அப்பா கடைசியா அம்மாகிட்ட சொன்னது இதுதான்.. நடிகர் மாரிமுத்துவின் மகன் எமோஷனல்
சென்னை: நல்ல நிலைமையில் இருந்த நடிகர் மாரிமுத்து திடீரென்று மாரடைப்பு காரணமாக காலமானார். அதற்கு பிறகு அவர் பற்றி அவருடைய உறவினர்களும் நண்பர்களும் பல நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து இறப்பதற்கு முன்பு கடைசியாக அவருடைய மனைவியிடம் என்ன பேசினார் என்பது பற்றி மாரிமுத்துவின் மகன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அத்தோடு தன்னுடைய தந்தை இறந்த நேரத்தில் நானும் தந்தையும் ஒரு வாரமாக பேசாமல் இருந்தோம் என்று முத்துவின் மகன் கூறியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சிலர் பார்ப்பதற்கு கரடு முரடான நபர்கள் போல காட்சி அளிப்பார்கள் ஆனால் அவர்களுடன் பழகி பார்த்தால் தான் தெரியும். அவர்கள் குழந்தை போன்ற மனதுடையவர்கள் என்று, அந்த மாதிரி தான் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடித்து பலருடைய திட்டல்களை வாங்கிக் கொண்டிருந்த நடிகர் மாரிமுத்து நிஜத்தில் முற்போக்கு குணமுடையவர் என்று அவரோடு பழகிய பலரும் கூறியிருக்கின்றனர்.
அதுபோல மாரிமுத்து பேசுவது பார்த்து பலர் அவர் கோபக்காரர் என்று நினைத்து இருப்பார்கள். ஆனால் அவர் கோபப்பட்டாலும் சில நிமிடங்களிலே இயல்பு நிலைக்கு திரும்பி அவர்களிடம் பேசி விடுவாராம். அதை பற்றி அவரோடு பழகிய பல நண்பர்களும் நடிகர்களும் தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் மாரிமுத்துவின் மகன் மற்றும் மனைவி அவருடைய இறப்பிற்கு பிறகு மாரிமுத்து பற்றி பல நினைவுகளை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கின்றனர்.
அதில் வீட்டில் மாரிமுத்துவும் அவருடைய மகனும் அடிக்கடி சண்டை போடுவார்களாம். இருவருக்கும் கருத்து வேறுபாடு அடிக்கடி வருமாம். ஆனால் தன்னுடைய மகன் சொல்லும் கருத்தை பிறகு மாரிமுத்து புரிந்து கொள்வாராம். அதுபோல அப்பாவின் வார்த்தைகளை மகனும் புரிந்து கொள்வாராம். இது பல நாட்களாக நடந்து கொண்டே தான் இருந்தது என்று மாரிமுத்துவின் மகன் கூறியிருக்கிறார்.
அதுபோல அப்பா இறந்த போது கூட நானும் அப்பாவும் ஒரு வாரமாக பேசாமல் சண்டை போட்டுக் கொண்டிருந்தோம். நாங்கள் தூரமாக இருக்கும்போது பேசிக் கொள்ளவில்லை என்றாலும் நேரில் பார்த்தோம் என்றால் உடனே பேசி விடுவோம். பல நேரங்களில் எனக்கு சார்பாக என்னுடைய அப்பாவிடம் பேசுவது என்னுடைய தங்கை தான் என்று மாரிமுத்துவின் மகன் கூறியிருக்கிறார். அதோடு கடைசியாக அம்மாவிடம் போன் செய்து அப்பா பேசியிருந்தார்.

எனக்கு கொஞ்சம் நெஞ்சு வலிக்கிறது அதனால நான் ஹாஸ்பிடலுக்கு போறேன். நீ ஹாஸ்பிடலுக்கு வந்துரு என்னோட ரிப்போர்ட்ட எடுத்துட்டு வா என்று சொல்லி இருந்தார். சின்னதா செக்கப் செய்துவிட்டு வந்துருவோம். இதுதான் அப்பா அம்மா கிட்ட பேசிய கடைசி வார்த்தை. யாருக்கும் எந்த சிரமமும் கொடுக்க கூடாது என்று நினைப்பவர் தான் அப்பா.
அதனால் தான் கடைசி நேரத்தில் கூட தனக்கு வலி இருந்தாலும் அடுத்தவர்களை தொந்தரவு செய்யாமல் தானே வண்டியை ஓட்டிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு போயிருக்கிறார் என்று நடிகர் மாரிமுத்துவின் மகனும் மனைவியும் அந்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications