வாழை இலையில் உணவு அருந்திய பிறகு உள்பக்கமாக மடிப்பதற்கான காரணம் என்ன?
சென்னை: வாழை இலையில் உணவு அருந்திய பின்னர் அதை உள்பக்கமாக மடிப்பதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து உங்கள் உலகம், உங்கள் செய்திகள் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்றைக்கும் திருமணம், விருந்து போன்ற சுபநிகழ்ச்சிக்கு சென்றால் அங்கே உணவுகளை வாழை இலையில் பரிமாறுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.

வாழை இலையில் உணவு அருந்துவது என்பது தமிழர்களின் தொன்றுதொட்ட பழக்கமாக உள்ளது.
அவ்வாறு வாழை இலையில் உணவு பரிமாறுவதற்கு முன் அதில் தண்ணீர் தெளிக்கும் வழக்கம் இருக்கிறது.
இதற்கான காரணம்
வாழை இலையில் இயற்கையாகவே பூச்சிகள், தூசி, அழுக்கு நுண்ணுயிர்கள் ஒட்டிக் கொண்டிருக்கும்.
ஆகவே வாழை இலையில் தண்ணீர் தெளிப்பதன் மூலம் பூச்சிகளும், நுண்ணுயிர்களும் அகற்றப்பட்டு உணவு பாதுகாப்பாக இருக்கும்.
மேலும் தண்ணீர் தெளிப்பதன் காரணமாக இலை உறுதியாக இருக்கும். உணவு உண்ணும் வேளையில் இலை கிழிந்து போவது போன்ற பிரச்னைகள் ஏற்படாது.
வாழை இலையில் தண்ணீர் தெளிப்பதை புனிதமான செயலாக நம் முன்னோர்கள் கருதினர். தெய்வீக சக்தியால் ஆசிர்வதிக்கப்படுவதாக கருதப்படுகிறது.
தண்ணீர் தெளிப்பதன் மூலமாக நமக்கு உணவு வழங்கிய தெய்வத்திற்கு நன்றி தெரிவிப்பதாக அர்த்தம்.
வாழை இலையில் உணவு அருந்திய பின்னர் அதை உள்பக்கமாக மடிப்பது ஏன் தெரியுமா?
வாழை இலையில் உணவு அருந்திய பின்னர் அதை உள்பக்கமாக மடிப்பதற்கான காரணம், உணவு தயாரித்தவருக்கும், அதை பரிமாறியவருக்கும் மரியாதை செலுத்தும் விதமாக கருதப்படுகிறது.
வாழையிலையை பயன்படுத்துவது நம் முன்னோர்களிடமிருந்து நமக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். வாழை இலையில் சூடாக உணவை வைத்து உண்ணும் போது அதில் இருக்கும் குளோரோபில் நம் உணவுடன் கலந்துவிடும்.
இது உணவு செரிப்பதற்கு உதவுவதோடு மட்டுமில்லாமல் வயிற்றுப் புண்ணையும் ஆற்றும். வாழை இலையில் உணவு உண்ணும் போது அது நம் பசியை மேலும் தூண்டும்.
வாழை இலையில் உணவு அருந்தும் போது உடல் சம்மந்தமான பிரச்னைகள் வருவதில்லை. இதனால் நோய் இன்றி வாழ்வார்கள் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications