பேய், பிசாசு கெட்ட கனவுகள் வந்தால் கெட்டது நடக்குமா? கனவில் பாம்பு வந்தால்..?
சென்னை: கெட்ட கனவுகள் காண்பதால் கெட்ட விஷயங்கள் நடக்குமா என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒரு வேளை கெட்ட கனவு வந்தால் என்ன செய்ய வேண்டும். கெட்ட கனவுகளில் இருந்து விலக பெருமாள் வழிபாடு சிறந்த பலன் அளிக்கும்.
இதுகுறித்து குந்தவி என்பவர் தனது சமூகவலைதளங்களில் கூறியிருப்பதாவது: கெட்ட கனவுகள் காண்பதால் கெட்ட விஷயங்கள் நடக்குமா?

கனவு என்பதை யாரும் தடுக்க முடியாத ஒன்று. அப்படியாக, பலருக்கும் பல விதமான எதிர்பாராத கனவுகள் வரும்.மேலும் கனவு என்பது நேர்மறை கனவுகளாக மட்டும் இருக்க வேண்டும் என்று இல்லை.
எதிர்மறை கனவுகளாக கூட இருக்கலாம்.அப்படியாக, எதிர்மறை கனவுகள் கண்டால் வாழ்க்கையில் எதிர்மறை விஷயங்களை தான் சந்திப்போமா?அதற்கான பரிகாரங்கள் என்ன என்று பார்ப்போம். கனவுகளில் நம்முடைய நெருங்கிய சொந்தம் இறந்து போனால் கண்டிப்பாக அச்சம் தோன்றும்.
அவ்வாறு நெருங்கிய சொந்தங்கள் அல்லது நண்பர்கள் இறந்து போவதாக கனவு கண்டால் அவர்களின் ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
அதே போல் சிலருக்கு அடிக்கடி உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே விழுவது போல் கனவுகள் வரும்.அவ்வாறு கனவுகள் வந்தால் அவர்களுக்கு பொருளாதாரத்தில் உயர்வு உண்டாகும் என்பது அர்த்தம்.
சிலருக்கு பாம்பு கொட்டுவது போல் கனவு வந்தால் அவர்களின் திறமை வெளிப்பட போகிறது என்று அர்த்தம்.அதே சமயம் கனவில்,நெருப்பை காணும் பொழுது உங்களை அதிர்ஷ்டம் தேடி வர போகிறது என்று அர்த்தம்.
ஆமை மீன் தவளை போன்ற நீர் வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் நீண்ட நாள் மனதை வருடிய கவலைகள் பறந்து போகும்.இறந்தவருடன் பேசுவது போல் கனவு கண்டால் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் தடை இன்றி நடக்கப்போகிறது என்று அர்த்தம்.
பரிகாரங்கள்:
பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் அடிக்கடி கனவில் வந்து தொந்தரவு செய்தால் கருடன் மீது இருக்கும் விஷ்ணுவின் படத்தை பூஜை செய்து வழிபட்டால் விஷ ஜந்துக்கள் கனவுகள் வராது.
உடல்நலன் குறைபாடு போன்ற விஷயங்களை கனவில் வரும் பொழுது தன்வந்திரி மந்திரம் கூறி தன்வந்திரியை வழிபட வேண்டும். ஆஞ்சநேயர் வழிபாடும் நல்லது.
பேய்,பிசாசு போன்ற மற்றும் சுபகாரியங்கள் நின்று போவது போல் கனவு கண்டால் விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். மேலும்,கெட்ட கனவுகளில் இருந்து விலக பெருமாள் வழிபாடு சிறந்த பலன் அளிக்கும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications