கேரள கோயில்களில் என்னதான் இருக்கிறது? அங்கு தரிசிக்க இத்தனை கூட்டம் அலைமோதுகிறதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளா கோயில்களில் தரிசனம் செய்ய விரும்புவதன் காரணம் என்ன தெரியுமா? கேரளாவில் சிவன், விஷ்ணு என்ற பேதங்கள் எல்லாம் இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். கோயிலில் விபூதி, குங்குமத்திற்கு பதிலாக அரைத்த சந்தனத்தை பிரசாதமாக கொடுக்கிறார்கள்.

இது குறித்து நானறிந்த ஆன்மீகம் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கேரள கோவில்களில் தரிசனம் செய்ய பலர் விரும்புவதின் காரணங்கள்... அங்கே சிவா, விஷ்ணு பேதங்கள் இல்லை. ஏன் திருநீறே இல்லை ... மஹா தேவர் என்றழைக்கப்படும் சிவ சன்னிதானங்களில்கூட !! சந்தனம் மட்டுமே பிரசாதம்.. ஒரே கோவிலில் சிவலிங்கம், மஹாவிஷ்ணு, பகவதி, சர்ப்பக்காவுகள் தரிசனம் செய்யலாம்..( பழைமையான கோவில்களிலேயே..!)

spirtuality kerala

தெருவுக்கு ஒரு புதிய கோவில், அதற்கு ஒரு தர்மகர்த்தா குழு என்றெல்லாம் இல்லை..! கோவிலுக்குள் சாதி சண்டைகள், முதல் மரியாதை, பரிவட்டம் கட்டுதல் இல்லை... எந்த கோவிலிலும் கட்டண தரிசனம், விரைவு தரிசனம், " இலவச" தரிசனம் கிடையாது...!

தந்திரிகள் , கருவறை பூஜையில் உள்ளோர், இயற்கை உபாதையை கழிக்க வேண்டியிருந்தால்.. மீண்டும் மீண்டும் குளித்த பின்பே கருவறைக்குள் செல்கிறார்கள்(குருவாயூரில் கண்டது )...

கோவில் பிரசாதம் என்று மெதுவடை, புளியோதரை, அதிரசம் என்று கோவிலுக்குள் மினி ஹோட்டல் கிடையாது. கோவில் பிரகாரத்திற்குள், ஏன் வளாகத்திற்குள்ளேயே யாரும் உணவருந்துவதில்லை .

கோவில் வளாகத்திற்குள் அன்னதானக் கூடங்கள் இல்லை... நரேந்திர மோடி வந்தாலும் வேட்டி, மேல் வஸ்திரத்துடன் மட்டுமே அனுமதி...( பத்மநாபசுவாமி ஆலயம்) இந்து அல்லாதவர்க்கு அனுமதி இல்லை (குருவாயூர் ஶ்ரீ கிருஷ்ணன் கோவில்)

கோவில் உள்ளே செல்வதற்கு முன் ஆண்கள் சட்டையை கழட்டிவிட்டுதான் செல்ல வேண்டும்!! பெண்கள் சில கோவிலுக்குள் செல்லக் கூடாது என்ற கட்டுபாடு உள்ளது. எவ்வளவு பெரிய பணக்காரணாக இருந்தாலும், அரசியல்வாதியாக இருந்தாலும்.. வரிசையில்தான் வரவேண்டும்..!! சிறப்பு தரிஸணம் கட்டணம் ஏதும் கிடையாது.. ஏன்? பொதுவாகவே கட்டணமே கிடையாது!!

அர்ச்சகர்கள் இரண்டு வேளையும் குளித்துவிட்டுதான் கருவறைக்குள் செல்வார்கள். பூஜை முடியும் வரை யாருக்காகவும், எதுக்காகவும் பூஜையை பாதியில் நிறுத்துவதில்லை!! அரைத்த சந்தனம்தான் சாற்றுவார்கள். பக்தர்கள் யாரும் அவர்கள் இஷ்டத்திற்கு கோவிலை சுற்றி எங்குமே விளக்கு ஏற்ற முடியாது.. கோவிலில் எரியும் பொதுவான விளக்கிலேயே கொண்டுவந்த எண்ணெய்யை விட்டுவிட வேண்டும்..

அதிகாலை நிர்மால்ய தரிஸணம் உண்டு!! பூஜைநேரத்திற்கு பூஜை செய்துவிடுவார்கள். பூஜைக்கு கட்டணம் செலுத்தியவர்கள் கோவில் நிர்வாகம் சொல்லும் நேரத்திற்கு வந்துவிட வேண்டும்.. இல்லையேல் அவர்களுக்காக காத்திருந்து பூஜை செய்ய மாட்டார்கள்!!

வெளியிலிருந்து கொண்டுவரும் பூக்களையோ, மாலைகளையோ, பிரஸாதங்களையோ, கருவறைக்குள் அனுமதிப்பல்லை!! அர்ச்சர்கள் கோவிலை விட்டு வேறு எங்கும், யார் வீட்டுக்கும் பூஜைக்கு கோவில் நேரத்தில் செல்வதில்லை!! கோவில் சாற்றும்வரை சன்னதியிலேயே அர்ச்சர்கள் இருப்பார்கள்!! இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+