Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்கள் வேண்டுதலை இந்த நேரத்தில் வையுங்கள்..நிச்சயம் நிறைவேறும்..நல்லது செய்யும் ராகு காலம்

காலங்கள் நல்லதையும் செய்யும் கெட்டதையும் செய்யும். அதனால்தான் எதையும் நேரம் காலம் பார்த்து செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகுகாலம் எமகண்டம் பெரும்பாலானோருக்கு தெரியும். இந்த நேரங்களில் சுப காரியங்கள் செய்யக்கூடாது, பயணங்கள் கூடாது. புதிய பொருட்கள் வாங்குவது என எந்த விஷயத்தையும் செய்யக்கூடாது என்று சொல்வார்கள். அதே நேரத்தில் ராகு காலத்தில் நாம் ஆத்மார்த்தமாக செய்யும் பிரார்த்தனைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

ராகுவும் கேதுவும் பாம்பு கிரகங்கள். விஷ நேரங்கள் ராகு ராகுவின் ஆதிக்கம் கொண்டது, கேது எமனின் ஆதிக்கம் கொண்டது எம கண்டம். ஜாதகத்தில் ராகு, கேது என்பது சர்ப்பங்களுக்கு சம்பந்தப்பட்டவை என்பதால், அது விஷ காலமாக கருதப்படுகிறது. ஆகவே, அது சுபகாரியங்களுக்கு சரியான நேரமில்லை என்பதால் ஒதுக்கி வைத்தனர்.

What is Rahu kalam? is good time or bad time -Importance of mouna viratham

ராகுகால நேரம் என்பது தினசரியும் ஒன்றரை மணி நேரம் வரும். இந்த ஒன்றரை மணி நேரத்தில் பொதுவாகவே யாரும் நல்ல விஷயங்களை செய்ய மாட்டார்கள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், இந்த ராகு கால வேளையில் நாம் என்ன நினைக்கின்றோமோ, நாம் என்ன பேசுகின்றோமோ அது பலிக்கும் என்பது நம்மில் பலபேருக்கு தெரிவதில்லை.

ராகு காலம் தினசரியும் வரும் நேரம்:

திங்கள்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை
செவ்வாய்: பிற்பகல் 3:00 மணி முதல் 4 .30 வரை
புதன்: 12.00 மணி முதல் 1.30 மணி வரை
வியாழன்: 1.30 மணி முதல் 3.00 மணி வரை
வெள்ளி: 10.30 மணி முதல் 12.00 மணி வரை
சனி: 9.00 மணி முதல் - 10.00 மணி வரை
ஞாயிறு 4.30 மணி முதல் 6.00 மணிவரை

ராகுகாலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். தீராத கடன் பிரச்சினை, தீராத நோய்களுக்கும் எதிரிகள் தொல்லை தீரவும் நாம் காளியையும், துர்கா தேவியையும் வேண்டிக்கொள்வோம். மவுனமாக மனமுருகி வைக்கும் வேண்டுதல் நிச்சயம் பலிக்கும். அந்த வேண்டுதல் நிறைவேறும்.

வீட்டில் வேலை செய்பவர்களாக இருந்தாலும், வெளியே சென்று வேலை செய்தாலும் ராகுகால நேரத்தில் எந்த பேச்சும் பேசாமல் மவுன விரதம் இருப்பது நல்லது. தினசரி ஒன்றரை மணி நேரம் ராகுகால நேரத்தில் மவுன விரதம் இருக்க முடியாதவர்கள் செவ்வாய்கிழமை 3 மணி முதல் 4.30 மணிவரையிலும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரையிலும் மவுன விரதம் இருக்கலாம். அநாவசிய பேச்சுக்களை தவிர்த்து அம்மனின் 108 போற்றி உச்சரித்து வேண்டுதல் வைத்தால் நிச்சயம் பலிக்கும்.

ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரம் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலத்தில் சிவ ஆலயம் சென்று வணங்கி துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வைக்கும் வேண்டுதல் நிச்சயம் பலிதமாகும். ராகு கால சமயத்தில் கெட்ட வார்த்தைகளையும் அடுத்தவர்களுக்கு தீமை தரக்கூடிய செயல்களையும் செய்யக்கூடாது. அந்த நேரத்தில் நேர்மறையாக மட்டுமே நினைக்க வேண்டும் எதிர்மறை எண்ணங்களை செயல்களை செய்யக்கூடாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+