Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெஞ்சில் ரித்தன்யா! என் மகாராணியின் தந்தை என்பதே என் மகிழ்ச்சி! என் தங்கமே.. புகழ் உருக்கமான பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது குழந்தையின் பெயர் பதித்த டீசர்ட்டை அணிந்துக் கொண்டு என் நெஞ்சில் நிறைந்திருக்கிறாய் என நடிகர் புகழ் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார்.

குக் வித் கோமாளியில் காமெடியில் கலக்கிய நடிகர் புகழ் பென்ஸியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் இரு வீட்டார் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

Actor Pugazh is feeling happy to wear a shirt with his daughter name

அந்த ஷோவில் இளம் நடிகைகளான ரம்யா, தர்ஷாகுப்தா, பவித்ரா லட்சுமி, சிருஷ்டி டாங்கே உள்ளிட்டோருடன் இவர் அடித்த லூட்டி இருக்கே அப்பப்பா! அவர்களும் புகழின் கிண்டல் கேலிகளை ஜாலியாக எடுத்துக் கொள்வார்கள். இந்த நிலையில் புகழ் ஏற்கெனவே ஒரு பெண்ணை காதலித்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து இருவரும் கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயிலில் திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் நடந்தது. இதில் விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பென்ஸி கர்ப்பமானார். அவருக்கு சில மாதங்களுக்கு முன் வளைகாப்பு நடந்தது.

இருவரும் நீல நிற ஆடை அணிந்து கொண்டு வளைகாப்பு விழாவை சிறப்பாக நடத்தினர். இந்த நிலையில் புகழின் மனைவி பென்ஸி பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கடந்த மாதம் இறுதியில் (செப்டம்பர் 27) பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தையின் பாதங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு அவர் கூறுகையில் இரு முறை தாய் வாசம் தெரியவேண்டும் எனில் பெண் பிள்ளையை பெற்றெடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த மற்றொரு தாய் என் மகள் அல்ல எங்கள் மகாராணி பிறந்து இருக்கிறார். என் மகளே, தாயும் சேயும் நலம் என உருக்கமாக பதிவு வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் தனது மகளுக்கு என்ன பெயர் வைத்துள்ளார் என்பதையும் அவர் அறிவித்தார். அந்த பதிவில் "என் வாழ்வை புன்னகையால் இன்புறச் செய்ய தவமாய் கிடைத்த அழகியடி நீ.. கம்பன் இன்றிருந்தால் உனக்கென தனிக்கவிதையே வடித்திருப்பானடி... ஊரே கண் வைக்கும் அளவிற்கு, பிரம்மன் வடித்த காவியம் நீயடி என் செல்ல மகளே... கவிதைக்கு தனிப்பெயர் தேவையில்லை..., இருந்தாலும், எங்கள் வாழ்வை வசந்தமாக்கிய எங்கள் தேவதை தனித்து தெரியவே, இன்று முதல் நீ, பு.ரித்தன்யா என்று அழைக்கப்பட இருக்கிறாய் அன்பு மகளே..

எங்களின் மகாராணிக்கு பு.ரித்தன்யா என்ற பெயரை வைத்துள்ளோம் என்பதை என் அன்பு உறவுகளுக்கு தெரிவித்து கொள்கிறேன்" என பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் புகழ் தனது இன்ஸ்டாவில் மற்றொரு பதிவை நேற்று போட்டிருக்கிறார். அதில் ரித்தன்யா அப்பா என பெயர் பொரித்த டீசர்ட்டை அணிந்திருக்கிறார்.

அவர் அந்த பதிவில் கூறியிருப்பதாவது: என் நெஞ்சில் நீ நிறைந்திருப்பதற்கு உதாரணமாக உன் பெயர் பதித்த உடை... என் மகாராணியின் தந்தை என்பதிலேயே எனக்கு மகிழ்ச்சியடி... என் தங்கமே... என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் நடிகர் புகழின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+