ஐப்பசி மாத பவுர்ணமி! திருவண்ணாமலை கிரிவலம் செல்ல சரியான நேரம் எது?
திருவண்ணாமலை: ஐப்பசி மாத பவுர்மணியையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலை சுற்றி கிரிவலம் வர உகந்த நேரம் எது என்பதை அந்த கோயில் நிர்வாகமே அறிவித்துள்ளது. பவுர்ணமியில் கிரிவலம் வந்தால் எத்தனை நன்மை என்பது பலருக்கு தெரியும். இந்த பவுர்ணமியுடன் இன்று அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்த பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இது பஞ்ச பூதங்களில் நெருப்பு ஸ்தலமாக அறியப்படுகிறது. அருணாசலேஸ்வரர் கோயிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்ற மலையை சுற்றியுள்ள 14 கி.மீ தூரத்தை பவுர்ணமி மாதங்களில் கிரிவலம் வருவார்கள்.

மாதந்தோறும் பவுர்மணி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். அது போல் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கானோர் கிரிவலம் வருவது வழக்கம். இந்த நிலையில் ஐப்பசி மாதத்தின் பவுர்ணமியான இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோயில் நிர்வாக அறிவித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை காலை 5.40 மணிக்கு தொடங்கி மறுநாள் 16-ஆம் தேதி சனிக்கிழமை காலை 3.33 மணிக்கு நிறைவடைகிறது. எனவே 15 ஆம் தேதியான இன்று இரவு பவுர்ணமி கிரிவலம் செல்வதே உகந்தது என கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐப்பசி மாத பவுர்ணமிக்கு ஏராளமானோர் வருகை தருவர் என்பதால் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications