அதிர்ஷ்டம் நெருங்குது.. இந்த 10 விதமான கனவுகள் உங்களுக்கு வருதா? அப்போ பணமும், செல்வமும் கொட்டுமாமே
சென்னை: கனவு சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் இன்றும்கூட பிரதானமாக பார்க்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், ஒருசிலவற்றை பார்ப்போம்.
கனவுகளுக்கான பலன்கள் பழமையான சாஸ்திரங்களில் உள்ளது.. நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு என்கிறது கனவு சாஸ்திரம்.. ஆனால், அந்த பலன்கள் உடனுக்குடன் தெரிய வாய்ப்பில்லையாம்..

கனவு பலன்கள்: உதாரணமாக நள்ளிரவில் 1 மணிக்கு கனவு கண்டால், அதன் பலன் ஒரு வருடம் கழித்தே கிடைக்குமாம். 2 மணிக்கு கனவு கண்டால் 3 மாதத்தில் பலன் கிடைக்கும்.. அதிகாலையில் வரும் கனவுதான் உடனே பலிக்குமாம்.. அந்தவகையில், கனவில் நாம் காணும் உருவங்கள், பொருட்கள், நபர்கள், செயல்கள், இடங்கள், உணர்வுகள் இவைகளை பொறுத்துதான், அவை பலன்களாக கருதப்படுகிறது..
உங்கள் கனவில் எலுமிச்சம் பழத்தை கண்டால் மிகவும் நல்லது.. அதிலும் தனக்கு ஒருவர் தருவதாக கண்டால் சகல பாக்கியங்களும் பெருகும் என்பார்கள்.. சிறு குழந்தைகளை கனவில் கண்டாலும், அல்லது இறந்தவர்களின் சடலத்தை கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் என்று அர்த்தமாம்.. இறந்தவருடன் பேசுவதை போல கனவு கண்டால் அதிகாரம், பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.
பதவி உயர்வு: நட்சத்திர கூட்டங்களை கனவில் கண்டால் உத்தியோகத்தில் பதவி உயர்வு விரைவில் வரும்.. வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிப்பதுடன், பதவி உயர்வும் வரும்..
யானை கனவில் வந்தால் அரசு வேலை கிடைக்கும்.. யானை மாலை போடுவது போல் கனவு கண்டாலும் உத்தியோகத்தில் புரமோஷனும் கிடைக்கும். திருமணமாகாதவர்கள், பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், விரைவிலேயே திருமணம் நிகழும்.. திருமண கோலத்தையே கனவில் கண்டுவிட்டால், சமூகத்தில் மதிப்பு கூடும்..
நதி, குளம்: அதேபோல, நதி, குளம் போன்ற இடங்களில் நீந்துவதைபோல் கனவு கண்டாலோ அதுவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது.. கனவில் மழையை பார்த்தால், பணம் மழையை போலவே கொட்டப்போகிறது என்று பொருள்.. கனவில் தாமரை பூவினை பார்த்தாலும் நல்ல அறிகுறியே.. உங்களுடைய பிரச்சனைகள் எல்லாம் விரைவில் நீங்க போகிறது என்று அர்த்தம்.
கோயில்கள் பற்றிய கனவுகள் வந்தால் நீங்கள் நினைத்த காரியங்கள் அத்தனையும் நிறைவேற போகிறது என்று அர்த்தமாம். குறிப்பாக, கோயில் நடை திறந்து அதில் செல்வது போல கனவு கண்டால் மிகவும் நல்லது.. நீங்கள் எடுத்து வைக்கும் அத்தனை காரியமும் ஜெயம்தான்.
கோயில் கருவறை: கருவறைக்கு சென்று கடவுளுக்கு மாலை அணிவிப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு பணவரவு வரப்போகிறது என்று அர்த்தம். கடவுளை கனவில் கண்டால், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும், திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடிவரும். கோபுரத்தை கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கை மேலோங்கி செல்கிறது என்று அர்த்தம். கோயில் தெப்பக்குளம் கனவில் வந்தால், கடல்தாண்டி செல்லக்கூடிய வாய்ப்புகள் வரும்.
ஆனால், கோயிலுக்குள் போக முடியாமல் கூட்டத்தில் சிக்கியது போல கனவு வந்தாலோ அல்லது காளி தீபம் கனவில் வந்தாலோ குடும்பத்தில் பிரச்சனைகளும், சிக்கல்களும் வரப்போவதாக அர்த்தமாம்.
விநாயகர் சிலை: விநாயகர் சிலை கனவில் வந்தாலோ அல்லது விநாயகரை வழிபடுவது போல கனவு வந்தாலோ மிகவும் நல்லது.. மங்களகரமானதாக கருதப்படுகிறது.. விநாயகர் குதிரையில் வருவது போல் கனவு வந்தால் உங்களது ஆசைகள் நிறைவேற போகிறது, மங்கள நிகழ்வு நடக்க போகிறது என்றே அர்த்தம். ஆனால், இப்படி வரும் கனவுகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவோ கூடாது என்பார்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications