தாலி கயிறு.. கல்யாணத்தில் 9 இழைகள் அணிவிப்பது ஏன்? தாலி என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? ஆச்சரியம்
சென்னை: தாலி என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? மங்கலநாண் திருமணத்தின்போது பொதுவாக 9 இழைகளால் ஆனதாக அணிவிக்கப்படுகிறதே ஏன் தெரியுமா, தாளை பனை ஓலை என்றால் என்ன? சுருக்கமாக பார்க்கலாம்.
திருமணத்திற்கு முதன்மையும், முத்திரையுமானதுதான் தாலி... உறவினர்கள் முன்னிலையில், ஊரார் முன்னிலையில், மணமகள் கழுத்தில், மணமகன் கட்டவதுதான் தாலி என்கிறோம். இந்த தாலி தங்கத்தால் ஆன பொட்டுடன் மஞ்சள் சரடுடன் கட்டப்படுகிறது. ஆனால், தங்கத்தால் கட்டப்படுவதால் இது தாலி என்று பெயர் பெற்றதாக பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

தாலி பெயர் காரணம்: தாளை பனை மரத்தில் கட்டப்பட்டதால்தான், இதற்கு தாலி என்று பெயர் பெற்றதாம். தாளை பனைமர ஓலைகள் என்றுமே மங்காது.. அதனால்தான், ஓலை சுவடிகள் எல்லாம் தாளை பனைமரத்து ஓலையில் எழுதப்பட்டது.. அன்று எழுதப்பட்ட ஓலைசுவடிகள் தான் இன்றும் அழியாமல் இருக்கிறது.
இந்த தாளை பனை மரம் தை மாதத்தில் மிக செழிப்பாக வளர்ந்து காணப்படும்.. சாதாரண பனை ஓலையில் எழுதினால் நாளடைவில் மங்கி போகும்.
பனை ஓலைகள்: ஆனால் தாளை பனை ஓலையில் எழுதினால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்னும் நமக்கு பயன்படும்.. தங்கம் கண்டுபிடிப்பதற்கு முன்பாக பெண்கள் கழுத்தில் மஞ்சள் கிழங்கு, மஞ்சள் பூசப்பட்ட நூல் மட்டுமே தாலியாக கட்டப்பட்டது.. அதற்கும் முந்தைய பண்டைய காலத்தில் தாளை பனைமரம் ஓலையைதான் தாலியாக கட்டினார்களாம்..
அதாவது, மணப்பெண்ணும், மணப்பெண்ணின் வீட்டாரும் உறவினர்கள், மறுபக்கத்தில் மணமகனும் மணமகன் வீட்டார், உறவினர்கள் மற்றும் ஊர் பெரியோர்கள், ஊர்காரர்கள் முன்னிலையில் தாளைபனை மரம் ஓலையில் இன்னாருடைய (தந்தை தாய் பெயர்) மகளை (மணமகள் பெயர்) இன்னாருடைய (மணமகன் தந்தை தாய் பெயர்) மகனுக்கு (மணமகன் பெயர்) ஊர் பெரியோர் முன்னிலையில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது என்று அந்த தாளை பனைமரத்து ஓலையில் எழுதுவார்களாம்.
பனைமர நார்: அந்த ஓலையை மடித்து, தாளை பனைமர ஓலையின் நாரை கிழித்து கட்டி மணமகன் கையில் தருவார்கள்.. இந்த நாரை, மணமகன் அங்கிருக்கும் உற்றார், உறவினர் முன்பாக, மணமகள் கழுத்தில் கட்டுவார்.
ஆனால், பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால், உலோகத்தாலான தாலி செய்து பயன்படுத்தப்பட்டது. இதுவே பின்னாளில் தங்கத்தால் பொன் தாலி செய்யப்பட்டது.
9 இழைகள்: அதேபோல, அந்த மங்கலநாண் திருமணத்தின்போது பொதுவாக 9 இழைகளால் ஆனதாக அணிவிக்கப்படுகிறது... இந்த 9 இழைகளும், 9 தாத்பரியங்களை குறிக்கிறதாம்.. 1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல் 2. மேன்மை 3. ஆற்றல் 4. தூய்மை 5. தெய்வீக நோக்கம் 6. உத்தம குணங்கள் 7. விவேகம் 8. தன்னடக்கம் 9. தொண்டு போன்றவையே 9 இழைகளும் பிரதிபலிக்கின்றதாம்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications