தீபாவளி பரிசு.. வெறும் ரூ.799 விலையில் ஜியோ பாரத் புதிய மாடல் போன் அறிமுகம்.. 4 சிறப்பு வசதிகள்
சென்னை: தமது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளிப் பரிசாக, பேசிக் 4 ஜி செல்போன்களை வெறும் ரூ.799-க்கு அறிமுகப்படுத்தியுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். ஜியோ பாரத் செல்போன்கள், குழந்தைகள் சமூக ஊடக கவனச் சிதறல்கள் இல்லாமல், ஸ்மார்ட் லொக்கேஷன் மற்றும் கால் மேனேஜ்மெண்ட் மூலம் தொடர்பில் இருக்க உதவும்.
பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ பாரத் புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ பாரத் போனை பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகள் மற்றும் பெரியோர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் குடும்பங்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு மலிவான விலையில் ஜியோ பாரத் போன் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ பாரத் புதிய மாடல் அறிமுகம்
இந்தியா மொபைல் காங்கிரஸ்-2025 மாநாட்டில் ஜியோ பாரத் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட பேட்டரி ஆயுள், ரியல் டைம் லொக்கேஷன் தகவல்கள் மற்றும் கால் மேனேஜ்மெண்ட் கட்டுப்பாடுகள் போன்ற பல அம்சங்களுடன் ஜியோ பாரத் போன் அறிமுகமாகியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயனர்களின் பாதுகாப்பை முக்கிய நோக்கமாக கருத்தில் கொண்டு, ஜியோ போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜியோ நிறுவனம் மேலும் கூறுகையில், "தற்போது மார்க்கெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கவனிச்சிதறல்களும் ஆபத்துகளும் நேரிடுகின்றன. இந்நிலையில் குழந்தைகள் மற்றும் பெரியோர்களை ஸ்மார்ட்போன்களின் ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க விரும்பும் பெற்றோர்களுக்கு, ஜியோ பாரத் போன் மிகச்சிறந்த மாற்றாக இருக்கும்.
ஜியோ பாரத் போன்களில் நான்கு முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பாதுகாப்பு அம்சங்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்" என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
4 பாதுகாப்பு அம்சங்கள்
1. இருப்பிட கண்காணிப்பு (Location Monitoring): இதன் மூலம் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் செல்லும்போது அவர்களின் ரியல் டைம் லொக்கேஷனை பெற்றோர்கள் கண்காணிக்க முடியும்.
2. யூசேஜ் மேனேஜர்: இந்த அம்சத்தின் மூலம் தெரியாத நபர்களின் அழைப்புகளை தடுத்தல், நம்பகமான அழைப்புகளை மட்டும் அனுமதித்தல் மற்றும் கவனச்சிதறல்களை கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
3. போன் கண்காணிப்பு: இணைய வசதி மற்றும் பேட்டரி அளவு ஆகியவற்றின் நேர கண்காணிப்பை பெற்றோர்களால் பார்க்க முடியும். இதன் மூலம் ஜியோ பாரத் போன் போனில் பேட்டரி தீர்ந்து விடுவது மற்றும் மிஸ்டு கால்கள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
4. பேட்டரி: ஜியோ பாரத் போன்களில் குறைந்தபட்சம் ஏழு நாட்கள் வரை பேட்டரி நீடிக்கும் என்பதால், முக்கியமான நேரங்களில் போன் செயல்படுவது உறுதி செய்யப்படும். மேலும் போன்களை அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
அமேசான், ஜியோ ஸ்டோர்கள், ஜியோ மார்ட், முன்னணி மொபைல் கடைகள் மற்றும் ஸ்விகி இன்ஸ்டாமார்ட் போன்ற இடங்களில் ஜியோ பாரத் போன்கள் கிடைக்கும். இந்த ஜியோ பாரத் போன்களின் விலை ரூ.799 முதல் தொடங்குகிறது.
ரீசார்ஜ் பிளான்
ரூ.123-க்கு ரீசார்ஜ் செய்தாலே 28 நாள்களுக்கு இலவச அழைப்புகள், தினமும் 500 எம்பி டேட்டா, 3 மாதங்களுக்கு சேர்த்து ரூ.369-க்கு ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக ஒரு மாதத்துக்கு இலவச சேவைகள் என மிகவும் மலிவான கட்டணத்தில் 4ஜி சேவைகளை ஜியோ பாரத் மூலம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications