நடிகர் பாக்யராஜின் மகளா இது..? பலமுறை தற்கொலை முயற்சி ஆனால் இப்போ..? இப்படித்தான் வாழ்ந்து காட்டணும்
சென்னை: காதல் தோல்வியால் பலமுறை தற்கொலை முயற்சி செய்த நடிகர் பாக்யராஜின் மகள் தற்போது சொந்தமாக பிசினஸ் தொடங்கி இருக்கிறார்.
பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரைத்துறையில் அவர் செய்திருக்கும் செயலை பற்றி பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

ஒரு இயக்குனராகவும், கதை திரைக்கதை, வசனகர்த்தாவாகவும், நடிகராகவும் இருக்கும் பாக்யராஜை தெரியாதவர்களே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அவர் மட்டுமல்லாமல் அவருடைய குடும்பமே திரைத்துறையில் பிரபலமானவர்கள் தான்.
என்னதான் திறமை இருந்தாலும் வாய்ப்புகள் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் கிடைத்து விடாது. அந்த மாதிரி தான் ஒரு காலத்தில் நடிகர் பாக்யராஜின் வீட்டு வாசலில் வாய்ப்புக்காகவும், கதை சொல்வதற்காகவும் பல தெருவுகளுக்கு வரிசை நின்று கொண்டிருந்தது .இப்போது நடிகர் பாக்யராஜ் ஒரு நடிகராக மட்டும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்..
நடிகர் பாக்கியராஜ் ஒரு இயக்குனராக பல பேருக்கு வாழ்க்கையை விளக்கேற்றி வைத்திருக்கிறார். தீவிரமான எம்.ஜி.ஆரின் ரசிகரான பாக்யராஜின் வீட்டில் எப்போதுமே வீட்டிற்கு வருபவர்களுக்கு சாப்பாடு ரெடி ஆகி கொண்டே இருக்குமாம். வெள்ளி திரையில் விஜயகாந்த் செய்து வந்த அதே வேலையை பாக்கியராஜ் பல வருடங்களுக்கு முன்பே செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவருடைய வீட்டிற்கு வாய்ப்புக்காகவும் கதை சொல்வதற்காகவும் வந்து கொண்டிருப்பவர்களுக்கு விதவிதமான உணவு வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது.
அந்த அளவிற்கு ஒரு மனம் படைத்த பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜின் மகன் சாந்தனு மற்றும் மகள் சரண்யா சினிமாவில் அறிமுகப்படுத்தி இருந்தார். ஆரம்பத்தில் சரண்யா திரைத்துறையில் அறிமுகம் ஆனது பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான பாரிஜாதம் எனும் திரைப்படத்தில் தான். அந்த திரைப்படத்தில் பாக்கியராஜூம் நடித்திருப்பார்.
பாக்யராஜ் எதிர்பார்த்த அளவிற்கு அந்த திரைப்படம் வெற்றி பெறவில்லை. அந்த நிலையில் தான் சில திரைப்படங்களில் நடித்துவிட்டு அவர் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு காதலித்த ஒரு நபரால் ஏமாற்றப்பட்டதாகவும் அதனால் அவர் தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். ஒரு முறை அல்ல பலமுறை தற்கொலை முயற்சி செய்த சரண்யாவை பாக்யராஜ் குடும்பத்தினர் காப்பாற்றி ஆறுதல் படுத்தி இருக்கிறார்கள்.
பிறகு எந்த திரைப்படங்களிலும் நடித்துக் கொள்ளாமல் இருந்த சரண்யா சில மாதங்களுக்கு முன்பு பாக்கியராஜ் குடும்பத்தோடு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதுவும் வைரல் ஆகி வந்தது 38 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் சரண்யா தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதற்காக ஷாப்பிங் மற்றும் ரீட்டைல் தொழிலை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

ஏற்கனவே பூர்ணிமா பாக்யராஜும் இந்த தொழிலில் இருந்து வருகிறார். பல நடிகைகளுக்கு ஃபேஷன் டிசைனராக பூர்ணிமா இருப்பது போன்று அவருடைய மகளும் உயர்ந்து வருகிறார். இந்த நிலையில் சரண்யா மீண்டும் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அந்த வகையில் நடிகை ஹன்சிகா மோத்வானி 51வது படத்தில் சரண்யா ஸ்கிரீன் பிளே வேலையும் செய்துள்ளாராம்
அதுமட்டுமல்லாமல் அவர் வெளியிடும் ஆன்லைன் விளம்பரங்களை பலரும் வாங்கி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். சரண்யா பாக்யராஜ்க்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 226.2கே பாலோவர்ஸ் இருக்கின்றனர். அதே நேரத்தில் காதல் தோல்வி என்றாலும் வாழ்க்கையில் சின்ன தோல்வி என்றாலும் தற்கொலை முயற்சி எப்போதும் கைகொடுக்காது. அது நம்மை மட்டும் அல்லாமல் நம்மை சார்ந்தவர்களையும் வாழ்நாள் முழுக்க கஷ்டப்படுத்தி விடும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.. அதுபோல சரண்யா மீண்டும் பழைய நிலையில் வர வேண்டும் என்பது பலருடைய ஆசையாக இருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications