என்பது குறித்து இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த குடமுழுக்கு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மதுரையே விழா கோலம் எடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த கோயிலுக்குள் செல்ல செல்போன் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்து அறநிலையத் துறையின் கீழ் இந்த கோயில் செயல்பட்டு வருகிறது. இங்கு அவ்வப்போது திருவிழாக்கள் நடைபெறும். அந்த வகையில் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.
கடைசியாக 2009 ஆம் ஆண்டு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகமவிதிகளாகும். அதன் படி 2021 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தியிருக்க வேண்டும்.
ஆனால் 2018ஆம் ஆண்டு கிழக்கு கோபுரத்தில் உள்ள வீரவசந்தராயர் மண்டபம் முழுவதும் தீக்கிரையானது. இதனால் இந்த பகுதி முழுவதும் தீயால் கருதியிருந்தது. இதை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்த பணிகள் 2021 ஆம் ஆண்டுக்குள் நிறைவு பெறவில்லை.
இந்த நிலையில் சட்டசபையில் 2 ஆண்டுகளுக்குள் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் 2024 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். அதன்படி வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறநிலையத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அண்மையில்தான் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட கோயில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. இதனால் மதுரையே கோலாகலமாகும் என்பதில் சந்தேகமே இல்லை.












Click it and Unblock the Notifications