மணி பிளான்ட்.. கற்றாழை தரும் பாசிட்டிவ் எனர்ஜி.. வாஸ்து சொல்வதென்ன? இந்த செடியை வீட்டில் வைக்காதீங்க
சென்னை: எத்தனையோ செடிகள் அழகுக்காக வீட்டில் வைக்கப்பட்டாலும், செல்வம் பெருகி, பணம் தங்கியிருக்க வேண்டுமானால், இதற்கு வாஸ்து செடிகள் கை கொடுக்கின்றன.. அந்தவகையில், மணி பிளான்ட், கற்றாழை செடிகளை எங்கே வைக்கலாம்? இந்த செடிகளில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்ன? எந்த செடிகளை வீட்டில் வளர்க்கக்கூடாது?
மணி பிளான்ட்களை பொறுத்தவரை, சுத்தமான காற்றை தரக்கூடியவை.. வாஸ்துவில், மணி பிளாண்ட் மங்களகரமான செடியாக கருதப்படுவதால், இதை வீட்டில் வைத்து வளர்க்கும்போது, பணக்கஷ்டம் தீரும் என்பார்கள்.

அந்தவகையில், வீட்டிற்குள்ளும், வீட்டிற்கு வெளியிலும் மணிபிளான்ட் வைக்கலாம். கிச்சனிலும் வைக்கலாம்.. பூஜையில் வைத்தும் வளர்க்கலாம்... இந்த செடியை சுத்தமாக பராமரிப்பதுதான், வீட்டின் நிதி நிலைமையை தீர்மானிக்கும். நேர்மறை ஆற்றல் கிடைக்க வேண்டுமானால், தென்கிழக்கு திசையில், மணி பிளான்ட் செடியை வைத்து வளர்க்கலாம்.
வடகிழக்கு மூலை: ஆனால், எக்காரணம் கொண்டும், வடகிழக்கு மூலையில் இந்த செடியை நடக்கூடாது. செடியை தரையில் படாமல் நூல் அல்லது குச்சியின் உதவியுடன் மேல்நோக்கி ஏற்றி வைக்க வேண்டும். வெள்ளியன்று, இந்த செடியை வெட்டக்கூடாது, யாருக்கும் தானமாக, அன்பளிப்பாக தரக்கூடாது. செடி காய்ந்து விடக்கூடாது. சூரிய ஒளி நேரடியாகவும் படக்கூடாது. பழுத்த இலைகள், செடியில் இருந்தால் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.
கற்றாழை செடிகளுக்கு தீய சக்திகளை தடுக்கும் சக்தி உண்டு என்பார்கள்.. அதனால்தான் வீட்டு வாசலிலேயே இந்த கற்றாழைகள் வைக்கப்படுகின்றன. இந்த செடி இருக்கும் இடங்களில் லட்சுமி தேவியின் வாசம் இருப்பதாக சொல்வார்கள்.. ஆக்ஸிஜனை அதிகளவில் பரப்பக்கூடிய இந்த கற்றாழை, வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரக்கூடியது.
கற்றாழை: தடைகளை நீக்கும் திறன் கொண்ட கற்றாழை செடியை வடமேற்கு திசையில் நடக்கூடாது.. அப்படி செய்தால், மோசமான பலன்கள் கிடைத்துவிடும். எப்போதுமே வீட்டின் கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் கற்றாழை செடியை நடலாம்.. முன்னேற்றம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பெற வேண்டுமானால் மேற்கு திசையிலும் கற்றாழை செடியை நடலாம். இதில், தென்கிழக்கு மூலையில் கற்றாழை செடியை வைத்தால் வருமானம் அதிகரிக்கும். மேற்கு திசையில் வைத்தால் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்..
வீடுகளில், சிலவகையான மரங்கள், செடிகளை வளர்ப்பது குடும்பத்திற்கு கெடுதல், சிக்கலை தரும் என்பார்கள்.. அந்தவகையில், ரோஜா தவிர வேறு எந்தவிதமான முட்செடிகளை வளர்க்கக்கூடாது.. அதேபோல, சிவப்பு நிற மலர்களைக் கொண்ட செடிகள், போன்சாய் மரங்களையும் வீட்டிற்கு உள்ளே வைக்கக் கூடாது.
நெகட்டிவ் எனர்ஜி: புளிய மரம் மற்றும் மருதாணி மரங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடாது. வேறு எந்தவகையான காய்ந்து போன செடிகளோ, பட்டுப்போன செடிகளோ, இறந்த செடிகளோ வீட்டில் இருக்கக்கூடாது. பருத்தி செடிகளையும் வளர்க்கக்கூடாது.. பனை மரம், கருவேல மரங்கள் உட்பட காய்ந்த மரங்கள் எதுவுமே வீட்டில் இருக்கக்ககூடாது. அதேபோல, வீட்டின் கிழக்கு அல்லது வட கிழக்கு திசையில் பெரிய மரங்களை வைப்பது நெகடிவ் எனர்ஜியை வீட்டில் அதிகரிக்க செய்யும்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications