நான் காதலை உணர்ந்தது சீதா கிட்ட தான்.. ஆனால் டைவர்ஸ்னு பேசும்போது.. பார்த்திபன் எமோஷனல்
சென்னை: நடிகர் பார்த்திபன் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து, பிறகு விவாகரத்து செய்தது பற்றி பேட்டியில் எமோஷனலாக பேசி இருக்கும் நிலையில் இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
சமீபத்தில் ஒரு ட்ரெண்டிங் உருவாகி இருக்கிறது, புது திரைப்படம் வெளியாகப் போகிறது என்றால் அந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொடர்ச்சியாக பல youtube சேனல்களில் பேட்டி கொடுத்து வருகின்றனர். அதுவரைக்கும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் குறித்து பல விஷயங்களை மனம் திறந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் டீன்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் பார்த்திபனும் பல சேனல்களில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் டீன்ஸ் திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் சில காரணங்களால் பார்த்திபன் அந்த திரைப்படத்தை வெளியிடாமல் போயிருந்தது. இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் அதே சமயத்தில் டீன்ஸ் திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
ஏற்கனவே பார்த்திபனின் முதல் திரைப்படமான புதிய பாதை திரைப்படம் வெளியாக போகும்போது நடிகர் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படமும் வெளியாகி இருந்தது. அந்த நேரத்தில் பெரிய அளவில் புதிய பாதை திரைப்படம் வெற்றி பெற்று அவருக்கு விருதுகளையும் வாங்கி கொடுத்து இருந்தது.
அதேபோல இப்போது இந்தியன் 2 திரைப்படம் பிரம்மாண்டமாக பிரமோஷனோடு வெளியாவதற்கு காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன்க்கு செலவழிக்கப்பட்ட பணம் தான் என்னுடைய படத்தின் மொத்த பட்ஜெட் ஆக இருக்கும் என்று பார்த்திபன் கூறி இருக்கிறார். ஆனாலும் தன்னுடைய படம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையில் இருக்கும் பார்த்திபன் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து அந்த பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதில் பார்த்திபன் பேசுகையில் நான் என்னுடைய வாழ்க்கையில் முதல் முதலாக காதலை உணர்ந்தது சீதாவிடம் தான். அவரை அந்த நேரத்தில் அளவு அதிகமாக காதலித்தேன். அதனால் அவரை கல்யாணம் கூட செய்யாமல் அவரை காதலித்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவர் ஒரு பெரிய நடிகையாக மாற வேண்டும் என்று நினைத்தேன்.
ஆனால் அந்த நேரத்தில் சீதா இனி நடிப்பு போதும் என்று நினைத்திருந்த போதுதான் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் திருமணத்திற்கு பிறகு எங்களுடைய வாழ்க்கை மாறியது. அந்த நேரத்தில் சீதா மீண்டும் நடிக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த நேரத்தில் நான் முட்டாள்தனமாக இருந்ததால் சீதா நடித்தால் நம்முடைய குடும்பம் உடைந்து விடும் என்று அவருடைய நடிப்புக்கு தடை போட்டேன்.
இப்போ இருக்குற மெச்சூரிட்டி அப்போ இருந்திருந்தால் தாயே போய்ட்டு வாமா நீ உன்னுடைய ஆசை கனவை நிறைவேற்று அதுதான் எனக்கு சந்தோசம் என்று சொல்லி இருப்பேன். ஆனால் அந்த நேரத்தில் நமக்கு சரியான மெச்சூரிட்டி இல்லாததால் பிரச்சனைகள் ஏற்பட தொடங்கியது. முதல் நாள் எங்களுக்குள் பிரச்சனை தொடங்கிய போது இருந்தே இந்த வாழ்க்கை பிரிந்து விடக்கூடாது என்று நான் பயந்து கொண்டு இருந்தேன்.
அதனாலயே 12 வருஷம் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமலே களைந்து விட்டது. முதல் நாள் நான் அவரை விட்டு பிரிந்து இருந்தால் அவருடைய வாழ்க்கையும் சரியாக இருந்திருக்கும் என்னுடைய வாழ்க்கையும் சரியாக இருந்திருக்கும். திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்குள் பிடிக்கவில்லை என்றால் அப்போதே பிரிந்து விட வேண்டும். எக்காரணத்தை கொண்டும் சாக்ரிஃபைஸ் பண்ணி கொண்டு இருவருடைய வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பது இப்போ எனக்கு புரிகிறது.
அதே நேரத்தில் பிரிய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் குழந்தைகள் வருவதற்கு முன்பு பிரிந்து விட வேண்டும். குழந்தைகள் கணவன் மனைவியின் பிரிவால் கஷ்டங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையை மட்டும் கொடுக்கக் கூடாது என்று என்னுடைய வாழ்க்கையில் நான் தெரிந்து கொண்டேன்.
முதல்முறையா சீதா டைவர்ஸ் கேட்கிறபோது கூட இந்த வாழ்க்கையை சரி செய்து விடலாம்... இப்படியே கொண்டு போய் விடலாம் என்று நான் ரொம்ப யோசித்தேன். டைவர்ஸ் என்பது இப்போ சாதாரணமா தெரிகிறது. ஆனால் அந்த நேரத்தில் அது ஒரு பெரிய கஷ்டமாக தெரிந்தது. அதனால் தான் அதை கொடுப்பதற்கு தயக்கம் இருந்தது என்று அந்தப் பேட்டியில் பார்த்திபன் பேசி இருக்கிறார்.
-
Trisha: அறிவு இல்லாத அநாகரீக பேச்சு.. ”குந்தவை” பார்த்திபன் கருத்துக்கு திரிஷா கடும் கண்டனம் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications