என் கண்ணு முன்னாடியே போயிட்டான்.. ஜாதகத்தில் கூட அப்படி சொன்னாங்க! கதறி அழுத டேனியல் பாலாஜி அம்மா
சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார். அது திரைத்துறையினரை மட்டுமில்லாமல் ரசிகர்களையும் அவருடைய குடும்பத்தினரையும் அதிகமாக அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் டேனியல் பாலாஜியின் அம்மா சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர் கண்ணீரோடு கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்திருக்கிறது.
டேனியல் பாலாஜி பல திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜத்தில் ஹீரோவாக தான் வலம் வந்திருக்கிறார். தன்னுடைய அம்மாவின் ஆசைக்காகவே ஒரு கோவிலை கட்டி கொடுத்து இருக்கிறார். அதுபோல தன்னுடைய பகுதியில் ஏழை குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கும், வயதானவர்களின் அடிப்படை செலவுகளுக்கும் பல்வேறு உதவிகளை செய்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் தன்னுடைய நண்பர்கள் பலருக்கும் பிசினஸ் செய்து கொடுத்து அவர்கள் முன்னேறுவதை பார்த்து மகிழ்ந்திருக்கிறார். இப்படி பல நல்லது செய்த டேனியல் பாலாஜிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட அதன் காரணமாக அவர் மருத்துவமனைக்கு போயிருந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனில்லாமல் காலமானார்.
இதுகுறித்து அவருடைய அம்மா பேசுகையில் என்னுடைய கண் முன்பே என் மகன் போயிட்டான். நான் இருக்கும் போது என்னுடைய மகனின் இந்த நிலைமையை நான் பார்க்க வேண்டுமா? என் மகன் எவ்வளவு நல்லவன் தெரியுமா? என் மேல அவ்வளவு பாசம் வைத்திருந்தான். அவனுக்கு ஜாதகத்தில் கூட இப்போ இறப்பு கிடையாது என்று சொன்னாங்க. நாங்க அதை நம்பிகிட்டு இருந்தோம்.
அதுபோல அவனுக்கு இதுக்கு முன்னாடி எப்பவுமே இப்படி உடம்பு சரியில்லாமல் போனது கிடையாது. அதனாலதான் நாங்க அவனை சரியாக கவனிக்காம விட்டுட்டோம். முதல்முறையா இப்பதானே அவனுக்கு நெஞ்சு வலி வந்தது. அதற்கு முன்பு அவனுடைய உடலில் எந்த ஒரு கஷ்டமும் கிடையாது. நல்ல ஆரோக்கியமா தான் இருந்தான். நான் அவனுக்கு கல்யாணம் பண்ணி அழகு பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன்.
அவன் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தான். ஆனாலும் நான் வற்புறுத்தியதால் ரெண்டு பொண்ணு வீட்டை வந்து பார்க்க வந்தான். பிறகு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டான். ஆனால் நான் இப்படியே விடக்கூடாது என்று தான் நினைச்சிட்டு இருந்தேன். அதற்குள் எல்லாமே முடிஞ்சிடுச்சி.. சின்ன வயதில் இருக்கும் போதே அவன் அவ்வளவு பொறுப்பா இருந்தான்.

படிக்கும் போது ஸ்கூலுக்கு போயிட்டு வந்து வேலைக்கு போய் எங்களுக்கு செலவுக்கு காசு கொடுப்பான். ஆரம்பத்தில் எங்க வீட்டில் ரொம்பவே கஷ்டப்பட்டோம் அவன் தலையெடுத்த பிறகு தான் எங்க கஷ்டமெல்லாம் போச்சு. இன்னைக்கு எங்களை தவிக்க விட்டு விட்டு போய் விட்டான். அவன் இல்லாமல் இனி நாங்க எப்படி வாழ போறோம் என்று தெரியவில்லை.
அவனுக்கு நிறைய ஆசை இருந்தது படம் இயக்கனும் என்று தான் முதலில் சொல்லிக் கொண்டே இருந்தான். அவன் எத்தனையோ படம் நடித்திருந்தாலும் நான் அவன் நடிச்சதில் மூன்றே மூன்று படம்தான் பார்த்தேன்.. என்று கண் கலங்கி கதறி அழுது இருக்கிறார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications