திருப்பதியில் நாளை பிரம்மோற்சவம் தொடக்கம்! வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் திருமலை!
திருப்பதி: திருமலை திருப்பதியில் நாளை பிரம்மோற்சவம் தொடங்கவுள்ள நிலையில் ஏழுமலையான் கோயில் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவையொட்டி நேற்றைய தினம் புனித கொடியேற்றம் நிகழ்ந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த விழா நாளை தொடங்கி 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சுமார் 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் கடந்த 1400 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கி.பி 614-ம் ஆண்டு புரட்டாசி மாதத்தில் முதல் பிரம்மோற்சவம் நடைபெற்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. பல்லவ நாட்டை ஆண்ட 'பெருந்தேவி' என்றழைக்கப்பட்ட 'சமவை' என்பவர்தான் முதன்முதலில் இந்த பிரம்மோற்சவத்தை நடத்தியுள்ளார்.
அப்போது அவர் வெள்ளியால் வடிவமைக்கப்பட்ட 'மணவாளப் பெருமாள்' என்னும் சிலையைத் திருப்பதி கோயிலுக்கு வழங்கினார். அந்தச் சிலைதான், போக சீனிவாசமூர்த்தி என்று இப்போது அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று கோயிலில் கொடி கம்பத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடி ஏற்ற தேவையான புனித தர்ப்பை, கயிறு ஆகியவற்றை தேவஸ்தான ஊழியர்கள் மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று அர்ச்சகர்களிடம் ஒப்படைத்தனர்.
இவை ரங்கநாயக மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. பிரம்மோற்சவத்தையொட்டி திருப்பதி, திருமலையில் வண்ண விளக்குகள், தோரணங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இவை கண் கவரும் விதத்தில் உள்ளன. திருப்பதியில் பேருந்து நிலையம், ரயில் நிலையம், தேவஸ்தான் நிர்வாக அலுவலகம் உள்பட முக்கிய கூட்டுச் சாலைகளிலும் திருச்சானூர்- திருப்பதி சாலை, சித்தூர்- திருப்பதி சாலைகளிலும் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
அது போல் அலிபிரி நுழைவு வாயில், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை உள்ளிட்ட இடங்களில் அலங்கார தோரணங்கள் , கட் அவுட்கள், மின் விளக்கு அலங்காரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் திருப்பதி, திருமலை மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. ஆந்திர அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது மனைவியுடன் நாளை திருமலைக்கு வந்து பட்டு வஸ்திரத்தை வழங்கவுள்ளார்.
பிரம்மோற்சவத்தின் போது முதல்வர், தனது துணையுடன் வந்து பட்டு வஸ்திரத்தை சாத்த வேண்டும். இதுதான் விதிமுறை. இன்று ஆகம விதிகளின்படி அங்குரார்ப்பன நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. நாளை முதல் நாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் பெரிய சேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த பிரம்மோற்சவ விழாவையொட்டி 5,140 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications