Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகையிடம் பேசிய அந்த வார்த்தை.. ரூமுக்குள் வைத்து பாக்கியராஜ் பூட்டிட்டாரு! ஜி.எம் குமார் ஓப்பன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் ஜி.எம் குமார் பேட்டி ஒன்றில் தான் உதவி இயக்குனராக இருக்கும்போது இயக்குனர் பாக்கியராஜ் தன்னை சூட்டிங் ஸ்பாட்டில் ரூமிற்குள் வைத்து பூட்டி விட்டார் என்று பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதோடு அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பதை பற்றி ஜிஎம் குமார் சில விஷயங்களையும் பகிர்ந்திருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு திரைப்படம் வெற்றி அடைந்த பிறகு தான் வெளியே தெரியும். இப்போது ஒரு வருடத்தில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகுகிறது. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு வருடத்தில் சுமார் 20 அல்லது அதற்கு அதிகமான படங்கள் தான் வெளியாகும் அந்த திரைப்படங்கள் வெற்றியடைந்த பிறகு தான் அதில் நடித்தவர்கள் மற்றும் இயக்குனர், தயாரிப்பாளர் போன்றவர்களுடைய விவரமே வெளியே தெரியும்.

Television Bhagyaraj GM Kumar Entertainment

ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த செயல்கள் எல்லாம் அப்போது வெளியே தெரிவதற்கு வாய்ப்பில்லை. அதில் சம்பந்தப்பட்ட இயக்குனர் அல்லது நடிகர்கள் வெளியே சொன்னால் மட்டும்தான் அப்போது தெரியும். ஆனால் இப்போது இணையத்தின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் எல்லோரும் சூட்டிங் ஸ்பாட்டில் சில பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு வெளியிட்டு விடுகிறார்கள்.

ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அப்படி கிடையாது. அந்த மாதிரி தான் உதவி இயக்குனராக இருக்கும்போது இயக்குனர் பாக்கியராஜ் தன்னிடம் நடந்து கொண்டது பற்றி இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கும் ஜி.எம் குமார் பேசியிருக்கிறார். ஆரம்பத்தில் பாக்யராஜ் உதவியாளராக பாரதிராஜாவிடம் தான் வேலை செய்தார். பிறகு பாரதிராஜாவால் தான் நடிகராகவும் மாறினார்.

ஆரம்பத்தில் இருந்தே மாஸ் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் நடிக்கும் திரைப்படங்களில் எதார்த்தமான நடிகராக நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதுபோல சுவாரசியமான கதையை இயக்கி அந்த திரைப்படத்தில் பாக்யராஜ் நடித்ததால் பெண் ரசிகர்களும் அவருக்கு அதிகமாக உருவாகிவிட்டனர்.

அதிலும் பாக்கியராஜ் இயங்கி நடித்த இன்று போய் நாளை வா, மௌன கீதங்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு என பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த வரிசையில் ஒன்றுதான் "தூறல் நின்னு போச்சு" படம். இந்த படத்தில் நடிகை சுலக்சனாவை பாக்யராஜ் தான் அறிமுகம் செய்திருக்கிறார். அதுபோல இந்த படத்தில் உதவி இயக்குனராக ஜி எம் குமார் இருந்திருக்கிறார்.

அது பற்றி ஜிஎம் குமார் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசுகையில் நான் பாக்யராஜ் உடன் ஏழு படங்களில் வேலை செய்தேன். ஆனாலும் அவர் என்னை படபிடிப்பு தளத்திற்கு கூட்டிட்டு போனது கிடையாது. ஒருநாள் அவருக்கு தெரியாமல் தூறல் நின்னு போச்சு பட சூட்டிங் போய் விட்டேன். அங்கு கதாநாயகி சுலக்சனாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதை பார்த்த பாக்கியராஜ் அங்கு சத்தம் போட்டு கத்தி என்னை திட்டுனார். மேலும் என்னை இழுத்துக் கொண்டு போய் ஒரு அறையில் போட்டு அடைத்து விட்டார் என்று அந்த பேட்டியில் ஜி எம் குமார் பேசியிருக்கிறார்.

ஆனால் அதற்கு பிறகு விஜயகுமார் அறுவடை நாள், பிக்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் போன்ற படங்களை இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுபோல இயக்குனராக மட்டுமல்லாமல் வெயில், மாயாண்டி குடும்பத்தார், அவன் இவன் போன்ற பல படங்களிலும் நடித்திருக்கிறார். அதுபோல சின்னத்திரையில் செம்பருத்தி சீரியல், பேரன்பு போன்ற சீரியல்களிலும் நடித்து இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+