Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்ம வினை.. நீ பற்ற வைத்த நெருப்பு..தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு ஆன்மிக பரிகாரங்கள்

கர்ம வினைக்கும் தூக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தவறான காரியங்கள் தொடர்ந்து செய்யும் ஒருவரின் கர்மவினையால் தூக்கம் கேள்விக்குறியாகிவிடும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெத்தையை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலே.." என்று இன்றைக்கு பலரும் பாடிக்கொண்டிருப்பார்கள். நிம்மதியாக உறங்க முடியாமல் பலரும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏராளமானோர் தூக்க குறைபாடு பிரச்சினையில் சிக்கியுள்ளனர். ஆரோக்கியத்துக்கு உணவு எப்படி முக்கியமோ, அப்படித்தான் தூக்கமும். கர்ம வினைக்கும் தூக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அடுத்தவரின் நிம்மதியை கெடுத்தால் நம்முடைய தூக்கம் கேள்விக்குறியாகிவிடும். சுகமாக உறக்கம் வர என்ன பரிகாரம் செய்யலாம் என்று ஆன்மிக ரீதியாக பார்க்கலாம்.

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கமாவது அவசியம் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். உலகிலேயே இந்தியர்கள்தான் மிக குறைவாக உறங்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. உறக்கத்தின் அவசியத்தை உணர்த்தவே உலக தூக்க நாளாக மார்ச் 18ஆம் தேதியை கடைபிடிக்கின்றனர். தூக்கமின்மை குறைபாடுகளுக்கு என்ன காரணம், என்ன சிகிச்சை என்பதில் மருத்துவர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. முக்கியமாக கால்வலி பிரச்சினை இரவு நேர தூக்கத்தை பலருக்கும் கெடுக்கிறது.

30 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவருக்குமே தூக்கமின்மை பிரச்னை துவங்குகிறது. உடலில் ஏற்கனவே இருக்கும் சர்க்கரை, ரத்தஅழுத்தம், சிகிச்சை பெற்று வருபவர்கள், அடிக்கடி தலைவலி பிரச்னை உள்ளவர்கள், கேன்சர் போன்ற நோய்களுக்கு ரேடியோ தெரபி மற்றும் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நபர்கள் தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதிக உடல் எடை காரணமாகவும் தூக்கம் தடைபடும்.
பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் உறக்கம் பிரச்னையே. இரவில் நீண்ட நேரம் டிவி, கம்ப்யூட்டர் பார்ப்பது மற்றும் மனக்குழப்பம், மனஅழுத்தம் உள்ளிட்ட உளவியல் சிக்கல் இருந்தாலும் தூக்கம் பிரச்னையாக மாறும். தூக்கக் குறைபாடு குறிப்பாக நரம்பு தளர்ச்சியை நிச்சயம் ஏற்படுத்துகிறது. நன்றாக தூங்கினாலும் சரி! தூக்கமின்மையால் அவதியுற்றாலும் சரி!

ஜோதிட ரீதியான காரணங்கள்

ஜோதிட ரீதியான காரணங்கள்

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கமாவது அவசியம் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். உலகிலேயே இந்தியர்கள்தான் மிக குறைவாக உறங்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. உறக்கத்தின் அவசியத்தை உணர்த்தவே உலக தூக்க நாளாக மார்ச் 18ஆம் தேதியை கடைபிடிக்கின்றனர். தூக்கமின்மை குறைபாடுகளுக்கு என்ன காரணம், என்ன சிகிச்சை என்பதில் மருத்துவர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. முக்கியமாக கால்வலி பிரச்சினை இரவு நேர தூக்கத்தை பலருக்கும் கெடுக்கிறது.

சுகம் கெட்டுப்போகும்

சுகம் கெட்டுப்போகும்

தூக்கத்திற்கென்றே ஜாதகத்தில் சிறப்பித்து கூறப்பட்ட பாவம் 12ம் பாவமாகும். எனவேதான் இதனை அயன சயன போக மோட்ச ஸ்தானம் என சிறப்பாக கூறப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் 12ம் பாவம் வலுவாகவே கூடாது. தூக்கத்தை பொருத்தவரை 12ம் பாவாதிபதியின் நிலையை கொண்டும் அதனோடு தொடர்பு கொள்ளும் கிரகங்களை கொண்டும் தூக்கத்தின் தன்மையை தீர்மானித்துவிடலாம். 12ம் பாவத்தில் சுப கிரகங்கள் இருப்பது சிறப்பல்ல. புதனோ சுக்கிரன் அல்லது சந்திரன் இவர்கள் யாராவது ஒருவர் 12ம் பாவத்தில் நின்றுவிட்டால் அவர்கள் தூக்கம் முறையற்றதாக எப்போது வேண்டுமானாலும் தூங்கிக்கொண்டே இருப்பார்கள். காலபுருஷனுக்கு 12ம்பாவ அதிபதியான குரு கெட்டுவிட்டால் அவர்களுக்கு நல்ல தூக்கம் என்பது கனவில் கூட கிடைக்காது.

மூளை பாதிப்பு

மூளை பாதிப்பு

தூக்கமின்மைக்கும் நரம்புகளுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. இந்த மூளைக்கும் நரம்பிற்கும் அதிபதியான வித்யாகாரகனான புதபகவான்தான் தூக்கத்திற்கு முக்கிய காரக கிரகமாகும். ஒருவருக்கு மூளை கோளாறுகள், மன அமைதியின்மை, கோமா நிலை போன்றவற்றையெல்லாம் புதனின் அசுப சேர்க்கைகள் ஏற்படுத்திவிடுகிறது. லக்னத்தில் மாந்தி, சந்திரனோடு மாந்தி, புதனோடு மாந்தி, சுக்கிரனோடு மாந்தி இவையெல்லாம் தூக்கத்தை சீரழிக்கும் கிரக சேர்க்கைகளாகும்.

நல்ல மனநிலை

நல்ல மனநிலை

ஒருவருக்கு நல்ல தூக்கம் வேண்டுமென்றால் அவருக்கு நல்ல மனநிலை வேண்டும்.அதிக மகிழ்ச்சி, கோபம், அதிக பயம் இதுபோன்ற உணர்வுகள் தூக்கத்தை கெடுத்துவிடுகிறது. ஆக ஒருவருக்கு நல்ல மனோநிலை அமைய சந்திரனின் அருளாசி முக்கியமானதாகும். இரவின் காரகன் சந்திரன் ஆகும். அந்த சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் எப்படி இருக்கிறார் என்பதை பொருத்தே ஒருவரின் இரவு பொழுதின் தன்மையையும் தூக்கத்தையும் தீர்மாணிக்கமுடியும். இரவில்தான் தூங்கவேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டுவிட்டால் அவருக்கு தூக்கம் என்பது ஏக்கம் நிறைந்ததாகவே இருக்கும்.

 சுகமான தூக்கத்திற்கு காரகம்

சுகமான தூக்கத்திற்கு காரகம்

தூக்கத்தை தீர்மானிக்கும் கிரகம் சுக்கிரன் ஆகும். சுக்கிரன் என்றாலே சுகம்தான் நினைவிற்கு வரும். நல்ல சுவையான உணவு, குளுமையான சூழ்நிலை, வசதியான படுக்கைகள், கூடவே அழகான மற்றும் அன்பான மனைவி இவையெல்லாம் நினைத்து பார்க்கும்போதே இனிமையும் தூக்கம் வருவது போன்ற உணர்வும் ஏற்படுகிறதல்லவா. இவையெல்லாம் சுகமானதாகவும் சுவை மிக்கதாகவும் அமைய ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக அமைய வேண்டும். புதன், சந்திரன், சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் புதன் சந்திரன் சுக்கிரன் ஆகிய மூன்றும் கேந்திர பலம், திரிகோண பலம் பெற்று நல்ல நிலையில் அமைந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருப்பதோடு இனிமையான தூக்கத்திற்கு குறைவிருக்காது. இந்த மூன்று கிரகங்களில் ஒரு கிரகம் பலமிழந்துவிட்டாலும் அந்த ஜாதகரின் தூக்கம் சுகமானதாக அமையாது.

 வாழ்க்கைத்துணையால் பறிபோகும்

வாழ்க்கைத்துணையால் பறிபோகும்

ஒருவர் ஜாதகத்தில் சுகஸ்தானம் கெட்டுவிட்டாலோ அல்லது சுகஸ்தானாதிபதி அசுப சேர்க்கை பெற்று விட்டாலோ அவர்களின் சுகம் மற்றும் தூக்கம் கேள்விக்குறிதான். அவர்களுக்கு அன்னை மற்றும் அன்னைக்கினையான பெண்களாலும் சொத்துக்களாலும் வாகனங்களாலும் தூக்கம் பறிபோகும். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எனப்படுகிறது. ஏழாம் பாவம் கெட்டுவிட்டால் ஆண்களுக்கு மனைவியாலும் நண்பர்களாகும் பெண்களுக்கு கணவராலும் தூக்கம் பறிபோகும்.

கர்மவினை

கர்மவினை

"நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும்.. நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்" கர்ம வினைக்கும் தூக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தவறான காரியங்கள் தொடர்ந்து செய்யும் ஒருவரின் கர்மவினையால் தூக்கம் கேள்விக்குறியாகிவிடும். கர்ம வினையை தெரிவிக்கும் கிரகங்கள் சனி, ராகு, கேது மற்றும் குருவாகும். சனி, ராகு மற்றும் கேது லக்னத்திலோ அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானங்களிலோ அல்லது கேந்திர திரிகோணங்களிலோ அல்லது லக்னாதிபதி, சந்திரன் மற்றும் சூரியனோடு நின்று கர்ம வினையை தெரிவிக்கும் கிரகங்களாகும். குரு மறைமுகமாக கர்ம வினையை தெரிவிப்பவர் ஆவார்.

விளக்கேற்றுங்கள்

விளக்கேற்றுங்கள்

தூக்கம் வரவில்லை என்பதற்காகக் கோபமோ ஆத்திரமோ அடையாதீர்கள். நமக்கு ஏதோ ஆகிவிட்டது என்று அச்சப்படாதீர்கள். வடக்கு திசையில் தலை வைத்து படுக்காதீர்கள் அது நிம்மதியான உறக்கத்தை கொடுக்காது. தூக்க பிரச்சினைகள் உள்ளவர்கள் படுக்கை அறையில் நைட் லேம்பிற்கு பதிலாக மெலிதான வெளிச்சம் வரும் வகையில் மன அமைதிக்காக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைக்கலாம். அந்த விளக்கின் முன் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்யலாம். மூச்சை நன்றாக இழுத்துவிடுங்கள். மெதுவாக மனம் அமைதியாகும்.

தூக்க பிரச்சினை நீக்கும் கோவில்கள்

தூக்க பிரச்சினை நீக்கும் கோவில்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புதன் பரிகாரத்தலமாகும். மீனாட்சி அம்மனை வணங்க நிம்மதியான உறக்கத்திற்கு அம்மனின் ஆசி கிடைக்கும். கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் இருக்கும் திருவெண்காடு புதன் ஸ்தலமாகும். தனி சன்னதியில் புதன் அருள்புரிகிறார். மதுரையில் மீனாட்சி அம்மன் புதன் அம்சமாகவே இருக்கிறார். நவதிருப்பதிகளில் திருப்புளியங்குடி புதன் ஸ்தலமாகும். கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திங்களுர், திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் குணசீலம், சோமநாதேஸ்வரர், போன்றவை சந்திரன் பரிகார ஸ்தலங்களாகும். கஞ்சனுர், ஸ்ரீரங்கம், மற்றும் திரு மயிலை அருள்மிகு வெள்ளீஸ்வரர் ஆலயங்கள் சுக்கிரன் பரிகார ஸ்தலங்களாகும். இந்த ஆலயங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் ஒருமுறையேனும் சென்று தரிசனம் செய்து வர உறக்க பிரச்சினை நீங்க வாய்ப்பு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+