Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கந்த சஷ்டி 2024.. சூரசம்ஹாரத்தில் 1 நாள் சஷ்டிவிரதம் இருக்கலாமா? இந்த ஒரு விளக்கை ஏற்றினாலே போதுமே

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: சஷ்டி விரதத்தை தொடர்ந்து மேற்கொள்ள முடியாவிட்டாலும்கூட, இன்று ஒரே ஒரு நாள் மட்டும் கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு 7 நாட்கள் விரதம் இருப்பதற்கான பலனை அடைய முடியும். எப்படி தெரியுமா? சூரசம்ஹாரம் தினத்தன்று மேற்கொள்ளப்படும் வழிபாடுகள், கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

சஷ்டி விரதம் மேற்கொண்டால், துன்பங்கள் நீங்கும், வேலைவாய்ப்பு பெருகும் கடன் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.. இதனால், மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை சஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு கவலைகள் தீரும்.. திருமண பாக்கியமும் விரைந்து கைகூடும். பிள்ளை வரம் கிடைக்கும்..

spirituality soorasamharam kantha sashti viratham

அதேபோல, சஷ்டி விரதம் கடைப்பிடிப்பதால், செரிமான சக்தி ஓய்வெடுக்கும்... நோய் எதிர்ப்பு சக்திகள் பெருகும்.. அந்தவகையில், செரிமான சக்தி தான் பார்வதி. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தான் முருகப்பெருமான். உடம்பில் தோன்றும் நோய்தான் அரக்கன்... வெளியில் நடக்கும் அதே போர் உங்கள் உடலிலும் நடக்கிறது. அதனால் தொடர்ந்து 6 நாட்கள் சஷ்டி விரதம் இருந்ததன் பலனாக நோய் என்ற அரக்கனை நோய் எதிர்ப்பு சக்தி மூலம் அழிக்கலாம்.

குலதெய்வம்: ஆனால், கந்தசஷ்டியின் 6 நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட சூரசம்ஹாரம் அன்று ஒரு நாள் விரதம் இருந்தாலும் முருகப் பெருமானின் அருளை பெற முடியும். இதற்கு முருகன் படத்திற்கு முன்பு ஒரு விளக்கு ஏற்றி வைத்து மனதார குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும், முருகப் பெருமானையும் வழிபட்டு விரதத்தை துவக்கலாம்.

எனினும் இன்று ஒரு நாள் மட்டும் விரதம் இருக்க நினைப்பவர்கள், காலையில் இருந்து மாலை வரை உபவாசம் இருக்கலாம்.. உடல் ஆரோக்கியத்தை பொறுத்து, பட்டினி விரதம், பால் பழம் போன்ற விரதங்களை கடைப்பிடிக்கலாம்.. ஆனால், தண்ணீர் நிறைய குடித்து கொண்டேயிருக்க வேண்டும். காலையும், மாலையும் 6 விளக்குகளை ஏற்ற வேண்டும். முருகனின் படத்திற்கு, பூ, சந்தனம், குங்குமம் வைத்து வழிபாடு செய்யலாம்.

சூரசம்ஹாரம்: பிறகு சூரசம்ஹாரம் முடிந்ததுமே கட்டாயமாக குளித்து, முருகனின் திருவுருவப் படத்திற்கு 6 தீபங்கள் ஏற்றி நெய்வேத்தியம் படைத்து வழிபட்டு விரதத்தை முடித்துக்கொள்ளலாம். பால், பழங்களை வைத்து நைவேத்தியம் செய்யலாம்.. அல்லது 6 வகையான சாதம் செய்தும் முருகனுக்கு படைக்கலாம். விதவிதமான சாதம் செய்ய முடியாவிட்டாலும் சர்க்கரை பொங்கல் செய்யலாம்... சஷ்டியின் இந்த கடைசி நாளில் ஏதாவது ஒரு உணவை பிறருக்கு தானமாக வழங்கலாம்.

விரதம் கடைபிடிப்பவர்கள் பகலில் தூங்கவோ, டிவி பார்க்கவே கூடாது.. இன்று ஒரு நாள் முழுவதும் காலில் செருப்பு அணியாமல் இருக்க வேண்டும். நாள் முழுவதும் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் போன்ற சரணங்களை சொல்லலாம்..

அகல் விளக்கு: அதேபோல, ஒரு தட்டில், 1 ஸ்பூன் மிளகை பரப்பி வைத்து, அதைச்சுற்றிலும் கொண்டைக் கடலையை பரப்பி வைக்க வேண்டும்... பிறகு தட்டின் நடுவிலுள்ள மிளகிற்கு மேல் ஒரு அகல் விளக்கில், நெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். நல்லெண்ணெய் மட்டும் பயன்படுத்தக் கூடாது.. இந்த தீபத்தை நெய் விட்டு ஏற்றினால் இன்னும் சிறப்பு.. ஒருமணி நேரம் விளக்கு நன்றாக எரியவிட வேண்டும்.

மறுநாள் காலை அகல் விளக்கை மட்டும் தனியாக எடுத்துவிட்டு, தட்டிலிருக்கும் மிளகில் 4, கொண்டைக்கடலையில் 4 எடுத்து, ஒரு சிவப்பு நிற துணியில் முடிச்சாக கட்டி வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைத்துவிட வேண்டும். மற்ற மிளகுகளை ஓடும் தண்ணீரில் விட்டுவிடலாம். கொண்டைக்கடலையை பறவைகளுக்கு உணவாக அளிக்கலாம்.

பணப்பிரச்சனை: சிவப்பு நிற துணியில் கட்டப்பட்டிருக்கும் மிளகும், குரு பகவானுக்கு ஏற்ற கொண்டை கடலையும் கடனை போக்கி, பணத்தை ஈர்க்கும் சக்தி கொண்டவை.. எனவே, கந்தசஷ்டியில் இப்படி தீபம் ஏற்றினால் பணப்பிரச்சனை நீங்கும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+