Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பெகாசஸ்" நினைவிருக்கா.. ஐபோன்களில் வந்த பரபர அலர்ட்.. உடனே செய்ய வேண்டியது என்ன! ஆப்பிள் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெகாசஸ் ஸ்பைவேர் செயலியைக் குறிப்பிட்டு ஆப்பிள் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு அலர்ட் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

பாதுகாப்பு கருத்தில் இப்போது பலரும் ஆப்பிள் சாதனங்களையே பயன்படுத்தி வருகிறார்கள். ஆன்டிராய்டை காட்டிலும் ஐபோன்களில் பாதுகாப்பு அம்சம் அதிகம் என்றாலும் அதை ஹேக் செய்யவே முடியாது என்றெல்லாம் சொல்ல முடியாது.

What is the new Apple Mercenary Spyware Threat message that 92 Nation users including India receive

பல எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் பெகாசஸ் உளவு செயலி ஹேக் செய்யப்பட்டதாகக் கடந்த 2021 முன்பு புகார் அளித்தது பலருக்கும் நினைவு இருக்கலாம்.

எச்சரிக்கை மெசேஜ்: இந்தச் சூழலில் சில மாதங்கள் கழித்து இப்போது ஆப்பிள் நிறுவனம் மொபைலை தாக்கும் ஸ்பைவேர் குறித்து இந்தியா உட்பட 92 நாடுகளில் உள்ள தனது பயனர்களுக்கு வார்னிங் மெசேஜை அனுப்பியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டது. இந்த எச்சரிக்கை மெசேஜ் குறித்து ஆப்பிள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் அவர்கள் பெகாசஸ் ஸ்பைவேரையும் குறிப்பிடுகிறார்கள்.கடந்த 2021இல் பெகாசஸ் மூலம் தங்கள் மொபைல்கள் உளவு பார்க்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இஸ்ரேல் உளவு அமைப்பு இந்த பெகாசஸ் செயலியை உருவாக்கி இருந்தது. இது அரசு மற்றும் அரசு சார்ந்த ஏஜென்சிகள் மட்டுமே வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் கூறியது பதற்றத்தை மேலும் அதிகரித்தது. இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் குழு ஒன்றை அமைத்தது. அவர்கள் புகார் அளித்த 29 பேரின் மொபைல்களில் பெகாசஸ் ஸ்பைவேரை கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள்: இதுபோன்ற ஸ்பைவேர்களால் பாதிக்கப்பட்ட பயனாளர்கள் எச்சரிக்கும் வகையில் ஆப்பிள் நிறுவனம் இந்த செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், "வழக்கமான சைபர் அட்டாக் மற்றும் வைரஸ் தாக்குதல்களை விட இவை சிக்கலானவை. ஏனென்றால் அதனால் மிக குறைந்த அளவிலேயே நபர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் இதுபோன்ற தாக்குதல்களைக் கண்டறிதல் மற்றும் தடுப்பது மிகவும் கடினம்..

பெகாசஸ்: பெரும்பாலும் இதுபோன்ற தாக்குதல்கள் குறிப்பிட்ட அரசு அல்லது அரசு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகிறது. என்எஸ்ஓ குழுமம் உருவாக்கிய பெகாசஸ் போலப் பல மால்வேர்களை நாம் உதாரணமாகச் சொல்லலாம். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தனிநபர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாகப் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த 2021 முதல் 150 நாடுகளில் உள்ள பயனர்களுக்குப் பல முறை எச்சரிக்கை அனுப்பி உள்ளோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

என்ன செய்ய வேண்டும்: மேலும், இதுபோல எச்சரிக்கை மெசேஜில் பயனாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மெசேஜை பெறும் யூசர்கள் தங்கள் ஐபோன்களில் Settings > Privacy & Security > Lockdown Mode-க்கு செல்ல வேண்டும். இதை ஆன் செய்ய சில நொடிகள் கூட ஆகாது. இருப்பினும், இவை மிகச் சிறந்த பாதுகாப்பை நமக்குத் தருவதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மேலும், இந்த மெசேஜ் வந்த உடனேயே ஐபோனை சமீபத்திய அப்டேட் செய்ய வேண்டும். ஐவாட், மேக் போன்ற வேறு ஆப்பிள் சாதனங்கள் பயன்படுத்தினால் அதையும் அப்டேட் செய்ய வேண்டும். மேக் அல்லது ஐபேடிலும் இதேபோல இல் லாக் டவுன் ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். இது நமது சாதனத்திற்குத் தேவையான பாதுகாப்பு தரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+