Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பேரழகன்” படம் ஞாபகம் இருக்கா? நடிகர் பொன்னம்பலம் வாழ்க்கையில் நடந்த அதே சோகம்..அட பாவமே இப்படியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் பொன்னம்பலம் ஒரு வில்லன் நடிகராக பல திரைப்படங்களில் பலரையும் மிரள வைத்திருக்கிறார்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் நான் அப்படியெல்லாம் இல்லை. என்னுடைய ஆரம்ப காலம் ரொம்பவே வலி நிறைந்தது என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பல ரகசியங்களை உடைத்து இருக்கிறார்.

அந்த வகையில் தான் பெண் பார்க்க போகும்போது நான் தான் மாப்பிள்ளை என்பதை தெரிந்த ஒரு பெண் தூக்கு மாட்டிக்கொள்ள முயற்சி செய்ததாக கூறியிருக்கிறார்.

சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி அதில் நடிப்பவர்களின் கேரக்டரை அப்படியே உண்மை என்று நம்புபவர்கள் இப்பவும் அதிகமானார் இருந்து கொண்டிருக்கின்றனர். அதுவும் 90ஸ் கிட்ஸ் காலகட்டத்தில் சொல்லவே வேண்டாம் திரையில் வருவதை உண்மை என்று அப்படியே நம்பிக்கொண்டிருந்தவர்கள் ஏராளம்.

Actor Ponnambalam The woman who went to see tried to commit suicide

அந்த மாதிரி தான் நடிகர் பொன்னம்பலம் திரைப்படங்களில் வில்லனாக நடித்து பலரையும் மிரட்டியதை உண்மை என்று நம்பி அவருக்கு நிஜத்தில் பெண் கொடுக்க யாருமே முன்வரவில்லையாம். இவர்தான் மாப்பிள்ளை என்று தெரிந்தால் அந்த மணப்பெண்கள் கூட எங்களுக்கு வேண்டாம் என்று அலறி ஓடி விட்டார்களாம்.

ஆரம்ப காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் வில்லனாக நடித்து பிரபல பிரபலம் அடைந்த பொன்னம்பலம் "கபாலி" என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்தார். அந்த நேரத்தில் தான் ஒரு முறை இவர் ஒரு வீட்டிற்கு பெண் பார்க்க போயிருந்தாராம்.அங்கு இவர்தான் அந்த மாப்பிள்ளை என்று தெரிந்ததும் அந்தப் பெண் ஓடி வீட்டிற்குள் சென்று தூக்கு மாட்டிக்கொள்ள போய்விட்டாராம்.

அதுமட்டுமில்லாமல் அங்கு ஒரு காமெடியும் நடந்திருக்கிறது. அது என்னன்னா பொன்னம்பலம் அந்த வீட்டிற்குள் போய் உட்கார்ந்தும் அந்த நாற்காலியே உடைந்து விட்டதாம். பார்ப்பதற்கு கொஞ்சம் கரடு முரடாக இருப்பதால் அந்த பெண்ணிற்கு பொன்னம்பலத்தை பிடிக்கவில்லையாம். உடனே பொன்னம்பலம் அவருடைய அம்மா மற்றும் உறவினர்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பி விட்டார்களாம்.

அதுமட்டுமில்லையாம் இவர் இப்போது கல்யாணம் முடித்து இருக்கும் பெண்ணுக்கும் கூட முதலில் பொன்னம்பலத்தை பிடிக்கவில்லையாம். முதல் ஒரு வாரத்திற்கு பொன்னம்பலத்திடம் அவர் பேச கூட இல்லையாம். அதற்கு பிறகு தான் பொன்னம்பலம் கொஞ்சம் கொஞ்சமாக பேசி அவரிடம் தன்னைப் பற்றி புரிய வைத்தாராம்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் நடிகர் பொன்னம்பலத்தின் உடல்நிலை திடீரென்று இந்த அளவிற்கு மோசம் அடைந்ததற்கு காரணம் அவருடைய உடலில் ஸ்லோ பாய்சன் இருந்ததால்தான். அது அவருக்கு தெரியாமலேயே அவருடைய சகோதரர் அவர் குடிக்கும் ஆல்கஹாலில் ஸ்லோ பாய்சனை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து வந்தாராம். இது பொன்னம்பலத்திற்கு தெரியாமல் இருந்ததால் அவருடைய உடலில் அதிகமாக பாதிக்கப்பட்டு விட்டது என்று கூறி இருக்கிறார்.

அந்த நேரத்தில் இப்படியே போய்கிட்டு இருந்தா நம்மளால எல்லோருக்கும் கஷ்டம் தான் என்று நினைத்த பொன்னம்பலம் இரண்டு முறை தற்கொலை முயற்சியும் செய்தாராம். பிறகுதான் என்ன நடந்தது என்று கண்டறிந்து தனக்கு நெருக்கமானவர்கள் செய்த உதவியில் தான் நான் இன்னைக்கு உட்கார்ந்து இருக்கேன் என்றும் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+