ஜீ தமிழில் திடீரென முடிவுக்கு வரும் டாப் சீரியல்.. கதாநாயகன் வெளியிட்ட போஸ்ட்.. இதுதான் காரணமா?
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் முடிவுக்கு வருவதாக அந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் ஆரியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்து இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஆனாலும் இந்த சீரியலில் அடுத்தடுத்து பல நடிகைகள் விலகி விட்டனர். அதிலும் இந்த சீரியலின் கதாநாயகி சக்தி கேரக்டரில் நடித்த மோஷிதா பாய் தான் திடீரென்று விலகுவதாக பதிவு வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தார்.

அம்மா மற்றும் மகள்களின் கதையை மையப்படுத்திய இந்த சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்த நடிகையும் திடீரென்று விலகி இருந்தார். ஆரம்பத்தில் இந்த சீரியலில் அம்மா மீனாட்சி கேரக்டரில் அர்ச்சனா நடித்து வந்தார். ஆனால் அவர் சீரியலில் இருந்து விலகிய பிறகு அவருக்கு பதிலாக நடிகை ஸ்ரீ ரஞ்சனி நடித்து வருகிறார்.
சக்தி மற்றும் வெற்றியின் காதல் மற்றும் மோதல் தான் இந்த சீரியலில் மேலும் சுவாரஸ்யம் ஏற்படுகிறது. இவர்கள் இருவருக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். வெற்றி கேரக்டரில் நடிகர் ஷபானாவின் கணவர் தான் நடித்து வருகிறார். ஷபானா ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஆரியன் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார்.
அப்போதுதான் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பிறகு கல்யாணமும் முடிந்தது ஆனால் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ஆரியன் விலகி இருந்தார். அதற்கு பிறகு தான் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் ஆரியனுக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் அவர் நேற்று தன்னுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.

அப்போது ரசிகர்கள் அவரிடம் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் முடிவுக்கு வருகிறதா அண்ணா என்று கேட்க அதற்கு ஆமாம் என்று பதில் கொடுத்திருக்கிறார். அதுபோல மீனாட்சி பொண்ணுங்க சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறது, இன்னொரு பெரிய நிகழ்ச்சியில் நான் உங்களை சந்திக்கிறேன் என்று ஆரியன் தெரிவித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பிரைன் டைமில் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் அதற்கு பிறகு திடீரென்று அந்த சீரியல் மாலை 6:00 மணிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் டிஆர்பி குறைய தொடங்கியிருக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்த சீரியல் முடிவுக்கு வருகிறதா என்று கேள்விகளும் எழுந்து வருகிறது.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications