"50 நாள் இலவசம்.." சரியாக ஐபிஎல் தொடரின்போது ஜியோவில் அள்ளி கொடுத்த அம்பானி.. கடைசியில் ஒரு ட்விஸ்ட்
டெல்லி: ஜியோ நிறுவனம் தனது ஏர் பைபர் சேவையை 50 நாட்கள் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. ஆனால், இதில் சின்னதாக ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் டெலிகாம் துறையில் ஜியோ நிறுவனம் வேகமாக வளர்ந்து வருகிறது. இருக்கும் கஸ்டமர்களை தக்க வைக்கவும் புதிய கஸ்டமர்களை சேர்க்கவும் ஜியோ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும், ஸ்மார்ட்போனை தாண்டி வேறு துறைகளிலும் ஜியோ நுழைய முயன்று வருகிறது. அப்படி ஜியோ அறிமுகப்படுத்தியது தான் ஜியோ ஏர்ஃபைபர்.
ஜியோ: இதன் மூலம் அதிவேகத்தில் நிலையான இணையச் சேவை பெற முடியும் என்றே அவர்கள் விளம்பரப்படுத்தினார்கள். இந்த ஜியோ ஏர் ஃபைபர் இப்போது இந்தியாவில் 5352 நகரங்களில் கிடைக்கிறது. இதற்கிடையே இது குறித்து மக்களிடையே விளம்பரப்படுத்த, ஜியோ நிறுவனம் தனது சேவையை 50 நாட்களுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜியோவில் புதிய வாடிக்கையாளர்களுக்கும் சரி, ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களும் சரி இது பொருந்தும் என்று அரிக்கப்பட்டுள்ளது.
இப்போது தான் ஐபிஎல் போட்டிகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், சரியான நேரத்தில் தான் இந்த ஆப்பரை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளை லைவில் ஸ்ட்ரீமிங் செய்யப் பலரும் இப்போது ஜியோ சினிமாஸ் பக்கம் வரும் நிலையில், சரியான நேரத்தில் தான் ஜியோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைவருக்கும் 50 நாள் இலவசம் என்றாலும் வழக்கம் போல சில கண்டிஷன்கள் இருக்கிறது. அவை குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
2 கண்டிஷன்கள்: இந்த ஜியோ ஏர் ஃபைபர் 50 நாட்கள் இலவச சேவையை நீங்கள் பெற வேண்டும் என்றால் நீங்கள் ஏற்கனவே மொபைலில் 5ஜி சேவையைப் பயன்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 வாரங்களுக்கு மேல் அந்த 5ஜி சேவையை நீங்கள் பயன்படுத்தி இருக்க வேண்டும். அதாவது மொபைல் மூலம் நீங்கள் கடந்த 2 வாரம் தொடர்ச்சியாக 5ஜி சேவையைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். அல்லது உங்களிடம் ஏற்கனவே ஏர் ஃபைபர் இருந்தால் அதில் இரண்டு வாரங்களுக்குத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
இது கூட ஓகே நம்மில் பெரும்பாலானோர் 5ஜி சேவையைப் பயன்படுத்தித் தான் வருகிறார்கள். இதில் பிரச்சினை இல்லை. ஆனால் அடுத்த விஷயம் தான் பெரிய ட்விஸ்ட்.. அதாவது ரூ.599 அல்லது அதை விட அதிக தொகைக்கு நீங்கள் 6 அல்லது 12 மாதங்களுக்கான ஒடிடி சேவைக்கான கட்டணத்தைச் செலுத்தி இருக்க வேண்டும். இந்த கட்டணத்தைச் செலுத்தினால் அடுத்த 24 மணி நேரத்தில் உங்களின் மை ஜியோ கணக்கில் ஏர் பைபருக்கான இலவச சேவை வரவு வைக்கப்படும்.
கடைசி தேதி: இந்த ஆப்பர் கடந்த மார்ச் 16ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில நேரங்களில் ஜியோ முன்கூட்டியே கூட முடித்துக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் இலவச சேவை நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்ப முடியாது.
இப்படி சில ட்விஸ்ட்கள் இருந்தாலும் இலவசமாக ஏர் பைபரை பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது சரியான ஒரு ஆப்பராகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications