நடிகை சித்தாரா பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறிய கருத்து.. கல்யாணம் பண்ணாததற்கு காரணம் அந்த நபரா?
சென்னை: பிரபல நடிகை சித்தாரா பல வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் அவரைப் பற்றி நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் நடிகை சித்தாரா இத்தனை வருடங்கள் ஆகியும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் ஒரு நபர் தான் என்றும் மேலும் சில தகவல்களையும் கூறியிருக்கிறார்.

அத்தோடு நடிகை சித்தாரா பற்றி பயில்வான் ரங்கநாதனின் பேட்டிக்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை சித்தாரா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முப்பது வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் 1986 ஆம் ஆண்டு காவிரி என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.
அத்தோடு புதுப்புது அர்த்தங்கள், புதுப்புது ராகங்கள், புதுவசந்தம் புரியாத புதிர் என்று பல திரைப்படங்களிலும் அந்த நேரத்தில் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தாஇருந்தார். குறிப்பாக இவருக்கு 1990 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான புது வசந்தம் என்ற திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் பிரபலத்தை கொடுத்தது. பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்று இருக்கும் இவருடைய ஹோம்லியான முகம் பலருடைய ஃபேவரட் ஆகி இருந்தது.
அந்த நேரத்தில் பெண் பார்க்கும்போது கூட நடிகை சித்தாரா மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னவர்களும் ஏராளம். இந்த நிலையில் இவர் கதாநாயகியாக நடித்ததைத் தொடர்ந்து அக்கா, அம்மா, என்று பல கேரக்டரில் இப்போ வரைக்கும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் இப்போது வரைக்கும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகத்தான் வசித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் நடிகை சித்தாரா ஆரம்ப காலகட்டத்திலேயே தனக்கு கவர்ச்சியாக நடிப்பது வேண்டாம் என்று மறுத்து ஹோமிலியாகவே தொடர்ச்சியாக நடித்து வந்ததாலே இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் தான் இவருக்கு கேரளாவில் உள்ள ஒரு சாமியார் மீது அதிக பக்தி வந்திருக்கிறது. அதனாலேயே இவரும் ஒரு பெண் சாமியாராக மாறிவிட்டதாக சித்தாரா கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் நடிகை சித்தாரா திருமணம் செய்து கொள்ளாதது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் ஏற்கனவே நடிகை சித்தாரா பேசியதை மேற்கோள் இட்டு பேசும்போது, சித்தாரா திரை உலகின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ஒருவரை காதலித்ததாகவும், ஆனால் பல ஆண்டுகள் அந்த காதல் கைகூடாமல் இருந்ததாலே பிறகு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று சித்தாரா கூறி இருக்கிறார். என்று பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications