இதயத்தை திருடாதே நவீன் மனைவியோடு சேர்ந்து ஆரம்பித்த புது பிசினஸ்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகர் நவீன் செய்தி வாசிப்பாளர் கண்மணியை திருமணம் செய்து இருக்கிறார்.
கண்மணி தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் வளைகாப்பு சமீபத்தில் நடத்தி முடித்து இருந்தனர்.
இந்த நிலையில் நடிகர் நவீன் மற்றும் கண்மணி இருவரும் சேர்ந்து புதியதாக காபி ஷாப் பிசினஸ் தொடங்கி இருக்கின்றனர்.

சீரியலில் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம் டிவியில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் சீரியல்களின் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதால் ரசிகர்கள் அவர்களை அறியாமலே சீரியல் பக்கம் மனம் வந்து விடுகிறது. அந்த வகையில் இளைஞர்களை கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இதயத்தை திருடாதே சீரியல் இருந்து வந்தது. இந்த சீரியலில் கதாநாயகனாக நவீன் நடித்து வந்தார். முதல் பாகத்தை தொடர்ந்து இந்த சீரியல் இரண்டாவது பாகத்திலும் பல எபிசோடுகள் வெற்றிகரமாக ஓடி முடிவடைந்தது.
இந்த சீரியல் முடிவடைந்த பிறகு அதே கலர்ஸ் தமிழில் கண்ட நாள் முதல் என்ற சீரியலில் நவீனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே நவீனுக்கு சீரியல் வட்டாரத்தில் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இவர் காலேஜ் படிப்பை முடித்ததும் மாடலிங் மூலமாக ஒரு சில திரைப்படங்களில் சைட் ரோலில் நடித்திருக்கிறார். இவர் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் நடித்திருந்தாலும், இவருடைய திறமைக்கு ஏற்ப கதை அமையாததால் இவருடைய பார்வை சீரியல் பக்கம் திரும்பி இருக்கிறது.

சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் செய்தி வாசிப்பாளரான கண்மணியோடு இவருக்கு திடீர் திருமணம் ஏற்பட்டது. இவர்கள் இருவருக்கும் காதல் திருமணம் எல்லாம் இல்லையாம். வீட்டில் பார்த்து அரேஞ்ச் செய்த திருமணம் தானாம். திருமணத்திற்கு பிறகு காதலர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர்கள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களிடம் மகிழ்ச்சியோடு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் தான் கண்மணிக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு பங்க்ஷன் நடைபெற்றது.

இந்த நிலையில் கண்மணி தற்போது செய்தி வாசிப்பாளராக இல்லாமல் வீட்டில் தான் இருந்து வருகிறாராம். அதே நேரத்தில் நவீனும் கண்ட நாள் முதல் சீரியலுக்கு பிறகு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து தற்போது காபி ஷாப் ஒன்றை தொடங்கி இருக்கின்றனர். தாங்கள் தொடங்கி இருக்கும் புது பிசினஸ் பற்றி தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் தெரிவிக்க, இதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications