ரஜினி- சிவாஜி- சுந்தரராஜன் நடித்த அந்த படத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா? கலக்கிய மைக்கேல் டிசோசா!
சென்னை: வில்லனாக சுந்தரராஜன் நடித்த நான் வாழ வைப்பேன் என்ற படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் துப்பாக்கியில் இப்படி ஒரு ட்விஸ்டா என்ற அளவுக்கு காட்சிகள் நகர்ந்துள்ளது.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: 'நான் வாழவைப்பேன்' படத்தில் வில்லன் சுந்தர்ராஜனை ரஜினி க்ளைமேக்ஸில் மடக்குவார். சுந்தர்ராஜன் சுட்டதால் ரஜினிக்கு குண்டடி பட்டு விடும். அப்போ சிவாஜி போலீசை கூப்பிட போய்விடுவார். ரஜினி கேரக்டர் மைக்கேல் டிசோசா.

சுந்தர்ராஜனை உட்கார வச்சு அவர் எதிரே நீட்டிய துப்பாக்கியோடு ரஜினி அசைய விடாமல் வச்சிருப்பார். சுந்தர்ராஜன் சைலண்டாக ரஜினி சாகும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பார். ரஜினியோட உயிர் கொஞ்சம் கொஞ்சமா போய்க் கொண்டிருக்கும். கண்கள் செருகும். அந்த நேரத்துக்காக காத்திருப்பார் சுந்தர்ராஜன்.
எதிர்பார்த்தது போல ரஜினி உயிர் பிரிய சுந்தர்ராஜன் எழுந்து வந்து அவரை உதைப்பார். அதை வைத்து சிவாஜியை சுடும் ரஜினிக்கு குண்டடி கிடைக்கும். அந்த துப்பாக்கி யாருடையதுன்னா சுந்தர்ராஜனுடையது. சந்திப்பு இந்த இடத்தில் என உறுதி ஆனதால் சுந்தர்ராஜன் முதல் நாளே வந்து துப்பாக்கியை ஒளித்து வைப்பார். இப்போ ஒரு ப்ளாஷ்பேக்.
இதில் சிவாஜி, ரஜினியோட துப்பாக்கியை எடுத்திடுவார். அதை வைத்து ரஜினியையே மிரட்டுவார். ரஜினி அசால்ட்டாக ஒரு சிகரெட்டை பற்ற வைத்து விட்டு "இந்தக் கொலை விஷயமா எனக்கு சில விஷயங்கள் தெரியும். அதை உன்கிட்ட சொல்லணும்னா என் துப்பாக்கியை என் கிட்ட கொடு" என்பார்.
சிவாஜி துப்பாக்கியை கொடுத்ததும் அதை சுட்டுக்காட்டி விட்டு "நான் என் துப்பாக்கில தோட்டாவே போடுவதில்லை" என்பார். திரைக்கதை உத்திப்படி ரஜினி இந்த தோட்டா இல்லாத துப்பாக்கியை வைத்து தானே மிரட்டி இருக்க வேண்டும். தோட்டா இல்லை என ரஜினிக்கு தெரியும். சுந்தர்ராஜனுக்கு தெரியாது. ரஜினி உயிர் பிரிந்ததும் சுந்தர்ராஜன் துப்பாக்கியை எடுத்துப் பார்க்க அதில் தோட்டாக்களே இல்லை. அப்படி திரைக்கதை அமைத்திருந்தால் இன்னும் சுவையான க்ளைமேக்ஸ் அமைந்திருக்கும் சண்டைக்காட்சிகளோடு.
ஏனோ திரைக்கதை ஆசிரியர் ஒரு லீட் வசனத்தை முன்பே கொடுத்து விட்டு பின் அதை மறந்து போய் விட்டார்.... இவ்வாறு செல்வன் அன்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications