டிசம்பர் மாதம் திருப்பதிக்கு போறீங்களா! நாளை முதல் ஆதார் கார்டுடன் தயாராக இருங்க!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதம் தரிசனம் செய்வதற்காக ஆன்லைனில் நாளை முதல் தரிசன டிக்கெட்டுகள் பல்வேறு சேவைகளின் கீழ் விற்பனை செய்யப்படும். சரியாக 24 ஆம் தேதி திருப்பதியில் ரூ 300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும்.
திருப்பதிக்கு மாதந்தோறும் சென்று வெங்கடாஜலபதியை பார்த்தாலும் நமக்கு போதாது. அங்கேயே இருந்துவிடலாம் என தோன்றும். சிலர் தங்களது சொத்துகளை எழுதி வைத்துவிட்டு கோயிலில் திருப்பணிகளை மேற்கொண்டும் வருகிறார்கள்.

திருப்பதி ஏழுமலையானை நாள்தோறும் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. திருமலை திருப்பதிக்கு செல்ல வேண்டுமானால் பக்தர்கள் 3 மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.
ஏழுமலையானை நவம்பர் மாதம் தரிசனம் செய்ய அனைத்து ஆன்லைன் டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. சேவைகள், தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவற்றிற்கான டிக்கெட் முன்பதிவுகள் நிறைவடைந்துவிட்டது. அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை புரட்டாசி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.
இன்று புரட்டாசி 1 தொடங்கிவிட்டது. இதனால் திருமலையில் புரட்டாசி மாத வழிபாடுகள் மற்றும் பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருப்பதியில் டிசம்பர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகள் நாளை முதல் தொடங்கப்படுகிறது.
லக்கி டிப் மூலம் சில சேவைகள் புக் செய்யப்படுகிறது. அதாவது சுப்ரபாத சேவை, தோமலா சேவை, நிஜபாத சேவை, அஷ்டதல பாத பத்மாராதனை ஆகிய சேவைகள் அடங்கும். இவற்றில் சுப்ரபாத சேவைக்கு அதிகபட்சமாக 350 வரை டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.
சுப்ரபாத சேவைதான் திருப்பதியில் அதிகாலையில் நடக்கும் முதல் சேவை. இந்த சேவையில் பங்கு பெறுவோர் குலசேகரப்படி வரை சென்று ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். டிசம்பர் மாதம் சுப்ரபாத சேவையில் பங்கேற்க நினைப்பவர்கள் , டிசம்பர் 15 ஆம் தேதி வரை மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். டிசம்பர் மாதம் 16ஆம் தேதி மார்கழி மாதம் பிறக்கிறது.
மார்கழி மாதங்களில் திருமலையில் அதிகாலையில் சுப்ரபாத சேவை கிடையாது. மார்கழி மாதத்தில் பெருமாள் கோயில்களில் ஆண்டாள் பாசுரங்கள் மட்டுமே ஒலிக்கும். அதனால் மார்கழி மாதம் நிறைவடையும் வரை திருப்பதியில் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான்.
மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழா வருகிறது. அதுவும் இந்த முறை டிசம்பரில் வரவில்லை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்தான் வருகிறது. எனவே வைகுண்ட ஏகாதசிக்கு ஜனவரி மாதம்தான் டிக்கெட்டை புக் செய்ய முடியும்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications