தேங்காய் எண்ணெய்யில் விளக்கேற்றலாமா? தேங்காய் தீபத்தின் அற்புத பலன்.. அட முகத்தில் கூடிடும் வசீகரம்
சென்னை: ஆன்மீகத்தில் தேங்காய்களுக்கான முக்கியத்துவங்கள் என்னென்ன? தேங்காய் எண்ணெய்யில் விளக்கேற்றலாமா? தேங்காய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கக்கூடிய அற்புத பலன்கள் என்னென்ன தெரியுமா? இதனை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
தேங்காயை பொறுத்தவரை, ஆன்மீகத்தில் மிக முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. எந்த ஒரு நல்ல காரியம் என்றாலும், அதை மனதில் நினைத்துக் கொண்டு, தேங்காய் உடைத்தால் நன்மை கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.

தேங்காய் மகத்துவம்: தேங்காய்கள் மங்களகரமான பொருளாக வழிபாடுகளில் இடம்பெறுவதற்கு காரணம், தேங்காயில் உள்ள 3 கண்களில், ஒரு கண் பிரம்மாவாகவும், 2வது கண் லட்சுமியாகவும், 3வது கண் சிவனாகவும் பார்க்கப்படுகிறது. இப்படி 3 தெய்வத்துக்கும் அர்ப்பணிக்கப்படுவதால், தேங்காய்களை வைத்து பூஜிக்கும்போது, எந்த காரியமும் சுலபமாக முடியும் என்று நம்பப்படுகிறது.
அதேபோல, நெய், நல்லெண்ணெய் போலவே, கடவுளுக்கு தேங்காய் எண்ணெய்யில் விளக்கேற்றுவது சிறப்புக்குரியதாகும்.. பொதுவாக விநாயகர் கோயிலில் சாமி கும்பிடும்போது, தேங்காய் எண்ணெயில் விளக்கு ஏற்றி கும்பிடுவார்கள்.. காரணம், விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் ஏற்றுவதன் மூலம் கடவுளின் அருள் நேரடியாக கிடைக்கிறது. மேலும், தேங்காய் எண்ணெயை தேங்காயில் வைத்து ஏற்றினால் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.
தேங்காய் எண்ணெய்: அதுமட்டுமல்ல, தேங்காய் எண்ணெய்யில் விளக்கேற்றினால், பேச்சில், முகத்தில், செயலில் வசீகரம் கூடும் என்பார்கள்.. லலிதமான தெய்வங்கள் வீட்டில் வாசம் செய்யுமாம்.. கணவன், மனைவியிடையே இணக்கம் கூடும்.. பழையபாவம் நீங்குவதுடன், அனைவருக்கும் பிடித்தமானவராக நீங்கள் கருதப்படுவீர்கள். தேங்காய் எண்ணெய்யில் விளக்கேற்றி வழிபட்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.
அதேபோல தோஷம் நீங்க, பணத்தகராறுகள் நீங்க, வேலை கிடைக்க, குழந்தை இல்லாதவர்களின் குறைகள் தீருவதற்கு தேங்காய் தீபம் ஏற்றி பரிகாரம் செய்யலாம்.. தேங்காய் தீபம் என்பது பெண் தெய்வங்களுக்கு செய்யப்படும் ஒரு பரிகாரம் ஆகும்.
தேங்காய் தீபம்: இந்த தேங்காய் தீபம் ஏற்றுவது எப்படி தெரியுமா? இந்த தீபத்தை ஏற்றும்போது, தேங்காய் உள்ளே நெய் ஊற்ற வேண்டும். தேங்காய் தீபத்தில் நெய் தவிர வேறு எந்த எண்ணெய்களையும் பயன்படுத்தக்கூடாது.
ஒரு தேங்காயை இரண்டாக உடைத்து, இரு மூடிகளிலும் பாதி அளவிற்கு நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். ஒற்றை திரியை பயன்படுத்தாமல், 2 திரிகளை ஒன்றாக திரித்துக்கொள்ள வேண்டும். தாம்பூல தட்டில் வாழை இலை விரித்து அதன்மீது பச்சரிசியை பரப்பி தேங்காய்களை வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
சிறப்புகள்: இந்த விளக்கின் திரி முழுமையாக எரிந்து, தேங்காய் எண்ணெய்யுடன் தேங்காயும் சேர்ந்து எரிய துவங்கும். இதுபோல், 9 வெள்ளிக்கிழமைகளில் செய்து வந்தால் உங்களது குறைகள் அனைத்தும் நீங்கும். ஏதாவது தோஷம் இருந்தாலும் நிவர்த்தியாகிவிடும். அதேபோல, பஞ்சபூதத்தின் ஏதாவதொரு சக்தி சரியாக இயங்காமல் இருந்தாலும், அதுவும் சரியாகிவிடும். எனினும், இந்த தேங்காய் தீபத்தை வீட்டில் செய்வதை விட கோவில்களுக்கு சென்று செய்தால், கூடுதல் பலன்களைத் தரும் என்பார்கள்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications