விஜய்க்கு வர்ற கூட்டத்தை நம்ப முடியுமா? அரசியல் எளிமையானது இல்ல.. நடிகர் கருணாஸ் பேட்டி
சென்னை: நடிகர் கருணாஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதில் அரசியல் அவ்வளவு எளிமையானது கிடையாது. ஒரு நடிகருக்கு வரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்து வெற்றியை முடிவு செய்ய முடியாது என்றும் மேலும் சில விஷயங்களையும் பகிர்ந்து இருக்கிறார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக் கொண்டிருக்கிறார். அதில் சில தினங்களுக்கு முன்பு அவர் தன்னுடைய தமிழகம் முன்னேற்றக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்திருந்தார். அதற்குப் பிறகு அந்த கொடி குறித்து அதிகமான சர்ச்சைகளும், பிரச்சனைகளும் வெடித்துக்கொண்டே இருக்கிறது.

அதே நேரத்தில் விஜய்யின் அரசியல் எப்படி இருக்கும் என்றும் பலரும் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகராகவும் அரசியல் பிரமுகராகவும் இருக்கும் கருணாஸ் விஜய்யின் அரசியல் முடிவு குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் விஜய்யை சுட்டிக்காட்டி உங்களை ரசிகர்கள் வேடிக்கையாக பார்ப்பது வேறு, ஓட்டு போடுவது வேறு. இதுவரைக்கும் வேற ஒரு சின்னத்துக்கே ஓட்டு போட்டு பழகுன ஒருத்தங்களை திடீரென்று மாற்றி வேறு ஒரு சின்னத்துக்கு ஓட்டு போடுவது லேசான காரியம் கிடையாது.
விஜய் பெரிய நடிகரா அல்லது உதயநிதி பெரிய நடிகரா என்று கேட்டால் விஜய் தான் பெரிய நடிகர். அதே நேரத்தில் அரசியலில் யார் பெரியவங்க என்று கேட்டால் அது உதயநிதி தான். சினிமாவில் இருப்பவர்களும் அரசியலில் சாதித்திருக்கிறார்கள். அதற்கு உதாரணமாக எம்ஜிஆரை கூட சொல்லலாம். ஆனால் எம்ஜிஆரின் அரசியலை ஆரம்பத்தில் இருந்தே பார்க்க வேண்டும்.
எம்ஜிஆருக்கு வருகிற கூட்டம் மாதிரி விஜய்க்கு கூட்டம் வருவதால் விஜய் கண்டிப்பா அரசியலில் அவர் நினைத்தே இடத்தை அடைவார் என்று சொல்வதெல்லாம் முட்டாள்தனம். வடிவேலு சார் ஒரு முறை அரசியலுக்கு போறேன்னு கிளம்புறாரு, அவ்வளவு கூட்டம் வந்துச்சு. ஆனா அது ஓட்டாக மாறவில்லை. விஜய்க்கு திடீர்னு ஏன் சார் அரசியல்? இவ்வளவு வருஷமா எங்க இருந்தீங்க? எவ்வளவு பிரச்சனைகள் நடந்துச்சு அப்போ எதற்குமே அவர் குரல் கொடுக்கலையே?
இன்னைக்கு திடீர்னு வந்து அரசியல் பண்ண போறேன்னு சொன்னா என்ன அர்த்தம்? ஜெயலலிதா அம்மாவ பாக்குறதுக்கு போனாரு ஆனா அம்மா அவங்கள பார்க்க கூட இல்ல. யாரு கட்சி ஆரம்பிச்சாலும் கொடி பிடிக்க தமிழன் தயாராக இருப்பான்... ஆனால் அரசியல் அவ்வளவு எளிமையானது கிடையாது என்பதைத்தான் நான் விஜய் கிட்ட சொல்லணும் என்று அந்த பேட்டியில் கருணாஸ் பேசி இருக்கும் நிலையில் இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
-
விஜய்யை முடக்க நடக்கும் முயற்சி.. தமிழ்நாடு முழுவதும் தொடங்கிய தவெக போராட்டம்! -
திமுகவை யாராலும் அழிக்க முடியாது.. புது கட்சி அவ்வளவுதான்! விஜயை தாக்கி வடிவேலு பேச்சு? நெட்டிசன்கள் ட்ரோல் -
பேசுறவங்க என்ன வேணாலும் பேசுங்க.. என் உறவு இவங்க தான்! வெளிப்படையாக போஸ்ட் போட்ட திரிஷா.. வதந்திகளுக்கு பதிலடி -
விஜய் பற்றிய கேள்வி.. விமான நிலையத்தில் திரிஷா கொடுத்த ரியாக்ஷன்! மேட்சிங் டிரஸ் பதில்? -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பச்சைக் கொடி காட்டிட்டாரா விஜய்? பவன் கல்யாண் சொன்ன "நீங்க பாதி.. ஆனாலும் யாருமே எதிர்பாராத சிக்கல் -
LPG தட்டுப்பாடு: எரிவாயு சிலிண்டர் விஷயத்தில் அரசியல் பண்ணாதீங்க.. தவெக -
திரிஷாவுக்கு வாழ்த்துகள் – விஜய் யோசித்திருப்பார்! இனி இதுபற்றி பேசமாட்டேன் – பார்த்திபன் மன்னிப்பு -
Mr. விஜய் எனக்கு யார்... திரிஷாவுக்கு வாழ்த்துக்கள் சொல்கிறேன்! ஆனால், பார்த்திபன் வெளியிட்ட புது வீடியோ -
வருணுடன் திருமணத்தை நிறுத்தியது இதனால்தான்! அப்பவே வெளிப்படையாக பேசிய திரிஷா.. காரணம் இதுதானாமே!












Click it and Unblock the Notifications