திருப்பதி ஏழுமலையான் பக்தர்களே.. ஆர்ஜித சேவை.. அங்கப்பிரதட்சணம் டிக்கெட் ரிலீஸ்.. புக்கிங் எப்போது?
திருப்பதி: ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களின் வசதிக்காக, நவம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு மற்றும் தரிசன டிக்கெட்டுகளை அட்டவணைப்படி திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று வெளியிட உள்ளது.
திருமலைக்கு செல்லும் ஏழுமலையான் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகள் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. சிறப்பு தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகளை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும். இலவச தரிசனத்திற்கு செல்ல ஒரு நாள் முழுவதும் வரிசையில் நிற்க வேண்டும். பக்தர்களின் வசதிக்காக ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் ரிலீஸ் செய்யப்படுகின்றன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக, நவம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு மற்றும் தரிசன டிக்கெட்டுகளை அட்டவணைப்படி திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, நவம்பர் மாதத்துக்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை சேவைகளுக்கான ஆன்லைன் நேற்று காலை 10 மணிக்கு வெளியானது இன்று 21ஆம் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யலாம்.
குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் பணம் செலுத்தி தங்களின் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 22ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சஹஸ்ர தீபாலங்கர சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும். விர்ச்சுவல் சேவை டிக்கெட்டுகள் 22ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.
அங்கப்பிரதட்சணம் டோக்கன்களின் ஒதுக்கீடு 23ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தொடர்புடைய பிரேக் தரிசன டிக்கெட்டுகள், 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டோக்கன்கள் 23ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். 24ஆம் தேதி காலை 10 மணிக்கு ரூ. 300 சிறப்பு விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது.
திருமலை மற்றும் திருப்பதியில் அறைகளுக்கான முன்பதிவு 25ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications