அசைவம் சாப்பிட்டு கோயிலுக்கு ஏன் போகக்கூடாது தெரியுமா? பூஜை செய்யலாமா? ஆன்மீகம் சொல்லும் உண்மை என்ன
சென்னை: அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு போகக்கூடாது என்று சொல்கிறார்களே என்ன காரணம் தெரியுமா? அசைவ உணவுகளை சாப்பிட்டுவிட்டு வீட்டிலுள்ள பூஜைகளை செய்யலாமா? அசைவம் சாப்பிட்டுவிட்டு திடீரென கோவிலுக்கு போக வேண்டி நேர்ந்தால் என்ன செய்வது? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
நம்முடைய உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உதாரணத்துக்கு தயிர் அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு தூக்கம் வருவது போல தோன்றும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவது போல தோன்றும்..

மந்தத்தன்மை
அதுபோல அசைவ உணவுகளை சாப்பிடும்போது, அது மந்தநிலையை ஏற்படுத்திவிடும். உடல் மட்டுமல்ல, மனமும் சுத்தமாக இருக்க வேண்டும்.. கோயிலுக்கு செல்லும்போதும் மனம், உடம்பு சுத்தமாக இரக்க வேண்டும். மனதளவில் மந்தத்தன்மையை வைத்துக் கொண்டு, கோயிலுக்குள் சென்றால், அங்குள்ள சக்திகளை உணர முடியாது..
ஏனென்றால், அசைவ உணவுகள் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலை குறைத்துவிடுமாம். எனவேதான், எளிய உணவுகளை அதாவது விரைந்து ஜீரணமாக கூடிய உணவுகளை சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு போக சொல்வார்கள்.
இரக்க குணம்
இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. இரக்க குணம் நிறைந்த இடத்தில் நிச்சயம் பக்தி இருக்கும். பக்தி உள்ள இடத்தில் கடவுளும் இருப்பார் என்பதால் அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்ல கூடாது என்கிறார்கள்.
ஒருவேளை அசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டால், சாப்பிட்ட 3 அல்லது 4 மணி நேரத்திற்கு பிறகு குளித்துவிட்டு கோயிலுக்கு செல்வது நல்லது. முனீஸ்வரன், சுடலை மாடன் போன்ற அசைவ உணவு படையல்களை ஏற்கின்ற கிராம தெய்வங்கள், காவல் தெய்வங்கள் இருக்கும் கோயில்களுக்கு அசைவ உணவு சாப்பிட்டு செல்வதால் எந்த ஒரு பாதகங்களும் இல்லை.
பூஜையறை விளக்குகள்
ஆனால், அசைவம் சாப்பிட்டுவிட்டு வீட்டின் பூஜையறை விளக்குகளையும் ஏற்றக் கூடாது.. மறுநாள் குளித்து, வீட்டை சுத்தம் செய்துவிட்டுதான் விளக்கு ஏற்ற வேண்டும்.. அசைவம் சாப்பிட்டுவிட்டு பக்தி புத்தகங்களைகூட படிக்க கூடாது என்பார்கள்.
அதுபோலவே, ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.. ஒருவேளை பெண்கள் ருத்ராட்சம் அணிந்திருந்தாலும், சமைக்கும் நேரங்களில் தவிர்த்துவிட்டு, பூஜை நேரங்களில் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications