சபரிமலையில் மகர ஜோதி.. நாளை முதல் ஸ்பாட் புக்கிங் கிடையாது.. தேவசம்போர்டு அறிவிப்பு
சபரிமலை: மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளையுடன் ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்படுகிறது என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. 14ஆம் தேதி 50,000 பேருக்கும், 15ஆம் தேதி 40,000 பேருக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று சபரிமலையில் நடை திறக்கப்பட்டதில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். இதனால் பம்பை, எரிமேலி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் அடைக்கப்பட்டு மணிநேரம் காத்திருக்கும் சூழலும் உருவாகியுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில் 90,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
மகரஜோதி நெருங்கும் நிலையில் சபரிமலையில் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சபரிமலையில் ஜனவரி 15ஆம் தேதி அதிகாலை மகர சங்கரம பூஜையும் மாலையில் மகர ஜோதி தரிசனமும் நடக்கின்றன.
இதனையொட்டி 13ஆம் தேதி பந்தளத்தில் இருந்து திருவாபரண பவனி புறப்படுகிறது. பந்தளம் மன்னர் குடும்பத்தில் ஜோதி திருநாள் அம்பிகா தம்பிராட்டி சில நாட்களுக்கு முன்பு காலமானார். இதனையடுத்து பந்தளம் வலியா சாஸ்தா கோவில் அடைக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த ஆண்டு திருவாபரண பெட்டி பந்தளம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டு பூஜைகள் நடைபெறாது. தனியாக சுத்தி பூஜை செய்யப்பட்ட இடத்தில் திருவாபரண பெட்டி வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு புறப்படும்.
பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பவனியில் இடம் பெற மாட்டார்கள். திருவாபரண பவனியானது வரும் 15ஆம் தேதியன்று சபரிமலை சன்னிதானத்திற்கு வந்து சேரும். சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயரும் காலமான அதிகாலை 2.40 மணிக்கு மகர சங்கம பூஜை நடைபெறும். மன்னர் குடும்பத்தில் இருந்து நெய் தேங்காய் கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
15ஆம் தேதி திருவாபரண பெட்டி சரங்குத்தி வந்த உடன் தேவசம்போர்டு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு சன்னதிக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இதனையடுத்து ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும். அன்றைய தினம் மாலையில் சபரிமலையில் பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியையும் அந்த நேரத்தில் வானில் ஜொலிக்கும் மகர நட்சத்திரத்தையும் தரிசிக்க பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கூடுவர்.
மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளையுடன் ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்படுகிறது என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. 14ஆம் தேதி 50,000 பேருக்கும், 15ஆம் தேதி 40,000 பேருக்கும் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications