எம்ஜிஆருக்கே "சம்பளம்" கொடுத்த அப்பா.. பொன்னம்பலத்திற்கு செய்த கொடுமை.. சாகும் போதும் கூடவா?
சென்னை: கடந்த 40 வருடங்களாக தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் வில்லன் மற்றும் காமெடி கதாபாத்திரத்தில் நடிகர் பொன்னம்பலம் நடித்து வருகிறார்
அதுபோல சின்னத்திரையின் மோஸ்ட் வான்டட் நிகழ்ச்சியாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் இரண்டு திரைகளிலும் தனது முத்திரையை பதித்துள்ள நடிகர் பொன்னம்பலம் தனது தந்தை குறித்து பகிர்ந்துள்ள தகவல்கள் ஆச்சரியம் அளிப்பதோடு மட்டுமின்றி அதிர்ச்சிகரமாகவும் இருந்து வருகிறது.
சினிமாவில் அதிகமான படங்களில் வில்லனாகவே நடித்து முரட்டு மனிதராக அறியப்பட்ட பொன்னம்பலம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பின்பு தான் அவரது உண்மையான வெகுளித்தனம் மக்களுக்கு தெரிய ஆரம்பித்தது.சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சில நடிகர்கள் உதவியுடன் மீண்டு வந்த பொன்னம்பலம் சிறுவயதில் தான் வில்லத்தனமாக இருந்திருக்கிறார்.அதற்குக் காரணம் அவரது தந்தை தான் எனவும் சமீபத்தில் கூறியிருக்கிறார்.

தனது குடும்பத்தில் தான் தான் திரையில் தோன்றிய முதல் நடிகராக இருந்தாலும், தனது குடும்பத்தில் சிலர் திரைக்குப் பின்னால் எடிட்டிங் மற்றும் ஸ்டுடியோ நிர்வாகம் போன்ற திரைத்துறை சம்பந்தப்பட்ட பணியிலேயே இருந்துள்ளதாக கூறியுள்ளார். அந்த காலத்தில் தன்னுடைய தந்தை வாகினி ஸ்டுடியோ மேலாளராக இருந்ததாகவும், ஸ்டுடியோ மேலாளர் தான் அந்த காலத்தில் அனைத்து நடிகர் ,நடிகைகளுக்கும் சம்பளம் கொடுக்கும் பழக்கம் இருந்ததால் அந்த பழக்கத்தின் படி தன்னுடைய அப்பா தான் எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா போன்ற முன்னணி நடிகர் நடிகைகளுக்கும் தன் கையால் சம்பளம் கொடுத்ததாகவும் பெருமையுடன் கூறியுள்ளார்.
தன்னுடைய தந்தை கண்ணப்ப நாயக்கர் மிகவும் கண்டிப்பானவர் என்று கூறியுள்ள பொன்னம்பலம், தனது அப்பா எதற்கெடுத்தாலும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அடித்து கொடுமை படுத்துவார் என்றும், எப்பொழுது டா நம்ம அப்பா சாவார்... இவர் சீக்கிரம் சாகவேண்டும் ஆண்டவா... என்று தனது அப்பாவை குறித்து கடவுளிடம் வேண்டிக் கொண்டதாகவும் அதிர்ச்சிகரமாக கூறியுள்ளார்.
நாட்டாமை படத்தில் வந்த வில்லன் கதாபாத்திரத்தை தனது அப்பாவையே மனதில் வைத்து நடித்ததாகவும் தெரிவித்துள்ளார். தனது அப்பா இறந்த அன்று மிகவும் மகிழ்ச்சியாக அருகில் உள்ள ஹோட்டலுக்கு சென்ற பிரியாணி சாப்பிட்டதாகவும் பொன்னம்பலம் கூறியுள்ளது தான் செம ட்விஸ்ட்..
பொன்னம்பலத்தின் தந்தையார் சாகும் தருவாயில் பொன்னம்பலத்தை அழைத்து.. நான் சீக்கிரம் இறந்து விடுவேன், நீதான் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சத்தியம் செய்யச் சொல்லி உள்ளார். என்னதான் அப்பா மீது கோபம் இருந்தாலும்,கடைசி ஆசையாக தன்னிடம் சத்தியம் கேட்டதால் அந்த சத்தியத்தை பொன்னம்பலம் செய்து கொடுத்துள்ளார். அந்த சத்தியத்தை காப்பாற்றுவதற்காகவே, சினிமா பக்கம் மட்டும் போய் விடாதே என்ற தனது தாயின் பேச்சையும் மீறி தான் சினிமாவில் நடிக்க வந்ததாகவும் கூறியுள்ளார்.
-
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
சூப்பர் சிங்கர் அருணா கல்யாணத்தில் சுவாரசியம்! ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள்.. அதுவும் யாரெல்லாம்னு பாருங்க -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி போட்ட பிளான்.. செக் வைத்த ரோகிணி! அடித்து விரட்டிய மீனா! சந்தோஷத்தில் முத்து -
சிறகடிக்க ஆசை சீரியல் அணிலா ஸ்ரீகுமாருக்கு 3வது கல்யாணம்.. குழந்தைகள் முன்பே நடந்த சம்பவம்! குவியும் வாழ்த்து -
கொலை மிரட்டல் விடுறாங்க.. பயமா இருக்கு.. கமிஷனர் ஆபீஸில் பதறிய வாட்டர் மெலன் திவாகர்! -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள்












Click it and Unblock the Notifications