தாலி கயிறு.. கல்யாணத்தில் 9 இழைகள் அணிவிப்பது ஏன்? தாலி என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? ஆச்சரியம்
சென்னை: தாலி என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? மங்கலநாண் திருமணத்தின்போது பொதுவாக 9 இழைகளால் ஆனதாக அணிவிக்கப்படுகிறதே ஏன் தெரியுமா, தாளை பனை ஓலை என்றால் என்ன? சுருக்கமாக பார்க்கலாம்.
திருமணத்திற்கு முதன்மையும், முத்திரையுமானதுதான் தாலி... உறவினர்கள் முன்னிலையில், ஊரார் முன்னிலையில், மணமகள் கழுத்தில், மணமகன் கட்டவதுதான் தாலி என்கிறோம். இந்த தாலி தங்கத்தால் ஆன பொட்டுடன் மஞ்சள் சரடுடன் கட்டப்படுகிறது. ஆனால், தங்கத்தால் கட்டப்படுவதால் இது தாலி என்று பெயர் பெற்றதாக பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

தாலி பெயர் காரணம்: தாளை பனை மரத்தில் கட்டப்பட்டதால்தான், இதற்கு தாலி என்று பெயர் பெற்றதாம். தாளை பனைமர ஓலைகள் என்றுமே மங்காது.. அதனால்தான், ஓலை சுவடிகள் எல்லாம் தாளை பனைமரத்து ஓலையில் எழுதப்பட்டது.. அன்று எழுதப்பட்ட ஓலைசுவடிகள் தான் இன்றும் அழியாமல் இருக்கிறது.
இந்த தாளை பனை மரம் தை மாதத்தில் மிக செழிப்பாக வளர்ந்து காணப்படும்.. சாதாரண பனை ஓலையில் எழுதினால் நாளடைவில் மங்கி போகும்.
பனை ஓலைகள்: ஆனால் தாளை பனை ஓலையில் எழுதினால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்னும் நமக்கு பயன்படும்.. தங்கம் கண்டுபிடிப்பதற்கு முன்பாக பெண்கள் கழுத்தில் மஞ்சள் கிழங்கு, மஞ்சள் பூசப்பட்ட நூல் மட்டுமே தாலியாக கட்டப்பட்டது.. அதற்கும் முந்தைய பண்டைய காலத்தில் தாளை பனைமரம் ஓலையைதான் தாலியாக கட்டினார்களாம்..
அதாவது, மணப்பெண்ணும், மணப்பெண்ணின் வீட்டாரும் உறவினர்கள், மறுபக்கத்தில் மணமகனும் மணமகன் வீட்டார், உறவினர்கள் மற்றும் ஊர் பெரியோர்கள், ஊர்காரர்கள் முன்னிலையில் தாளைபனை மரம் ஓலையில் இன்னாருடைய (தந்தை தாய் பெயர்) மகளை (மணமகள் பெயர்) இன்னாருடைய (மணமகன் தந்தை தாய் பெயர்) மகனுக்கு (மணமகன் பெயர்) ஊர் பெரியோர் முன்னிலையில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது என்று அந்த தாளை பனைமரத்து ஓலையில் எழுதுவார்களாம்.
பனைமர நார்: அந்த ஓலையை மடித்து, தாளை பனைமர ஓலையின் நாரை கிழித்து கட்டி மணமகன் கையில் தருவார்கள்.. இந்த நாரை, மணமகன் அங்கிருக்கும் உற்றார், உறவினர் முன்பாக, மணமகள் கழுத்தில் கட்டுவார்.
ஆனால், பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால், உலோகத்தாலான தாலி செய்து பயன்படுத்தப்பட்டது. இதுவே பின்னாளில் தங்கத்தால் பொன் தாலி செய்யப்பட்டது.
9 இழைகள்: அதேபோல, அந்த மங்கலநாண் திருமணத்தின்போது பொதுவாக 9 இழைகளால் ஆனதாக அணிவிக்கப்படுகிறது... இந்த 9 இழைகளும், 9 தாத்பரியங்களை குறிக்கிறதாம்.. 1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல் 2. மேன்மை 3. ஆற்றல் 4. தூய்மை 5. தெய்வீக நோக்கம் 6. உத்தம குணங்கள் 7. விவேகம் 8. தன்னடக்கம் 9. தொண்டு போன்றவையே 9 இழைகளும் பிரதிபலிக்கின்றதாம்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications