Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாராஹி அம்மனை எந்தெந்த கிழமையில் வணங்கலாம்? கொடுத்த கடன் வந்து சேர வழிபாடு! பூஜை ரூமில் இப்படி வைங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாராஹி அம்மன் சக்தி தேவியின் அம்சமாகவே கருதப்படுகிறார். வாராஹி அம்மன் துர்க்கை மற்றும் காளியைப் போன்ற உக்கிரமான தோற்றம் கொண்டவளாக இருந்தாலும், கருணையின் ஊற்றாக விளங்குகிறாள்.. எதிரிகளை அழிக்கும் திறன் கொண்டவளாகவும், ஆபத்துகளை, தீங்குகளை நெருங்க விடாமல் செய்பவளாகவும் வாராஹி அம்மன் திகழ்கிறாள்.. வாராஹியை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? யார் யார் வாராஹியை வணங்கலாம்? இவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

தன்னிடம் வேண்டிக் கொள்பவர்களுக்கு, உடனடியாக அருளக்கூடியவள் வராஹி தேவி, தேவி புராணங்களின்படி ஸப்த மாதர்களில் ஒருவராகவும், வராஹ புராணத்திலும், ஸ்ரீ நகர உபாஸனையிலும் அஷ்டமாத்ருகா தேவதைகளில் ஒருவராகவும் கருதப்படும் தெய்வமாகும்..

Spirtuality Varahi Amman varahi worship

வடக்கு திசைக்கு உரியவளான வாரஹி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். பார்க்க கரடுமுரடான முகம் இருந்தாலும், பல நன்மைகளை தரும் சாந்த நாயகியே இந்த வாராஹி அம்மன். வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் பெண் வடிவம் என்றும் சொல்வார்கள்..

அதனால்தான், பூஜையறையிலும் வாராஹி தேவியின் படத்தையோ, சிலையையோ வைத்து வணங்கலாம் என்பார்கள். ஆனால், வடக்கு திசையே வாராஹிக்கு உரிய திசையாகும்.. எனவே, வடக்கு நோக்கி வாராஹியின் முகம் இருக்கும்படி வைக்கலாம்..

வாராஹிக்கு செந்நிற மலர்கள் உகந்தவை என்பதால், செவ்வரளி, அரளி, செம்பருத்தி, ரோஜா போன்ற பூக்கள் கொண்டு வாராஹியை அலங்கரிக்கலாம்.

யார் யார் வாராஹியை வணங்கலாம்

கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி நட்சத்திரங்கள் பிறந்தவர்களும், மகரம், கும்பம் ராசிகளை கொண்டவர்களும், சனி திசையால் பாதிக்கப்பட்டவர்களும் வாராஹியை, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் விளக்கேற்றி வணங்கலாம்.

சேனநாதா, தண்டநாதா, வராஹி, பஞ்சமி, கைவல்யரூபி, வீரநாரி, கிரியா தேவி, வார்த்தாளி (நீதி தேவதை - ஒறுத்து அளி என்பதாகும்), தூமாவதி(வடிவம்), பலிதேவதா, ஸங்கேதா, ஸமயேஸ்வரி, மகாசேனா, அரிக்னீ, முக்கியமாக ஆக்ஞாசக்ரேஸ்வரீயாகும். ஸ்வப்ன வராஹி, அஷ்வாரூட வராஹி, ஆதி வராஹி, லகு வராஹி, உன்மத்த வராஹி, லகு வராஹி, மஹிஷாரூட வராஹி, சிம்ஹாரூட வராஹி என அஷ்ட வராஹிகளாக அழைக்கப்படுகிறார்கள். .

கொடுத்த பணம் வந்து சேர உதவும்

எதிரிகள், தீயசக்திகள், கடன்கள் என எந்த துயரத்தையும் அண்ட விடாமல் செய்யக்கூடியவள் வாராஹி... கொடுத்த பணம் திரும்பி வராவிட்டாலும், வாராஹியை வணங்கி வேண்டினாலே, கையை விட்டு போன பணம், மீண்டும் வந்து சேரும் என்பார்கள்..

நெல்லை, திருவானைக்காவல் போன்றவை வாராஹியின் சிறப்பு தலமாக கருதப்படாலும், காசி, தஞ்சாவூர் பெரிய கோவிலில் மட்டுமே வாராஹிக்கு தனி சன்னதி உள்ளது. அதிலும் தஞ்சையில் முதல் பூஜை வாராஹி அம்மனுக்கே நடத்தப்படுமாம்.

பலன்கள், நன்மைகள்

வாராஹியை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? முப்பிறவி கர்மாக்கள் அழிக்கப்பட்டுவிடும்.. எதிரிகள், விரோதிகள் நெருங்கமாட்டார்கள்.. செய்வினை மாந்திரிக தோஷங்கள் இருந்தாலும் விலகிவிடும்.. தொழிலில் ஏதாவது எதிர்ப்புகள், இழப்புகள், பாதிப்புகள், இருந்தாலும், விலகிவிடும்.

மாந்திரீகம் ஏவல்கள் பாதிப்புகளும் செயலிழந்துவிடும்.. நாள்பட்ட நோய்களும் குணமாகும்.. எதிர்பாரா விபத்துக்கள், ஆபத்துகளும் நெருங்காது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+