Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூரசம்ஹாரம்.. சிக்கலில் அன்னை பார்வதியிடம் வேல் வாங்கும் சிங்கார வேலர்.. ஆறாக பெருகும் வியர்வை

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: அழகன் முருகனுக்கு வியர்வை வருமா? அதுவும் அன்னை பார்வதியிடம் வேல் வாங்கும் போது வியர்வை முத்து முத்தாக முகத்தில் துளிர்க்கும் அதிசயத்தை பார்த்திருக்கிறீர்களா?

சிக்கல் சென்றால் சிங்காரவேலரின் முகத்தில் வியர்வை பெருகுவதை பார்க்கலாம்.

Sikkal Singaravelar temple Kanda sasti festival: Murugan face sweat devotees chant Arokhara

சிக்கல் சிங்காரவேலர்: சூரனை சம்ஹாரம் செய்ய சிக்கலில் அன்னை பார்வதியிடம் வேல் வாங்கும் வைபவம் இன்று இரவு நடைபெறுகிறது. முருகனின் முகத்தில் வியர்வை துளிர்ப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. தீய சக்திகளை நான் வியர்வை துளிகளைப் போல துடைத்து எறிவேன் எனவே பக்தர்களே தீயவைகளைக் கண்டு அஞ்ச வேண்டாம் என்று உணர்த்தும் வகையிலேயே கந்த சஷ்டியின் ஐந்தாம் நாள் அன்னை பார்வதியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியின் போது சிக்கல் சிங்காரவேலருக்கு வியர்வை ஆறாக பெருகுகிறது.

வேலாயுதம்: தமிழ்கடவுள் முருகப்பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் ஆயுதங்களில் முதன்மை பெற்றது வேலாயுதம். அது சிவபெருமானைப் போலவே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐம்பெரும் செயல்களையும் ஆற்றவல்லது. இந்த வேல் பிறந்த கதையையும் கந்த சஷ்டியின் கதையையும் படித்தாலோ, கேட்டாலோ எண்ணற்ற நன்மைகள் நிகழும்.

கந்த சஷ்டி விழா: நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு நேற்றைய தினம் சிறப்பு அலங்காரத்தில் முருகபெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சக்தி வேல் வாங்கும் சிங்கார வேலர்: கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான வேல் வாங்குதல் நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. பார்வதி தேவியான அன்னை வேல் நெடுங்கன்னியிடம் இருந்து சக்திவேல் வாங்கும் போது சிங்காரவேலருக்கு வியர்வை முகத்தில் துளிர்க்கும். வேறு எங்கும் நடைபெறாத அபூர்வ காட்சி ஆகும். அப்போது பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று முழக்கமிடுவார்கள். நாளைய தினம் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. அன்னை பார்வதியிடம் வாங்கிய வேல் கொண்டு சூரனை சம்ஹாரம் செய்வார் சிங்காரவேலர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+