மணி பிளான்ட்.. கற்றாழை தரும் பாசிட்டிவ் எனர்ஜி.. வாஸ்து சொல்வதென்ன? இந்த செடியை வீட்டில் வைக்காதீங்க
சென்னை: எத்தனையோ செடிகள் அழகுக்காக வீட்டில் வைக்கப்பட்டாலும், செல்வம் பெருகி, பணம் தங்கியிருக்க வேண்டுமானால், இதற்கு வாஸ்து செடிகள் கை கொடுக்கின்றன.. அந்தவகையில், மணி பிளான்ட், கற்றாழை செடிகளை எங்கே வைக்கலாம்? இந்த செடிகளில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்ன? எந்த செடிகளை வீட்டில் வளர்க்கக்கூடாது?
மணி பிளான்ட்களை பொறுத்தவரை, சுத்தமான காற்றை தரக்கூடியவை.. வாஸ்துவில், மணி பிளாண்ட் மங்களகரமான செடியாக கருதப்படுவதால், இதை வீட்டில் வைத்து வளர்க்கும்போது, பணக்கஷ்டம் தீரும் என்பார்கள்.

அந்தவகையில், வீட்டிற்குள்ளும், வீட்டிற்கு வெளியிலும் மணிபிளான்ட் வைக்கலாம். கிச்சனிலும் வைக்கலாம்.. பூஜையில் வைத்தும் வளர்க்கலாம்... இந்த செடியை சுத்தமாக பராமரிப்பதுதான், வீட்டின் நிதி நிலைமையை தீர்மானிக்கும். நேர்மறை ஆற்றல் கிடைக்க வேண்டுமானால், தென்கிழக்கு திசையில், மணி பிளான்ட் செடியை வைத்து வளர்க்கலாம்.
வடகிழக்கு மூலை: ஆனால், எக்காரணம் கொண்டும், வடகிழக்கு மூலையில் இந்த செடியை நடக்கூடாது. செடியை தரையில் படாமல் நூல் அல்லது குச்சியின் உதவியுடன் மேல்நோக்கி ஏற்றி வைக்க வேண்டும். வெள்ளியன்று, இந்த செடியை வெட்டக்கூடாது, யாருக்கும் தானமாக, அன்பளிப்பாக தரக்கூடாது. செடி காய்ந்து விடக்கூடாது. சூரிய ஒளி நேரடியாகவும் படக்கூடாது. பழுத்த இலைகள், செடியில் இருந்தால் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.
கற்றாழை செடிகளுக்கு தீய சக்திகளை தடுக்கும் சக்தி உண்டு என்பார்கள்.. அதனால்தான் வீட்டு வாசலிலேயே இந்த கற்றாழைகள் வைக்கப்படுகின்றன. இந்த செடி இருக்கும் இடங்களில் லட்சுமி தேவியின் வாசம் இருப்பதாக சொல்வார்கள்.. ஆக்ஸிஜனை அதிகளவில் பரப்பக்கூடிய இந்த கற்றாழை, வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரக்கூடியது.
கற்றாழை: தடைகளை நீக்கும் திறன் கொண்ட கற்றாழை செடியை வடமேற்கு திசையில் நடக்கூடாது.. அப்படி செய்தால், மோசமான பலன்கள் கிடைத்துவிடும். எப்போதுமே வீட்டின் கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் கற்றாழை செடியை நடலாம்.. முன்னேற்றம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பெற வேண்டுமானால் மேற்கு திசையிலும் கற்றாழை செடியை நடலாம். இதில், தென்கிழக்கு மூலையில் கற்றாழை செடியை வைத்தால் வருமானம் அதிகரிக்கும். மேற்கு திசையில் வைத்தால் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்..
வீடுகளில், சிலவகையான மரங்கள், செடிகளை வளர்ப்பது குடும்பத்திற்கு கெடுதல், சிக்கலை தரும் என்பார்கள்.. அந்தவகையில், ரோஜா தவிர வேறு எந்தவிதமான முட்செடிகளை வளர்க்கக்கூடாது.. அதேபோல, சிவப்பு நிற மலர்களைக் கொண்ட செடிகள், போன்சாய் மரங்களையும் வீட்டிற்கு உள்ளே வைக்கக் கூடாது.
நெகட்டிவ் எனர்ஜி: புளிய மரம் மற்றும் மருதாணி மரங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடாது. வேறு எந்தவகையான காய்ந்து போன செடிகளோ, பட்டுப்போன செடிகளோ, இறந்த செடிகளோ வீட்டில் இருக்கக்கூடாது. பருத்தி செடிகளையும் வளர்க்கக்கூடாது.. பனை மரம், கருவேல மரங்கள் உட்பட காய்ந்த மரங்கள் எதுவுமே வீட்டில் இருக்கக்ககூடாது. அதேபோல, வீட்டின் கிழக்கு அல்லது வட கிழக்கு திசையில் பெரிய மரங்களை வைப்பது நெகடிவ் எனர்ஜியை வீட்டில் அதிகரிக்க செய்யும்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications