பொங்கல் பண்டிகையில் சூரிய பகவானை வழிபடுவது எப்படி? 9 மணிக்குள்ளும் நல்ல நேரம்தான்!
சென்னை: தைப் பொங்கலில் சூரிய பகவானை வழிபடுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம். தை 1 இன்று இனிதே பிறந்த நிலையில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அறுவடை திருநாள், உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் இது என்பதையும் கூறலாம்.இந்த நன்னாளில் சூரிய பகவானுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

பொதுவாக தைப் பொங்கலில் சூரியனுக்கு படையலிடுவது அவசியம். இது எப்படி என்பதை பார்க்கலாம். உழைக்கும் மக்கள் இயற்கையை தெய்வமாகக் கருதி சூரியனை வணங்கும் பண்டிகையே தைப் பொங்கல் ஆகும்.
வீட்டில் விறகு அடுப்பிலோ அல்லது கேஸ் அடுப்பிலோ பொங்கலை பானையில் செய்ய வேண்டும். பச்சரிசி பொங்கல்தான் செய்ய வேண்டும். பிறகு சூரியன் படும் இடத்தில் அதாவது வீட்டின் மொட்டை மாடி, வீட்டின் பின்புறம், அல்லது வீட்டுக்கு வெளிப்புறத்தில் கிழக்கு திசையில் 3 தலைவாழை இலையை வைத்து பழங்கள், கரும்பு, வாழை, காய்கறிகள் உள்ளிட்டவைகளை வைக்க வேண்டும்.
சூரியன் வரும் இடத்தில் கோலமிட்டு, அதற்கு செம்மண்ணிட்டு, பிறகு இலைகளை போட வேண்டும். விளக்கேற்றி, பிள்ளையாரை மஞ்சள் அல்லது மாட்டுச் சாணத்தில் பிடித்து அதற்கு அருகம்புல் உள்ளிட்ட மலர்களை போட வேண்டும்.
இலையில் வைக்க வேண்டியது அவரவர் குடும்ப வழக்கப்படி செய்யும் உணவுகளாகும். பச்சரிசி பொங்கல், சர்க்கரை பொங்கல், எல்லா காய்கறிகளையும் சேர்த்து செய்த கலவை குழம்பு உள்ளிட்டவைகளை வைத்து வழிபடுவது வழக்கம்.
வாழை இலைக்கு பதிலாக பூசணி இலையையும் பயன்படுத்தலாம். எல்லாவற்றையும் வைத்து பிறகு பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் என சூரியனுக்கு கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். பிறகு சாமி அறையிலும் இதே போல் இலை போட்டு படையலிட வேண்டும்.
மூன்றாவதாக அடுப்பு முன்பும் படைக்கும் வழக்கம் இருப்போர் அதையும் செய்வர். இப்படியாக நாம் பொங்கலை கொண்டாட வேண்டும். பொங்கல் பண்டிகையில் பொங்கல் வைக்க நல்ல நேரம் என்ன என்பதை பார்க்கலாம்.
காலை 6 மணி முதல் 8.50 மணிக்குள் சுக்கிர ஓரை முடிகிறது என்பதால் அந்த நேரத்திலும் பொங்கல் வைத்து படையல் போட்டுவிடலாம். இல்லாவிட்டால் 9- 10.30 எமகண்டம் முடிந்து தான் செய்ய வேண்டும். இன்னொரு நேரம் 10.35 மணி முதல் 12 மணிக்குள்ளாகவும் பொங்கல் வைத்து படைக்கலாம்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications