சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு.. மண்டல காலம் நாளை தொடங்குகிறது.. திரண்டு வந்த ஐயப்ப பக்தர்கள்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல காலம் நாளை தொடங்குகிறது.. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இன்று மாலை தான் நடை திறக்கப்படும் என்றாலும், நேற்று முதலே தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சபரிமலைக்கு வரத்தொடங்கிவிட்டனர்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயிலுக்கு மண்டல மகர விளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.. அந்தவகையில், தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்கிறார்கள்.

சபரிமலை: மண்டல மகர விளக்கு பூஜைகள் நடைபெறும் கார்த்திகை, மார்கழி, தை உள்ளிட்ட மாதங்களில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை நோக்கி புனிதப் பயணம் மேற்கொள்வார்கள். சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வரும் டிசம்பர் 26ம் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14ம் தேதியும் நடைபெற உள்ளது.
மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.. பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கான வசதிகள் செய்யும் பணிகள் இறுதி கட்டத்தில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
பூஜைகள்: இன்று மாலை 5 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றிய பிறகு, நாளை முதல் ஒரு வருடகாலத்துக்கு சபரிமலையிலேயே தங்கி பூஜைகள் செய்யும் மேல் சாந்திகள் சபரிமலை -அருண்குமார் நம்பூதிரி, மாளிகைபுறம் - வாசுதேவன் நம்பூதிரி ஆகியோரை அழைத்து சன்னிதானம் முன் கொண்டு வருவார்.
தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு அவர், இவர்களுக்கு அபிஷேகம் நடத்தி முறைப்படியாக பதவி ஏற்க செய்யும் நிகழ்வு நடைபெறும்... இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். வேறு விசேஷ பூஜைகள் கிடையாது.
நெய்யபிஷேகம்: நாளை அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து தந்திரி பிரம்மதத்தன் அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்ததும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும்.
பரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடை திறக்கப்பட்டு, புல்மேடு வனப்பாதையின் தொடக்கப் பகுதியில் நுழைவாயில் அமைத்து பக்தர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.. மேலும் உணவு, தங்குதல் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
வரவேற்பு: மேலும் பக்தர்களை வரவேற்கும் விதமாக காட்டு மரங்களின் இலைகளால் அலங்கரிக்கப்பட்ட வரவேற்பு நுழைவுவாயிலும் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் செய்து கொள்வதற்கான வசதியும், சன்னிதான தகவல்களை தெரிந்து கொள்வதற்கான தகவல் மையமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்கள் வசதிக்காக தமிழக விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 60 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
இன்று மாலை தான் நடை திறக்கப்படும் என்றாலும் நேற்று முதலே தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சபரிமலைக்கு வரத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், இவர்கள் இன்று மதியத்திற்கு பிறகுதான் தான் பம்பையிலிருந்து சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
தரிசனம் நேரம்: இதுகுறித்து தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் சொன்னபோது, "சபரிமலையில் நாளை 16ம் தேதி முதல் பக்தர்கள் 18 மணி நேரம் தரிசனம் செய்யலாம். அதிகாலை 3 மணிக்கு நடை திறந்தால் இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும் . பிற்பகல் 2 மணிநேரம் மட்டுமே நடை மூடப்பட்டிருக்கும். பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் இருந்தால் தரிசன நேரம் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்" என்றார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications