Varalakshmi Nonbu: வரலட்சுமி விரதம் எப்போது கொண்டாடப்படுகிறது? ஆவணியில் இல்லையாமே!
சென்னை: வரலட்சுமி விரதம் (வரலட்சுமி பூஜை, வரலட்சுமி நோன்பு) எப்போது கொண்டாடப்படுகிறது என்பது தெரியுமா? ஆவணிக்கு பதிலாக ஆடியிலேயே வருகிறதே ஏன் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்த வரலட்சுமி நோன்பு என்பது தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
வரலட்சுமி விரதத்தை மேற்கொள்வதால் லட்சுமி தேவியின் ஆசியும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். தங்கள் கணவரின் ஆயுளை நீடிக்கவும் தாலி பாக்கியம் நிலைத்திருக்கவும் அவ்வப்போது வழிபாடுகளை பெண்கள் நடத்துவதுண்டு.

அந்த வகையில் இந்த வரலட்சுமி பூஜையை மேற்கொண்டால் வாழ்வுக்கு தேவையான செல்வத்தையும் சகல சவுபாக்கியங்களையும் அருளும் என்கிறார்கள். பொதுவாக மகாலட்சுமிக்கு உகந்த நாள் வெள்ளிக்கிழமையாகும்.
இந்த நாளில் பெண்கள் வீட்டில் சாமி அறையில் பூஜை, புனஸ்காரங்களை செய்து முடிப்பர். அந்த வகையில் வரலட்சுமி விரதமும் வெள்ளிக்கிழமையில் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் திதிகளின் அடிப்படையில் வளர்பிறையில் வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படுகிறது.
அதாவது ஆவணி மாதத்தில் வரும் முதல் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படும். பவுர்ணமிக்கு பிறகு வரும் வெள்ளிக்கிழமைகள் தேய்பிறை வெள்ளி என்பதால், பவுர்ணமிக்கு முந்தைய வளர்பிறை வெள்ளி என்று வருகிறதோ அந்த நாளில் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கிறது.
பஞ்சாங்கத்தின்படி 2025 ஆம் ஆண்டு வரலட்சுமி விரதம் ஆவணிக்கு பதிலாக ஆடி மாதத்திலேயே வருகிறது. அதாவது ஆவணி மாதத்தின் முதல் நாளே தேய்பிறை பிரதமை என்பதால் ஆவணி பவுர்ணமிக்கு முந்தைய வளர்பிறை வெள்ளிக்கிழமையான ஆகஸ்ட் 8ஆம் தேதி வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் பவுர்ணமியும் ஆகும். அன்று திருவோண நட்சத்திரமும் வருகிறது. வளர்பிறை நாளில் வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படுவதால் ஆடி மாதத்திலேயே வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.
வரலட்சுமி விரதம் வெள்ளிக்கிழமை அன்று வருவதால் முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையை அலங்கரிக்க வேண்டும். வரலட்சுமி பூஜை செய்யும் பொழுது, லலிதா சகஸ்ரநாமம், லக்ஷ்மி சகஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்திரம், அபிராமி அந்தாதி உள்ளிட்டவை பாராயணம் செய்ய வேண்டும்.
வரலட்சுமி விரதத்தின் போது பூஜை அறையை அலங்கரித்து ஒரு கலசத்தில் தேங்காய் வைத்து, அதில் வெள்ளியினாலான அம்மனின் உருவத்தை வைத்து , அதற்கு நகைகள், உடை போட்டு அலங்காரம் செய்ய வேண்டும்.
பிறகு சுவாமிக்கு தேவையான நெய்வேத்திய பொருட்களை வைக்க வேண்டும். அன்றைய தினம் வயதுக்கு வராத குழந்தைகள், கன்னி பெண்கள், பெண்கள் ஆகியோரை அழைத்து வெற்றிலை பாக்கு தர வேண்டும்.
அவரவர் சக்திக்கேற்ப பிளவுஸ் பிட், ஏதேனும் ஸ்டீல் டப்பா, பிளாஸ்டிக் டப்பா, மஞ்சள், குங்குமம், தேங்காய் , வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், திருமாங்கல்யக் கயிறு உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும்.
பெரியவர்கள் யாரேனும் வரலட்சுமி பூஜைக்கு வந்திருந்தால் அவர்களிடம் ஆசி பெற வேண்டும். குங்குமத்தை நெற்றியில் வைத்துவிட சொல்லி திருமாங்கல்யத்திலும் வைத்துக் கொள்ள வேண்டும். அன்றைய தினம் சுத்தபத்தமாக அனைத்தையும் செய்ய வேண்டும். யார் மனதையும் நோகடிக்கும் செயலில் ஈடுபடக் கூடாது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications