ஜீ தமிழில் திடீரென முடிவுக்கு வரும் டாப் சீரியல்.. கதாநாயகன் வெளியிட்ட போஸ்ட்.. இதுதான் காரணமா?
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் முடிவுக்கு வருவதாக அந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் ஆரியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்து இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஆனாலும் இந்த சீரியலில் அடுத்தடுத்து பல நடிகைகள் விலகி விட்டனர். அதிலும் இந்த சீரியலின் கதாநாயகி சக்தி கேரக்டரில் நடித்த மோஷிதா பாய் தான் திடீரென்று விலகுவதாக பதிவு வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தார்.

அம்மா மற்றும் மகள்களின் கதையை மையப்படுத்திய இந்த சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்த நடிகையும் திடீரென்று விலகி இருந்தார். ஆரம்பத்தில் இந்த சீரியலில் அம்மா மீனாட்சி கேரக்டரில் அர்ச்சனா நடித்து வந்தார். ஆனால் அவர் சீரியலில் இருந்து விலகிய பிறகு அவருக்கு பதிலாக நடிகை ஸ்ரீ ரஞ்சனி நடித்து வருகிறார்.
சக்தி மற்றும் வெற்றியின் காதல் மற்றும் மோதல் தான் இந்த சீரியலில் மேலும் சுவாரஸ்யம் ஏற்படுகிறது. இவர்கள் இருவருக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். வெற்றி கேரக்டரில் நடிகர் ஷபானாவின் கணவர் தான் நடித்து வருகிறார். ஷபானா ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஆரியன் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார்.
அப்போதுதான் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பிறகு கல்யாணமும் முடிந்தது ஆனால் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ஆரியன் விலகி இருந்தார். அதற்கு பிறகு தான் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் ஆரியனுக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் அவர் நேற்று தன்னுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.

அப்போது ரசிகர்கள் அவரிடம் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் முடிவுக்கு வருகிறதா அண்ணா என்று கேட்க அதற்கு ஆமாம் என்று பதில் கொடுத்திருக்கிறார். அதுபோல மீனாட்சி பொண்ணுங்க சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறது, இன்னொரு பெரிய நிகழ்ச்சியில் நான் உங்களை சந்திக்கிறேன் என்று ஆரியன் தெரிவித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பிரைன் டைமில் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் அதற்கு பிறகு திடீரென்று அந்த சீரியல் மாலை 6:00 மணிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் டிஆர்பி குறைய தொடங்கியிருக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்த சீரியல் முடிவுக்கு வருகிறதா என்று கேள்விகளும் எழுந்து வருகிறது.
-
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications