பூஜை அறையில் எவர்சில்வரில் பூஜை பாத்திரங்களை வைக்கக் கூடாது ஏன் தெரியுமா?
சென்னை: பூஜை அறையில் நாம் பயன்படுத்தும் தீபகொலுசு, மணி, பஞ்ச பாத்திரம், ஊதுபத்தி ஸ்டான்ட் உள்ளிட்டவை வெள்ளியிலோ அல்லது செம்பிலோ இருக்கும். ஆனால் யார் வீட்டிலும் எவர் சில்வரில் பூஜை பாத்திரங்கள் இருக்காது ஏன் தெரியுமா?
ஒரு வீட்டின் அழகு என்பதை பூஜை அறையை வைத்துதான் முடிவு செய்வார்கள். வீடு லட்சுமி கடாட்சத்துடன் இருக்கிறதா என்பதையும் பூஜை அறையே காட்டுகிறது. வீட்டில் நன்மைகள் அதிகம் கிடைக்க வேண்டுமாயின் பூஜை அறையில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் சரியாக இருக்க வேண்டும்.

கோயிலாக இருந்தாலும் சரி வீடாக இருந்தாலும் சரி பூஜை செய்வதற்கென சில வரன்முறைகள் இருக்கின்றன. அதன்படிதான் எல்லாம் செய்ய வேண்டும். பூஜை அறை என்பது இறைவன் குடியிருக்கும் இடம். எல்லாவற்றுக்கும் மேலாக பாசிட்டிவ் வைப்ஸ் நிறைந்திருக்கும் இடமாகவும் இது அறியப்படுகிறது.
அதனால்தான் வீடு கட்டும்போது பூஜை அறை எப்படி இருக்க வேண்டும். எந்த திசையில் இருக்க வேண்டும் என்பதை பார்த்து பார்த்து கட்டுகிறோம். அது போல் சாமி படங்களை எந்த திசையில் மாட்ட வேண்டும் என்ற வாஸ்து சாஸ்திர முறையும் இருக்கிறது. இதன்படி முழுமையாக கட்டிவிட்டு பூஜை அறையில் சில ஒவ்வாத பொருட்களை வைத்தால் அதுவும் தவறுதான்.
பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்கள் மிகவும் விசேஷமானவை. அவை பூஜை முடிந்தாலும் பூஜை அறையில்தான் வைத்திருக்க வேண்டும். பூஜை அறையில் தாம்பால தட்டு, விளக்கு, தீபகொலுசு, மணி, பஞ்ச பாத்திரம் ஆகியவை எந்த உலோகத்தால் இருக்க வேண்டும் என்பது முக்கியமானது.
இவை வெள்ளியிலோ தங்கத்திலோ ஐம்பொன்னிலோ இருப்பது அவரவர் வசதியை பொருத்தது. ஆனால் வசதி இல்லாதவர்கள் செம்பு அல்லது பித்தளையால் செய்யப்பட்ட பூஜை சாமான்களை பயன்படுத்த வேண்டுமே தவிர அதை விட்டுவிட்டு எவர்சில்வரில் பயன்படுத்தவே கூடாது. மண்ணால் செய்யப்பட்ட பொருட்களை கூட பயன்படுத்தலாம்.
பொதுவாக பூஜை பொருட்கள் செய்யப்படும் உலோகங்களுக்கு இறை சக்தியை ஈர்க்கும் தன்மை உள்ளது. ஆனால் எவர்சில்வரில் இறை சக்தியை ஈர்க்கும் தன்மை கிடையாது, அந்த சக்தியை வெளியிடும் தன்மையும் கிடையாது. எனவே தெய்வ வழிபாட்டுக்கு எவர்சில்வரை பயன்படுத்தக் கூடாது.
எவர்சில்வர் பாத்திரத்தில் நெய்வேத்தியம் செய்யக் கூடாது. ஹோமம் செய்யும் போது அதற்கான பொருட்களை வைக்க எவர்சில்வர் தட்டு அல்லது கிண்ணங்களை பயன்படுத்தவே கூடாது. பூஜை அறையில் தீர்த்தம் வைக்க எவர்சில்வர் பாத்திரத்தை பயன்படுத்தக் கூடாது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications