Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தோழியால் புது அவதாரம் எடுத்த நடிகர் ரவி மோகன்.. கெனிஷாவுக்கு ஜிலீர்.. பெட்டியில் 100 கோடி?: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான சுஜாதா ஒரு பேட்டியில், அடங்கமறு, பூமி, சைரன் என மூன்று திரைப்படங்களை ரவி மோகனை வைத்து தயாரித்தேன். மூன்றும் தோல்வியடைந்தது. இதற்காக ரூ. 100 கோடி கடன் வாங்கினேன். அதில், 25 சதவீதத்தை ரவி மோகனுக்கு சம்பளமாக வழங்கினேன். இதற்காக அனைத்து ஆதாரமும் உள்ளது, பல கோடி ரூபாய் நஷ்டம் மற்றும் மன உளைச்சலை நான் மட்டுமே ஏற்றேன்" என்று மருமகன் ரவி மோகன் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், ரவிமோகன் புரொடக்‌ஷன் கம்பெனியை துவங்கியிருப்பது குறித்து பத்திரிகையாளர் உமாபதி கருத்து கூறியிருக்கிறார்.

நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகி 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.. தான் நடிக்க போகும் ஒரு படம், மற்றும் டைரக்ட் செய்யும் ஒரு படம் என 2 படங்களை எடுத்த எடுப்பிலேயே தயாரிக்க போகிறார் ரவி மோகன்.. இதற்கான துவக்க நிகழ்ச்சிதான் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

Television Kenisha Actor Ravi mohan

சிவகார்த்திகேயன், கார்த்தி

இந்த விழாவில், ரவி மோகனின் நெருங்கிய நண்பர் கார்த்தி, டைரக்டரும் அண்ணனுமான மோகன் ராஜா, ரவியின் அம்மா, எஸ்.ஜே. சூர்யா, சிவகார்த்திகேயன், ஜெனிலியா, இமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். ரவி மோகன் ஸ்டுடியோஸ் திறப்பு விழாவுக்காகவே மும்பையில் இருந்து சென்னை வந்திருந்தார் ஜெனிலியா. அவருடன் கணவர் ரித்தேஷும் வந்திருந்தார்,

வாழ்வின் ஒளி. கடவுள் தந்த வரம்

விழாவில் ரவி மோகன் பேசும்போது, கெனிஷா திடீரென எமோஷனல் ஆகிவிட்டார்.. கெனிஷா கடவும் கொடுத்த வரம் என்று ஜெயம் ரவி சொல்லவும், கீழே அமர்ந்திருந்த கெனிஷா நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டார்.. ஏற்கனவே நடந்த ஒரு விழாவில், கெனிஷாவை தன்னுடைய வாழ்வில் ஒளியாக வந்தவர் என்று ஜெயம் ரவி கூறியிருந்த நிலையில், நேற்றைய நிகழ்விலும் பெருமிதமாக பேசியிருந்தது அனைவரின் கவனத்தையும் பெற்றது.

பெட்டியில் ரூ100 கோடி

இந்நிலையில், Retroluxe என்ற யூடியூப் சேனலுக்கு, :"தோழியால் புது அவதாரம்" என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் உமாபதி பேட்டி ஒன்றை தந்துள்ளார்..

வாடகை வீட்டில் இருப்பதாகவும், வாடகைக்குகூட வழியில்லாமல் உள்ளதாம் ரவிமோகன் சமீபத்தில் பேசியிருந்தார்.. உண்மையிலேயே வாடகை கட்டக்கூட வழியில்லாமல்தான் ஜெயம் ரவி இருந்திருக்கிறார்.. ஆனால் வீட்டிலிருந்து ஒரு பெட்டி எடுத்து சென்றுள்ளார்.. அந்த பெட்டியில் அமெரிக்க டாலர்கள் இருந்துள்ளன.. அதனை தோழியுடன் சேர்ந்து எண்ணிப்பார்த்தபோது, கிட்டத்தட்ட ரூ.100 கோடி ரூபாய் இருந்ததாக தெரிகிறது.

தோழி கெனிஷா

இன்று மார்க்கெட்டில், ஒரு டாலர், 90 ரூபாய் வரை செல்கிறது.. அமெரிக்க டாலர் 100 டாலருக்கு மேல் அச்சடிக்க மாட்டார்கள்.. இப்போது இந்த பணம் ரூ.100 கோடி இருப்பதாக தெரிகிறது.. சேமித்து வைத்திருப்பார் போலும். இப்பணத்தை வைத்துதான் புரடக்‌ஷன் கம்பெனியை புதிதாக ரவி மோகன் துவங்கியிருக்கிறார்.

ரவி மோகனை பொறுத்தவரை, மிகவும் நல்ல டைப்.. மற்றவர்கள் போல கன்னிங் குணம் கிடையாது.. நல்ல ஜீவன்,, நல்ல மனிதரும்கூட.

இந்த நேரத்தில்தான் அவருக்கு தோழி கிடைத்தார்.. நிறைய தியானம், யோகா உள்ளிட்டவற்றை தோழி கற்றுக் கொடுத்தார்.. இதனால் உற்சாகமான ரவி, தன்னுடைய அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி நகர்ந்துள்ளார்.. படம் இயக்க சொல்லியும், தயாரிக்க சொல்லியும் தோழி உற்சாகப்படுத்தியிருக்கிறார்.. மாமியார் தந்த டார்ச்சரால், தோழியுடன் பபிள்காம் மாதிரி ஒட்டிக் கொண்டுள்ளார் ஜெயம் ரவி.. இன்று பிரிக்க முடியாத அளவுக்கு இவர்களின் நட்பு வளர்ந்துள்ளது..

எனினும் ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள ஜெயம் ரவி, தன்னுடைய இந்த புதிய முயற்சியில் வெற்றி பெற வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+