இரண்டாவது கல்யாணமும் நிலைக்கல.. இப்ப "அவருடன்" லிவ் இன் உறவு .. பூவே உனக்காக அஞ்சு அரவிந்த் எமோஷனல்
சென்னை: அந்த காலத்தில் செல்போன்கள் கிடையாது.. அதனால் நாங்கள் பிரிந்துவிட்டோம். இப்போது மீண்டும் ஒன்றுசேர்ந்துள்ளோம்.. பெங்களூரில் நான் நடத்தி வரும் டான்ஸ் பள்ளிக்கு, அஞ்சு அரவிந்த் அகாடமி ஆஃப் டான்ஸ் என்று அவர்தான் பெயர் வைத்தார்.. முதலில் ஐடி-யில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.. பிறகு அந்த வேலையை விட்டுவிட்டு, எழுதுவதில் கவனம் செலுத்தி வருகிறார்" என்று பூவே உனக்காக நடிகை அஞ்சு அரவிந்த் தன்னுடைய புதிய உறவை பற்றி கூறியிருக்கிறார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக படத்தில் நடித்தவர் அஞ்சு அரவிந்த்.. நந்தினி என்ற கேரக்டரில் அஞ்சு அரவிந்த் அதில் நடித்திருந்தார். இந்த படம் விஜய் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளியானது..

பாப்புலரான விஜய்
விஜய்க்கு பட்டிதொட்டியெங்கும் பெயரை தந்த படம் இதுவாகும்.. தொடர்ந்து கவர்ச்சி படங்களில் நடித்து கொண்டிருந்ததாக விஜய் மீது சில விமர்சனங்கள் அந்த நேரத்தில் எழுந்தபோது, முதல்முதலாக விஜய்யை வைத்து குடும்ப படத்தை தந்திருந்தார் விக்கிரமன்.. காதல் படங்களில் இன்றுவரை முக்கிய இடத்தை பெற்று வருகிறது... இப்போதுவரை பலருக்கும் ஃபேவரிட் படமாக உள்ளது.
இதில் நடித்திருந்த அஞ்சு அரவிந்த்துக்கும் நல்ல பெயர் கிடைத்தது.. இதைத்தொடர்ந்து உன்னருகே நானிருந்தால், வானத்தைப்போல, வாஞ்சிநாதன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.. இதற்கு பிறகு தமிழில் சரியாக வாய்ப்பு கிடைக்காமல், மலையாளத்தில் நடிக்க துவங்கினார்..
திருமணம் - விவாகரத்து
பிறகு தன்னுடைய மாமா தேவராஜன் என்பவரை கடந்த 2002ல் கல்யாணம் செய்து கொண்டார். எனினும் 2 வருடங்களில் வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார். பிறகு 2006ல் பெங்களூர் தொழிலதிபர் வினய் சந்திரன் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். ஆனால், கணவர் இறந்துவிட்டார்..
இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். சொந்தமாக டான்ஸ் கிளாஸ் ஒன்றை நடத்தி வரும் அஞ்சு அரவிந்த், சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இந்நிலையில், ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருக்கும் அஞ்சு அரவிந்த், பல்வேறு சொந்த விஷயங்களை மனம்திறந்து பேசியிருக்கிறார்.
2 திருமணங்கள்
அதில், "2 திருமண உறவுகளும் சோகத்தில் முடிந்துவிட்டன.. என்னுடைய முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. 2வது திருமணம் நடந்தது, ஆனால் என் கணவர் இறந்துவிட்டார். இப்போது லிவ்-இன் உறவில் இருக்கிறேன். எனக்கு துணையாக இருப்பவரின் பெயர் சஞ்சய் அம்பல பரம்பத். 5 ஆண்டுகளாக மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வருகிறோம். பெங்களூருவில் நடன டீச்சர் என்ற அடையாளத்தை எனக்கு தந்ததே சஞ்சய்தான்..
நான் 8ம் வகுப்பு படிக்கும்போது சஞ்சய்தான், எனக்கு முதல் காதல். அந்த காதல் கதையை ஒரு படமாகவே எடுக்கலாம்.. நாங்கள் 2 பேரும் சேர்ந்து 96 படத்தை பார்த்தோம்.. எங்களை அந்த படம் முழுமையாக ஈர்த்துவிட்டது.
பள்ளி நாட்கள் காதல்
அந்த படம் பார்க்கும்போதெல்லாம் என்னுடைய பள்ளி நாட்கள்தான் நினைவுக்கு வந்தது.. ஏனென்றால்., அவரும் ஒரு டான்சர்தான்.. நாங்கள் முதன்முதலில் சந்தித்து கொண்டதும் ஒரு நடன வகுப்பில்தான்.. அந்த காலத்தில் செல்போன்கள் புழக்கத்தில் இல்லை.. அதனால் நாங்கள் பிரிந்துவிட்டோம். இப்போது மீண்டும் ஒன்றுசேர்ந்துள்ளோம்..
பெங்களூரில் நான் நடத்தி வரும் டான்ஸ் பள்ளிக்கு, அஞ்சு அரவிந்த் அகாடமி ஆஃப் டான்ஸ் என்று அவர்தான் பெயர் வைத்தார்.. முதலில் ஐடி-யில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.. பிறகு அந்த வேலையை விட்டுவிட்டு, எழுதுவதில் கவனம் செலுத்தி வருகிறார்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications