ஓடாத கடிகாரம்.. உடைந்த கட்டில் உங்க வீட்ல இருக்கா உடனே தூக்கி போடுங்க.. வாஸ்து டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடு என்பது நேர்மறை சக்திகள் நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் மகாலட்சுமியின் அருள் வீட்டில் நிறைந்திருக்கும். ஒரு சிலர் உடைந்த பொருட்களைக்கூட காட்சிப்பொருட்களாக வைத்திருப்பார்கள். ஓடாத கடிகாரம், பாடாத ரேடியோ என்று பல பொருட்களை வீட்டிற்குள் வைத்திருக்காமல் தூக்கி குப்பையில் போட்டு விடுங்கள். வாஸ்து படி நம்முடைய வீட்டில் என்ன பொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.

நம்முடைய வீட்டை நாம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் செல்வ வளம் தரக்கூடிய மகாலட்சுமியின் அருள் பார்வை கிடைக்கும். முதலில் நமது வீட்டை இருப்பிடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதுவே வீட்டை வளமாக வைத்திருக்கும்.

Vastu Tips Tamil: Dont use repair wall clock in your house vastusastra tips

நாம் வீடு நிறைய கண்ட சாமான்களை போட்டு வைத்திருக்கக்கூடாது. அதுவே சிக்கலாகி வீட்டிற்குள் எதிர்மறை சக்தியை அதிகரித்து விடும். ஒருசிலரின் வீட்டில் கண்ட சாமான்களை போட்டு வைத்திருப்பார்கள். பழங்கால பொருட்களை வைத்திருப்பது தவறில்லை. அதுவே உடைந்த பொருட்கள் இருந்தால் அதை வீசி விடுங்கள். இல்லாவிட்டால் எடைக்கு போட்டு விடுங்கள்.

உடைந்த பொருட்கள் எதையும் வைத்திருக்காதீர்கள். ரிப்பேர் ஆன ஃபேன், உடைந்த கட்டில், நாற்காலி. சைக்கிள் போன்றவை வைத்திருக்காதீர்கள்.
பழைய சாமான்களை வாங்குபவர்களிடம் எடைக்கு போட்டு விடுங்கள்.

வடக்கு முழுவதும் மூடிய வீட்டின் அமைப்பு இருப்பது. நான்கு புறமும் சுற்றுச்சுவர் இல்லாத அமைப்புகள், வடகிழக்கில் வடக்கு பக்கம் சாளரம் இல்லாத அமைப்பு வருவது. வடகிழக்கில் கிழக்கு பக்கம் சாளரம் இல்லாத அமைப்புகள் வந்தாலும் பணத் தட்டுப்பாடு பெருகும்.

வடகிழக்கில் ஈசான்ய மூலையில் நாம் செய்யும் சில தவறுகள் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வட கிழக்கு பகுதியில் ஜன்னல் இருந்தாலும் அதை சிலர் மூடியே வைத்திருப்பார்கள். அது தவறு. வடகிழக்கில் இருந்து காற்றும் ஒளியும் வீட்டிற்குள் நுழைய வேண்டும். வடகிழக்கு பகுதியில் தவறியும் கூட சமையல் அறை வைத்திருக்கக் கூடாது. வடகிழக்கில் கழிப்பறை, சமையல் அறை வைத்திருப்பது தவறு. அந்த வீட்டில் செல்வம் தங்கவே தங்காது.

வடகிழக்கில் இருந்து சூரிய ஒளி வீட்டிற்கு வர வேண்டும். அப்போதுதான் அந்த வீட்டின் ஆரோக்கியம் அதிகரிக்கும். நாம் தெற்கு பார்த்து அமர்ந்துதான் சாப்பிட வேண்டும் வடக்கு பார்த்து அமர்ந்து சாப்பிடக்கூடாது. வடக்கு பார்த்து அமிர்தமே உண்டாலும் அது உடம்பில் சேராது என்று முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர். பூஜை - வடக்கு, போஜனம் - தெற்கு என்பது வாஸ்துப் பழமொழி.

அதற்கு அர்த்தம் நாம் பூஜை அறையில் சாமி படங்களை கிழக்கு அல்லது வடக்குப் பார்த்து அமைத்து, நீங்கள் வடக்கு அல்லது கிழக்குப் பார்த்து இருந்து வழிபாடு செய்யுங்கள். நிறைவான வாழ்க்கை அமைய வேண்டும் எனில் நாம் தென்மேற்கு மூலையில் விளக்கேற்றி வைத்து வழிபடுவது சிறப்பு.
பூஜை அறையில் நெய்தீபம் வடக்கு பார்த்து ஏற்றி வைத்து வழிபடுங்கள் நல்லதே நடக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+