Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாக்யராஜின் மகளா இது? சாந்தனு செய்த சுட்டி தனம்.. பூர்ணிமா வெளியிட்ட வீடியோ.. க்யூட்டாக இருக்கே

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் பாக்யராஜின் மகன் மற்றும் மகள் இருவரோடு பாக்யராஜின் மனைவி பூர்ணிமா சேர்ந்து விளையாடிய வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் பாக்கியராஜின் மகளான சரண்யா 2006 ஆம் ஆண்டில் வெளியான பாரிஜாதம் என்ற திரைப்படத்தில் நடிகர் பிரிதிவிராஜ்க்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார். அதை அதைத்தொடர்ந்து மலையாளத்தில் மோகன்லால் நடித்த போட்டோக்ராபர் என்ற திரைப்படத்தில் ஆஷா கேரக்டரில் நடித்திருந்தார். மீண்டும் 2007 ஆம் ஆண்டு தித் திக் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Television Tamil Cinema Actor Bhagyaraj

ஆனால் இந்த திரைப்படங்கள் பெரிய அளவில் சரண்யாவிற்கு பிரபலத்தை கொடுக்கவில்லை என்பதாலோ என்னவோ சினிமாவை விட்டு விலகி விட்டார். அதற்கு இடையில் தற்கொலை முயற்சி செய்து பிறகு குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டு இப்போது சுய தொழில் செய்து வரும் சரண்யா தன்னுடைய அண்ணனான நடிகர் சாந்தனுடன் கலகலப்பான ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அதுபோல சாந்தனுவும் வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். அதை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் மூலம் பல இளம் ரசிகர்களை கவர்ந்திருந்தார். அதில் இடம்பெற்ற டாக்ஸி டாக்ஸி, மருதாணி போன்ற பாடல்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு ஆயிரம் விளக்கு, கண்டேன், அம்மாவின் கைபேசி, ப்ளூ ஸ்டார் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Television Tamil Cinema Actor Bhagyaraj

இந்த நிலையில் சாந்தனு மற்றும் சரண்யா இருவரும் தங்கள் முன்பு ஐஸ் தண்ணீர் நிரப்பிய கண்ணாடி குவளையை வைத்திருக்கிறார்கள். அதில் தங்களுடைய அம்மாவான பூர்ணிமாவிடம் கேட்கும் கேள்விகளுக்கு சாந்தனு மற்றும் சரண்யா இருவரில் யாரை பூர்ணிமா தேர்ந்தெடுக்கிறாரோ அவர்களுடைய முகத்தை தண்ணீர் குவளையில் பூர்ணிமா மூழ்கி எடுக்கிறார்.

இந்த வீடியோவை சாந்தனுவின் மனைவி கீர்த்தி தான் எடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது. அதோடு கீர்த்தி பூர்ணிமாவிடம் சாந்தனு மற்றும் சரண்யா இருவரில் யாரு ரொம்ப நாட்டி என்று கேட்க, அதற்கு பூர்ணிமா சாந்தனு முகத்தை தண்ணீரில் மூழ்கி எடுக்கிறார். அதைத் தொடர்ந்து இவர்கள் இருவரில் யாருடைய குரல் அதிக சத்தம் உடையதாக இருக்கிறது என்று கேட்க அதற்கு சரண்யா முகத்தை பிடித்து பூர்ணிமா தண்ணீரில் மூழ்க வைக்கிறார்.

இப்படியாக பல கேள்விகளுக்கு பூர்ணிமா இவர்கள் இருவரையும் மாறி மாறி தண்ணிக்குள் மூழ்கி எடுக்கிறார். அப்போது இவர்கள் இருவரில் யார் அதிகமாக காமெடி செய்வார்கள் என்று கேட்ட கேள்விக்கு பூர்ணிமா இவங்க ரெண்டு பேருமே கிடையாது. இந்த கேள்விக்கு இவங்க அப்பா பாக்கியராஜை தான் இதுல முக்கி எடுக்கணும் என்று சொல்ல, அது பார்த்துக் கொண்டிருப்பவர்களை குபீர் என சிரிக்க வைத்து விடுகிறது.

சினிமா பிரபலங்களான இவர்கள் கியூட்டாக வீட்டில் விளையாடும் இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது. அதோடு பாக்யராஜின் மகளை அதிகமாக இணையத்தில் பார்க்காத ரசிகர்கள் அண்ணனும் தங்கச்சியும் எங்க வீட்டில் நடப்பது போல சண்டை போட்டுக்குறாங்களே என்று கமெண்டில் தங்களுடைய ஃபீலிங்கை கொட்டுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+