திருநீறு பூசும்போது இதை கவனிச்சீங்களா? விபூதி தயாராவது எப்படி? தப்பித்தவறி இப்படி விபூதியை பூசாதீங்க
சென்னை: பசுமாட்டு சாணத்தை தீயிட்டு கிடைப்பதே திருநீறாகும்.. நீறு இல்லா நெற்றி பாழ் என்று முன்னோர்கள் சொல்ல என்ன காரணம்? விபூதி பூசும்போது கடைப்பிடிக்க முறைகள் என்னென்ன? நெஞ்சுக்குழி மார்பு பகுதி, மூட்டுகளில் திருநீறு பூசலாமா? இதற்கு என்ன காரணங்கள்? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
பசு மாட்டு சாணத்தை தட்டையாக தட்டி, அதை வெயிலில் காயவைத்து எடுத்து கொள்வார்கள்.. 3 நாட்கள் நன்றாக காய்ந்ததும், அந்த உலர்ந்த வறட்டியை சில வகையான மூலிகைகள் குறிப்பாக, ஏலக்காய், சூடம் உள்ளிட்டவற்றையும், நெய்யையும் கலந்து நெருப்பில் போடுவார்கள்.. இவை அனைத்தும் நன்றாக எரிந்து கிடைக்கும் சாம்பலே விபூதியாகும்.

விபூதியை எப்படி பூச வேண்டும்?
உடலில் உண்மையிலேயே மிக முக்கியமான பகுதி மோதிர விரல் என்பார்கள்.. எனவே, விபூதியை மோதிர விரல் கொண்டு பூச வேண்டும். நடு 3 விரல்களினால் நெற்றி நிறைய பூசவேண்டும். கட்டைவிரல் மற்றும் மோதிர விரலை பயன்படுத்தி புருவத்தின் நடுவில் பூச வேண்டும்.
ஆனால், சுட்டுவிரல் மூலமாக விபூதி பூசினால் சேதாரம் வந்து சேருமாம்.. நடுவிரல் கொண்டு விபூதி எடுத்துப் பூசினாலும், போராட்ட வாழ்க்கையே அமையுமாம். சுண்டு விரலைக்கொண்டு விபூதியை எடுத்துப் பூசும்பொழுது, கிரக தோஷங்கள் தாக்கிவிடும் என்பார்கள்.
செய்யக்கூடாத தவறுகள்
வடக்கு கிழக்குமுகமாக நேராக நின்று திருநீறு பூச வேண்டும். அப்படி பூசும்போது, தரையில் சிந்திவிடக்கூடாது.. இடது கை விரலை பயன்படுததி விபூதி பூசக்கூடாது.
திருநீறு பூசும்போது, தலையை கவிழ்த்தும், வாயை திறந்தும், நடந்தபடியும், படுத்தபடியும், விபூதி பூசக்கூடாது.
பெரியவர்களிடம் திருநீறு பெற்றால், அவர்களை வணங்கிவிட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். கோயிலில் திருநீறு தந்தால், இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பெற்றுக் கொள்ள வேண்டும். யார் திருநீறு தந்தாலும் வேண்டாம் என்று சொல்லக்கூடாது.
தொண்டை குழி மார்பு
நெற்றியில் விபூதி பூசுவது மாதிரி, தொண்டை குழி, மார்புக்கு மத்தியிலும், காது மடல்களிலும் பூசலாம்.. இதற்கும் காரணங்கள் உண்டு.. தொண்டைக்குழி, விலா எலும்புகள் சேரும் மார்புப் பகுதியாகும்.. திருநீறு பூசும்போது, உள்வாங்கக்கூடிய இடம் இதுவாகும்..
2 காது மடல்களுக்கு பின்பும் எலும்புகள் உள்ளன.. இந்த எலும்பின் கீழ் பகுதிகளிலுள்ள சிறு குழியில் திருநீறு வைக்கலாம். அதேபோல, ஆண்கள் விபூதியை வலது கால் பெருவிரலிலும் , பெண்கள் இடது கால் பெருவிரலிலும் வைக்கலாம்.
நேர்மறை ஆற்றல் தன்னகத்தே கொண்டது விபூதி.. இதனை நெற்றியில் பூச காரணம் உண்டு.. அதாவது இரு புருவத்துக்கு மத்தியிலுள்ள பகுதிகளில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகள் இருக்கின்றன.. நெற்றியில் திருநீறு பூசும்போது, நரம்புகள் அனைத்தும் தூண்டப்படும்...
நெற்றியில் பூச காரணம்
மேலும், நெற்றி பகுதியில் மட்டுமே வெப்பம் அதிகமாக காணப்படும். அதனால்தான் காய்ச்சல் வரும்போது, மருத்துவர்கள் நெற்றியை தொட்டு பார்க்கிறார்கள்.. இந்த நெற்றி வழியாக வெப்பம் உள்ளிழுக்கப்படுகிறது.. சூரிய கதிர்களின் சக்தியை இழுத்து, அதிர்வுகளை உள்ளே அனுப்பக்கூடிய செயலை திருநீறு சரியாக செய்கிறது.
தோள், முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் உட்பட எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதிகளிலும் திருநீறு பூசும்போது, கெட்ட நீர் தேங்கியிருந்தாலும் வெளிவந்துவிடும்.. மூட்டு தொடர்பான வலி, தொந்தரவு இருந்தாலும் விலகிடும்.
அதுமட்டுமல்ல, திருநீரை நீரில் குழைத்து நெற்றியில் தடவினால், தலைப்பகுதியிலுள்ள நீர் வற்றிவிடும்.. அதனால்தான், பச்சிளம் குழந்தைகளை குளிக்க வைக்கும்போது, உச்சந்தலையில் விபூதி வைத்து விடுவார்கள். இதனால், குழந்தையின் தலையிலுள்ள ஈரத்தை விபூதி உறிஞ்சிவிடும்..
-
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications