அப்படியே மொத்தமாக பிஎஸ்என்எல் பக்கம் தாவும் வாடிக்கையாளர்! ஒரே வாரத்தில் 2.75 லட்சம் பேர் சேர்ப்பு
டெல்லி: தனியார் டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை சமீபத்திய கட்டண உயர்வை அறிவித்தன. இந்த கட்டண உயர்வு கடந்த ஜூலை 3ம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், அதன் பிறகு அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி மக்கள் வருவது அதிகரித்துள்ளது.
நமது நாட்டில் டெலிகாம் துறை ரொம்பவே முக்கியமானது. இணையத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த டெலிகாம் நிறுவனங்கள் தான் எடுத்துச் செல்கின்றன.

முன்பு டெலிகாம் துறையில் பல நிறுவனங்கள் இருந்த நிலையில், சமீபத்திய ஆண்டுகளில் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இப்போது, ஜியோ, ஏர்டெல், விஐ நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. அதேபோல அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் உள்ளது.
டெலிகாம் நிறுவனங்கள்: இதில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தான் டெலிகாம் துறை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கிடையே சமீபத்தில் ஜியோ நிறுவனம் தனது கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்தது. ஜியோவின் கட்டணங்கள் 12% முதல் 25% வரை உயர்த்தப்பட்டன. ஜியோவை தொடர்ந்து ஏர்டெல், வோடவோன் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்கள் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்தன. இந்த கட்டண உயர்வு ஜூலை 3ம் தேதி முதல் அமலுக்கு வந்தன.
இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்த போதே பொதுமக்கள் பலரும் இதை எதிர்த்தன. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பிற்கும் இது தொடர்பாகப் புகார்களை அளித்தனர். இருப்பினும், கடந்த 3 ஆண்டுகளாக டெலிகாம் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்றும் கட்டண உயர்வுக்கு பிறகும் கூட உலகிலேயே மிகக் குறைந்த கட்டணத்தைக் கொண்ட நாடாக இந்தியாவே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்கள்: இருப்பினும், பொதுமக்கள் இந்த கட்டண உயர்வால் மகிழ்ச்சியாக இல்லை. இதற்கிடையே விலை உயர்வு அமலுக்கு வந்த உடன் பொதுமக்கள் பலரும் அப்படியே பிஎஸ்என்எல் பக்கம் மாறி வருகிறார்களாம். கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் சுமார் 27.5 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஸ்என்எல்: மொபைல் நம்பரை மாற்றாமல் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்ற போர்டிங் ஆப்ஷன் இருக்கிறது. இந்த ஆப்ஷனை பயன்படுத்தியே பலரும் மற்ற டெலிகாம் நிறுவனங்களில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறி வருகின்றனர்.
ஜூலை 3ம் தேதி கட்டண உயர்வு அமலுக்கு வந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய மூன்று தனியார் நிறுவனங்களில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்ததிலிருந்து மட்டும் சுமார் 2.50 லட்சம் பேர் மற்ற நிறுவனங்களில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வந்துள்ளனர்.
தக்க வைக்க நடவடிக்கை தேவை: தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் திட்டங்கள் குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக மலிவு விலை திட்டங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தான் அதிகம் இருக்கிறது. இதன் காரணமாகவே பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதேநேரம் இந்த வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க வேண்டும் என்றால் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது நெட்வொர்க் தரத்தை மேம்படுத்த வேண்டும். மேலும், 4G கவரேஜை மேம்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications