துளசி மாலை அணிய போகிறீர்களா? என்னவெல்லாம் செய்யலாம், செய்யக் கூடாது தெரியுமா?
சென்னை: துளசி மாலை என்பது மிகவும் புனிதமான ஒன்று. பெருமாளுக்கு உகந்தது இந்த துளசி. துளசிக்கு இணையானது துளசி மாலை என்கிறார்கள். இப்படிப்பட்ட தெய்வ கடாட்சம் பொருந்திய துளசி மாலையை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
துளசி மாலை என்பது துளசி இலைகளால் செய்யப்படுகிறது. இது இந்து பாரம்பரியத்தில் ஆன்மீக அணிகலனாக பயன்படுத்தப்படுகிறது. இந்த துளசி மாலை ஆன்மீக ரீதியிலும் உடல்நல ரீதியிலும் நல்லதொரு மாற்றங்களை தரும்.

இந்த துளசி மாலையை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அத்தகைய மரியாதையாக பயன்படுத்தினால் நல்ல ஆற்றலை கொடுக்கும். இந்த மாலையை அணியும் போது நம் மனம் தூய்மையான எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும்.
இந்த துளசி மாலை ஏராளமான பிரார்த்தனைகள் மந்திரங்களை சொல்லி செய்யப்படுகிறது. அதனால் இதை அணியும் போது உள்ளமும் மனதும் சுத்தமாக இருக்க வேண்டும். துளசி மாலை அணிந்தவர்களை பெருமாள் காப்பாற்றுவார் என்பது ஐதீகம். இந்த மாலையால் ஒருவர் இறந்தால் வைகுண்ட பதவி அடைவார்கள் என்பது நம்பிக்கையாகும்.
சிலர் துளசி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளாமல் ஜபம் செய்வதற்காக மட்டும் பயன்படுத்துவார்கள். கழுத்தில் அணிந்தாலும் சரி, ஜபம் செய்ய பயன்படுத்துவதானாலும் சரி அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை பார்க்கலாம். துளசி மாலையை வாங்கி வந்ததும் அதை மஞ்சள் நீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.
பின்னர் கங்கை ஜலம் இருந்தாலோ அல்லது சுத்தமான நீர், கோமியம் ஆகியவற்றால் ஒரு முறை கழுவ வேண்டும். பிறகு அதை சுத்தமான துணியால் துடைத்து பூஜை அறையில் மகாவிஷ்ணுவின் படத்திற்கு அருகே வைத்து வழிபட வேண்டும். தான் அணிய போகும் துளசி மாலையால் தனக்கு நன்மைகளும் இறைவன் அருளும் கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு அதை அணிந்து கொள்ள வேண்டும்.
துளசி மாலை அணிபவர்கள் அசைவம், வெங்காயம், பூண்டு போன்ற உணவுகளை சாப்பிடக் கூடாது. அது போல் மது, புகை, புகையிலை போன்ற போதை வஸ்துக்களையும் பயன்படுத்தவே கூடாது. துளசி மாலை, மிகவும் புனிதமானது, தெய்வீக சக்தி படைத்த மாலை என்பதால் அதை அணிபவர்கள் மனதாலும் உடலாலும் தூய்மையாக இருத்தல் வேண்டும்.
ஒருவர் அணியும் துளசி மாலையை மற்றவர்கள் அணியவே கூடாது. துளசி மாலை அணிபவர்கள் உடலுறவு கொள்ள கூடாது. இந்த மாலை உங்களை தீய சக்திகளில் இருந்து காக்கும். இந்த துளசி மாலையை தியானம் செய்யும் போது பிரார்த்தனை செய்யும் போதும் மந்திரங்களை உச்சரிக்கும் போதும் அணியலாம்.
கழுத்தில் அணியும் போது அதன் மீது மரியாதை இருக்க வேண்டும். ஏதோ அழகு அணிகலனாக அதை கருதவே கூடாது. இந்த மாலையை நீங்கள் பயன்படுத்தக் கூடாது என்ற சம்பவங்களில் அணிய முடியாத நிலை இருந்தால் அதை உடனே சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளவும். குளிக்கும் போது, நீச்சல் பழகும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் அணியவே கூடாது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications